search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டுகோள்"

    • 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன.
    • நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 66 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது தீப்பிடித்து எரியும் குப்பைகளால் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.

    அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்து செய்யப்படும். உயிரி அகழாய்வு திட்டம் சுற்றுச் சூழலை காக்கக் கூடிய திட்டம் என்றால், எரிஉலை திட்டம் அதற்கு நேர் எதிரான கேடுத்திட்டம் ஆகும். எனவே, கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழியக் குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நடப்பாண்டு சிறப்பு பட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 22-ந் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 31-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.487, மக்காச்சோளத்திற்கு ரூ.296, பருத்தி பயிருக்கு ரூ.484 தொகையினை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மட்டும் தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகளில் செலுத்தி பதிவு செய்யலாம்.

    பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை ரிஷிவந்தியம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீரில் இருந்து 2000 ரக நாற்றுகளை கொள்முதல் செய்து நடவு
    • நீலகிரி மாவட்டத்தில் காலா, ஜெரோமின், ஆப்பிள் ரகங்கள் விளைவதற்கு உகந்த சீதோஷ்ண சூழ்நிலை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் தேயிலைக்கு மார்க்கெட்டில் உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக மலைக்காய்கறி விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் அறைஹட்டி பகுதியை சேர்ந்த பத்மநாபன் மற்றும் ஒருசில விவசாயிகள் ஒருங்கிணைந்து காஷ்மீர் மாநிலத்தில் விளையும் காலா வகையை சேர்ந்த ஆப்பிள்களை பயிரிடுவதென முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சுமார் 2000 காலா ரக ஆப்பிள் மரநாற்றுகளை கொள்முதல் செய்தனர்.

    தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குக்குச்சி, கூக்கல்தொரை, கிண்ணக்கொரை, கூடலூர் ஆகிய பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. அவை தற்போது நன்றாக வளர்ந்து உள்ளன. அந்த மரங்களில் காஷ்மீரின் காலா வகை ஆப்பிள்கள் விளைந்து தொங்குகின்றன.

    இதுகுறித்து குன்னூர் விவசாயி பத்மநாபன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் சாகுபடிக்கு மாற்றாக காஷ்மீர் ஆப்பிள் வகைகளை சோதனை அடிப்படையில் விளைவிப்பதென முடிவு செய்தோம். அதன்படி காஷ்மீரில் இருந்து காலா வகை ஆப்பிள் இனத்தை சேர்ந்த 2000 நாற்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். அது தற்போது நன்றாக விளைந்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் காலா, ஜெரோமின், கோலட், கிங்ராட், ஹேடம் ஆகிய ஆப்பிள் ரகங்கள் விளைவதற்கு உகந்த சீதோஷ்ண சூழ்நிலை உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிள் உற்பத்தியை அதிகளவில் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும்.
    • சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்தி குறிப் பில் தெரிவித்துள்ளதா வது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநா ளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுற்றுச் சூழ லுக்கு அதிக மாசு ஏற்படுத் தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவ ளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. என்று கலெக்டர் தெரிவித்துள் ளார்.

    • முன்அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவுறுத்தல்
    • குறைந்த அளவில் மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதனை பின்பற்றி பொது மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    குறைந்த ஓலி மற்றும் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிப்பது மிகவும் நல்லது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மேலும் குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசு வெடிகளை அரசு அனுமதித்த நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
    • நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.

    அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது

    மேலும் பொதுமக்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடி முத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998(திருத்தப்பட்டது 2022)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், மனைப்பிரிவு, நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மேயர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • கொசு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்திதில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.

    கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை.
    • வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விட வலியுறுத்தல்

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், கமிஷனர் ஏகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நகரமன்ற உறுப்பினரும், நகர தி.மு.க செயலாளருமான ஜார்ஜ் பேசுகையில் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சியில் 7 வார்டுகளில் மட்டும் ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மற்ற வார்டுகளில் வேலை நடக்கவில்லை. எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியாக வளர்ச்சி பணிகளை பிரித்துக் கொடுத்து பணிகளை மேற்கொளள வேண்டும்.

    ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். படகு இல்லம் அருகே சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் நடைபெறும்.
    • வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.

    கோவை,

    வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்

    எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.

    18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கும், தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில், வழங்கி இந்த பணியை சிறப்பாக செய்து முடித்து தகவல்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×