search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறியாளர்கள்"

    வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    பல்லடம்:

    தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழிலில் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது.

    இந்த நிலையில்,உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சனை, வங்கி கடன், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விசைத்தறி தொழில் ஏறகனவே நலிவடைந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த மே.22 முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக தினமும் ரூ 100 கோடி மதிப்பிலான காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது; நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை தவிர்க்கவும் குடோனில் துணி தேக்கத்தை கட்டுப்படுத்தவும் ஏதுவாக கடந்த மே 22ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி திருப்பூர்,கோவை மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பினரும் பாதிப்படைந்து இருந்தனர். இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதால் ஒரு சிப்ட் நேர துணி உற்பத்தியாவது மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்தோம்.

    விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று நாளை ( இன்று) ஜூன் 1ம் தேதி முதல் துணி உற்பத்தியை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம்.

    மேலும் காட்டன் நூல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் வங்காளதேசம், சீனா போன்ற நாடுகளுடன் தொழில் போட்டியை சந்திக்கும் வகையில் ரேயான், நைலான் போன்ற செயற்கை நூல்களை கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்வது என்றும் டிசம்பர் 30ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து ரக நூல்களுக்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விசைத்தறி ஜவுளி தொழில் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் உள்ளது.

    பல்லடம்:

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:-

    விசைத்தறி ஜவுளி தொழில் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் உள்ளது. ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சனை, தொழிலாளர்கள் பற்றாக்குறையில் சமாளித்து தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் நூல் விலை கடும் உயர்வு விசைத்தறி ஜவுளி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.

    ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் தருவதை நிறுத்திவிட்டனர். தற்போது சுமார் 40 சதவீதம் விசைத்தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். விசைத்தறி தொழிலை நம்பி வாங்கிய கடன்கள், வட்டி கட்ட முடியாத நிலையில் உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:-

    விசைத்தறி தொழில் ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனாஎன அடுத்தடுத்த சிக்கல்களால் நலிவடைந்துள்ளது. தொழிலை சரிவர மேற்கொள்ள முடியாமல் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வங்கியில் பெற்ற நகைக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கிடையே, ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் வருகின்ற நாட்களில், குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் செலுத்த வேண்டும். சீருடை, புத்தகங்கள் போன்ற செலவுகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, இந்த பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று விழிபிதுங்கி உள்ளோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை குறைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திருப்பூா் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 50 ஆயிரம் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.50 கோடி மதிப்பிலான 1 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. 

    ஒரு மீட்டா் துணி உற்பத்தி செய்ய ரூ.45 செலவாகிறது. ஆனால் ஒரு மீட்டா் துணி விற்பனை விலை ரூ.40 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது. மேலும் பஞ்சு, நூல் விலை உயா்ந்து தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கம் அடைந்துள்ளது.

    இது பற்றி கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-

    தொழிலாளா்கள் ஊதியம் அதிகரிப்பு, விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயா்வு ஆகிய சிரமங்களுக்கிடையே இத்தொழிலை நடத்தி வருகிறோம். மேலும் துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்தது. தொழிலாளா்களுக்கு வேலை தரவேண்டிய நெருக்கடி, வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை, வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

    நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலா் திவால் ஆகும் நிலையில் உள்ளனா்.

    அவா்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில் துறை வளா்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இடைதரகா் இன்றி ஜவுளி உற்பத்தியாளா்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளா்களுக்கு அரசு தங்கும் விடுதி அல்லது வீட்டுவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா்.

    ×