search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity bill"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.
    • தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

    ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தட்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
    • கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். பொருளாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி தலைவர் ஜெயபாலன் , மாநில அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு தலைவர் தங்கராஜ், கௌரவ ஆலோசகர் சக்திவேல், உஜ்ஜையினி மாகாளியம்மன் திருப்பணிக்குழு செயலாளார் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு மலரின் முதல் பிரதியை வணிகப்பூஷனம் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் வெளியிட மாநில அமைப்பு தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து சேலம் நகர அனைத்து வணிகர் சங்கம் பொதுச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் வருகிற டிச ம்பர் மாதம் சுதேசி, தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்த வேண்டும். அதில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க வேண்டும். விதேசிகளை வளர்த்திடவும், சுதேசிகளை அழித்திடவும் முனைப்புடன் செயல்படும் தேச விரோத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மின் கட்டணம் உயர்வை குறைத்திட வேண்டும். தக்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வினை கைவிட வேண்டும் . ஒருங்கிணைந்த தென் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் . கடைகளில் மாமூல் கேட்பதும், மறுக்கும் கடை உரிமையாளர்களை தாக்குவதுமான செயலுக்கு கடை உரிமையாளர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் சமூக விரோதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து அந்நிய முதலீடு ஆன்லைன் வியாபாரத்தை தவிர்ப்போம். உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம். நம் கடைகளில் பொருட்களை வாங்குவோம் என்று வலியுறுத்தப்பட்டன.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் துரையரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    • மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

    ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.

    அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.

    இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஜகுலத்தோர் நலச்சங்கம் அறிவிப்பு
    • சலவைதுறை அருகே அரசு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க கூட்டம் பாரதி பூங்காவில் நடந்தது.

    மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் முத்தா பலராமன், பொருளாளர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பாகூர் சலவைதுறை அருகே அரசு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். திருபுவனை, கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம் சலவை துறைகளை புனரமைக்க வேண்டும். சலவை துறைகளின் வாடகை, மின் கட்டணத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வரும் அக்டோபர் 17-ந் தேதி உள்ளாட்சி துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்
    • அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.

    ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.

    இது குறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    பீக்ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும், இ-மெயில் அனுப்பி வருகிறோம். சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே, போராட்டம் நடத்துகிறோம்.

    இன்று திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது தொழில்துறையினரை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

    அப்படி இல்லாதபட்சத்தில் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
    • நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள், சிறு-குறு தொழில்களுக்காக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு ஏற்கனவே காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 9 மணி வரை என 6 மணிநேர மின்கட்டண உயர்வு வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 8 மணிநேரமாக உயர்த்தி மறுவரையரை செய்யப்பட்டிருக்கிறது. வரையரை செய்யப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் அமலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, தொழில் துறையினர் தங்களது உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தங்களது தயாரிப்புப் பொருட்களின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.

    இதனால் இத்தொழில் சார்ந்த துறையினர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு, தங்களது தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. எனவே தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இதேபோல் நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
    • தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு,

    ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print