search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Key-weavers"

    • நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
    • சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூரை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள், தொழில்துறை சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சர், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எவ்வித கட்டண குறைப்பும் இல்லாமல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய மின் கட்டணத்தை பார்த்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சிறு, குறு தொழில் முனைவோர் கூறியதாவது:-

    பெரிய நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுடன் சேர்ந்து போராடி அரசிடம் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், 'ஜாப் ஒர்க்' மற்றும் கூலி அடிப்படையில் வேலை செய்யும் சிறு நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    மின் கட்டண உயர்வால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு தொழில்துறையினரையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாரதிய கைத்தறி சங்க மாநில தலைவர் ஸ்ரீபாபுலால் பேசுகையில், ''பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும், 15 ஆண்டுகளில் கைத்தறி துணிகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    • பல லட்சம் விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும்.
    • மின்துறை அமைச்சரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

     மங்கலம்:

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாதாரண விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கக்கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு முடிவின்படி கடந்த கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., முயற்சியால் தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து சாதாரண விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைத்து வழங்கி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தினோம்.

    மின்துறை அமைச்சரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். மின்துறை அமைச்சர் உறுதியின் பேரில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை மறு அறிவிப்பு வரும் வரை  செலுத்துவதில்லை என்றும், விசைத்தறியாளர்களுக்கு நல்லதோர் மறுஅறிவிப்பு வரும் வரை தமிழக மின்சார வாரியம் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், விசைத்தறியாளர்களையும், பல லட்சம் விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. 

    • ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
    • வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர்.

    மங்கலம்:

    தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு குறு தொழில் பிரிவிலிருந்து தனியாக பிரித்து, தனி வகைப்பாட்டில் மின் கட்டணம் (டேரிப்) நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு அனைத்து வகை பிரிவுக்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில் விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருகின்றனர். 5லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வரும் தொழிலாக விசைத்தறி தொழில் அமைந்துள்ளது.

    இத்தகைய விசைத்தறி உரிமையாளர்களுக்கு மின் கட்டண உயர்வு கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன், தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்படும் நிலை இருப்பதால் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

    இதில் 30 சதவிகித மின்கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 சதவிகித கட்டண உயர்வையும் முழுமையாக விலக்களித்து அறிவிக்கும் வரை 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர்.

    ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் உயர்த்தப்பட்ட கூலி உயர்வு அளிக்காததை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் 39 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த ஜூன் மாதம் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டில் 3-வது முறையாக வேலைநிறுத்தம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கானோரின் குடும்பங்களிலும் வேலை இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

    ×