என் மலர்
நீங்கள் தேடியது "விசைத்தறியாளர்கள்"
- அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
- விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
கோவை:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி விசைத்தறியாளர்கள் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோமனூரில் போராட்டத்தில் ஈடுபட்டு விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர் தரையில் அமர்ந்து விசைத்தறியாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் உங்களுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என கூறி தங்களது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் விசைத்தறியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
விசைத்தறியாளர்களின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.
எனவே விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போராட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது.
- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
சூலூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களுடனான நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முதல் விசைத்தறியாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சோமனூரில் நடந்த இந்த போராட்டத்தில், சோமனூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது. இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விரைவில் பிரச்சினையை முடித்து தர வேண்டும். தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் விசைத்தறி தொழில் அழிந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசைத்தறி தொழில் நசிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இன்று 2-வது நாளாக விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தால், ரூ.600 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசும், ஜவுளி உற்பத்தியாளர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால், தொழில் மேலும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
- கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.
இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது.
- கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
- உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்
நீலாம்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
- 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
நீலாம்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.
கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-
விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
- சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.
திருப்பூர்:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூரை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள், தொழில்துறை சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சர், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எவ்வித கட்டண குறைப்பும் இல்லாமல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய மின் கட்டணத்தை பார்த்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறு, குறு தொழில் முனைவோர் கூறியதாவது:-
பெரிய நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுடன் சேர்ந்து போராடி அரசிடம் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், 'ஜாப் ஒர்க்' மற்றும் கூலி அடிப்படையில் வேலை செய்யும் சிறு நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.
மின் கட்டண உயர்வால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு தொழில்துறையினரையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாரதிய கைத்தறி சங்க மாநில தலைவர் ஸ்ரீபாபுலால் பேசுகையில், ''பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும், 15 ஆண்டுகளில் கைத்தறி துணிகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
- ரயான் நூல், துணி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
- இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரயான் துணிகள் உற்பத்தியும், அதை மதிப்பு கூட்டிய துணிகளாக மாற்றி விற்பனை செய்வதும் அதிகம்.
அடுத்தபடியாக காட்டன் பாலீஸ்டர் துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.சமீப காலமாக இத்துணி களை டையிங், பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் செய்து முழுமையான ஆடையாக மாற்ற தேவையான அளவு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி இப்பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
இதனால் செலவு அதிகரிப்பதுடன் ரயான் நூல், துணி விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:
ஈரோடு, நாமக்கல் மாவட்ட பார்டர் பகுதியில் முழு அளவில் ரயான் துணிகள் உற்பத்தி ஆகி வந்தது. அவற்றை மதிப்பு கூட்ட செய்யும் சாய, சலவை, பிரிண்டிங், கேலண்டரிங் உள்ளிட்ட பணிகளுக்கான வசதி இங்கு குறைவு.
வெளிமாநி லங்களுக்கு அனுப்பி திரும்ப பெற செலவு அதிகமாகிறது.எனவே கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்றனர்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், ஆவத்திபாளையம் தார்காடு, வெளியரசம் பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்ற–னர்.
ரயான்நூல், உற்பத்தி கூலி, ரயான் துணிகளை மதிப்பு கூட்டிய பொருளாக்க ஆகும் செலவை விட கேரளா சேலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ரூபாய்க்கு மேல் குறைவு.
5 அல்லது 5.5 மீட்டர் கேரளா சேலைக்கு ஜருகை பார்டர் துணி 10 ரூபாய்க்குள் வாங்கலாம்.
ஒரு மீட்டர் உற்பத்திக்கு 40 ரூபாய் என 5 மீட்டருக்கு 200 ரூபாய்க்குள் அடக்க–லாம். 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 முதல் 100 ரூபாய் லாபம் நிற்கும். இதை மொத்தமாக செய்யும் போது வியாபாரிகளுக்கு சற்று குறைந்த விலையில் வழங்கலாம்.
இவற்றுக்கு சாய பிரிண்டிங் பணிகள் குறைவு. கிரே துணியாக ஒட்டி டை பயன்படுத்தாமல் தேவையான நிற ஜருகை பார்டரை இணைத்து விற்கலாம்.
தவிர பிற துணிகளை விட கேரளா சேலைகளுக்கு தற்போது ஆர்டர் அதிகம் வருவதால் அதனை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும்.
மங்கலம் :
கடந்த செப்டம்பர் மாதம் மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியது. குறைக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என திருப்பூர் ,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர்.
சமீபத்தில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 'விசைத்தறிக்கான 750 யூனிட் இலவசம் மின்சாரம் 1000 யூனிட்டாக வழங்கப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். இது விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கடந்த 4 மாதங்களாக விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்தவில்லை.
அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக கட்டணம் நிலுவையில் இருந்தும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.
இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- விசைத்தறி கூடம் ஒன்றுக்கு சராசரியாக 20 - 25 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வரும். 6 மாத மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. இத்துடன் செலுத்தாத தொகைக்கான அபராதமும் ஆயிரக்கணக்கில் வரும் என்பதால் ஒட்டுமொத்தமாக செலுத்துவது கடினம் என்றார்.
சோமனூர் விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி கூறுகையில்,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
- நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
- பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.
மங்கலம் :
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்த விசைத்தறிகளில் 90 சதவீதம் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி கிடைக்காமை, உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் அரசின் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரிடியாக வந்தது. இதனால் விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி அடைந்து மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிமொழி காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட விசைத்தறி யாளர்கள், மின் கட்டணத்தை குறைக்கும் வரையில் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என முடிவு செய்து, கடந்த 6 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- சாதா விசைத்தறிகளுக்கான 3 ஏ 2 டேரிப்புக்கு மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு.ஏற்கனவே தொழிலை நடத்த முடியாமல் நெருக்கடியில் உள்ளோம். அதனால் மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உத்தரவாதம் அளித்து பல மாதங்கள் ஆகிறது. இதுவரை சாதகமான அறிவிப்பு வரவில்லை. மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் மின் கட்டணம் செலுத்தாமல் எங்கள் போராட்டம் தொடரும்.
மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு விசைத்தறி கூடத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் சுமையாகும்.மின் கட்டணம் செலுத்தாத போராட்டத்துக்கு பிறகு கடந்த 6 மாதத்தில் ஒவ்வொரு குடோனுக்கும் 4 மின் கட்டண பில்கள் வந்துள்ளன. அதில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தற்போது சோமனூர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய் வரை மின் கட்டண பாக்கி உள்ளது. அதனால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் .
மங்கலம் :
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
இந்த அறிவிப்பு குறித்து மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் -கூறுகையில்
தமிழகத்தில் மார்ச்1-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் விசைத்தறிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்/ மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தியும் ,கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பதை 300 ஆக உயர்த்தியும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி , செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மா.சிவசாமி கூறுகையில்,இதன் மூலம் விசைத்தறித் தொழில் நல்ல நிலையில் சீரடைந்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
- மின்கட்டண சலுகை வழங்கிய முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
- பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.
மங்கலம் :
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நாளை கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி மற்றும் கைத்தறிகளுக்கு மின்கட்டண சலுகை வழங்கிய தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.இதில் தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலாளர் இரா.வேலுச்சாமி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் சித்தோடு கே.சுப்பிரமணியன், மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் மங்கலம் சங்க நிர்வாகி.சுல்தான்பேட்டை ஆர்.கோபால், தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் ஈரோடு.கந்தவேல் ,தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க தலைவர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
- மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
பல்லடம் :
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.
இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.