search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar"

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
    • தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆதார் 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண்ணாகும்
    • மூடி'ஸ் நிறுவனம் ஆதாரமில்லாமல் கூறுவதாக இந்தியா தெரிவித்துள்ளது

    இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு தனிமனிதர்களின் கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளமும் இன்ன பிற விவரங்களும் சேகரிக்கப்படுவதால், ஒவ்வொரு குடிமகனின் அடையாள விவரங்களும் வேறு ஒருவருடன் ஒத்து போகாது.

    இத்தகவல்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் கட்டமைப்பான தனித்துவ அடையாள ஆணையத்தால் பாதுகாக்கப்படும். இந்த அடையாள எண் 12 இலக்கங்கள் கொண்டது.

    இந்நிலையில் உலகின் முக்கிய நிதி மற்றும் கடன் தரக்குறியீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி'ஸ் (Moody's) நிறுவனம், ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் மிகுந்த வானிலை சூழல் மிகுந்த ஊர்களில் நம்பத்தகுந்த வகையில் பயனாளிகளின் கைரேகை சரிபார்ப்பு முறை வேலை செய்யாது என தெரிவித்திருந்தது. மேலும், கூலி வேலை செய்பவர்களுக்கு பல சேவைகள் மறுக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. அனைவரது அங்க அடையாளங்கள், விரல் ரேகை, புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் ஒரே மென்பொருள் தொகுப்பில் இருப்பதால் பயனர்களின் தரவு விவரங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இதனை இந்திய அரசாங்கமும் ஆதார் தனித்துவ அடையாள ஆணையமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

    இது குறித்து இந்திய அரசு தெரிவித்திருப்பதாவது:

    சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஆதார் திட்டத்தை பாராட்டி வருகின்றன. பல நாடுகள் இதே முறையை தங்கள் நாட்டில் பின்பற்ற இந்தியாவின் உதவியையும், ஆலோசனையையும் நாடி வருகின்றன. தங்களின் கருத்துக்களுக்கு அவர்களின் அறிக்கையில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமோ அல்லது வேறு விவரங்களோ ஆதாரமாக மூடி'ஸ் நிறுவனம் வழங்கவில்லை. ஆதாருக்கான வலைதளத்தை மட்டுமே மேற்கோளாக அந்த அறிக்கையில் காட்டியுள்ளது.

    மேலும், பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க அவசியம் ஏற்படும் இடங்களில் பயனாளிகள் தொடுதல் முறை மூலமாக மட்டுமே சேவைகளை பெற வேண்டும் என்பதில்லை. கண் கருவிழி அல்லது முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது ஓடிபி எனப்படும் கடவுச்சொல் மூலமாகவோ சேவைகளை பெறலாம்.

    இந்திய பாராளுமன்றத்திலேயே இது குறித்த விவரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டது. கூலி தொழிலாளிகள் மற்றும் மானிய உதவிகள் பெறுபவர்கள் ஆதார் எண்ணை தர வேண்டிய அவசியமில்லாமல் தங்களுக்கு உரிய பணத்தையோ பிற சேவைகளையோ பெற்று கொள்ள முடியும்.

    இவ்வாறு இந்திய அரசாங்கம் பதிலளித்துள்ளது.

    • பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 4,831 விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவை யில் உள்ளது. எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    மேலும் 4,744 விவசாயி கள் தங்களது பயன்பாட்டி லுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பிரதமரின் விவசாயி களுக்கான நிதி உதவி திட்டத்தின் 14-வது தவணை தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைத்திட வேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலு வலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

    மேலும் அஞ்சல் அலுவல கங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.
    • கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    புதுச்சேரி:

    புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இந்த மாதம் வழங்க உள்ள 13-வது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பெறப்பட்ட தகவலின்படி, புதுவை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.

    அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்கி உதவித்தொகையை பெற இயலும். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் எந்திரம் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்னை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் வங்கி கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்க ப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பா லானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பி க்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி., நிறுவனம் மற்றும் எல்காட் சார்பில் இ -சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேவை மையங்களிலும் ஒரே மாதிரி சேவை அளிக்க உத்தரவிடப்பட்டது.பெரும்பாலான அரசு சேவைகள், இ-சேவை மையம் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது. போதிய சேவை மையங்கள் இல்லாததால் கூடுதல் சேவை மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அவ்வகையில் மாவட்டத்தில் 540க்கும் அதிகமான தனியார் இ-சேவை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் இ-சேவை மையத்தில், அரசு சேவைகள் முறையாக வழங்க மின்னாளுமை முகமை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகத்தில் மின்னாளுமை திட்ட அலுவலர் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம் தாலுகாவுக்கு காலையும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி தாலுகாக்களுக்கு மதியமும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மின்னாளுமை திட்ட முகமை மேலாளர் முத்துக்குமார், தனியார் இ-சேவை மையத்தினருக்கு பயிற்சி அளித்தார். சேவை மையம் அமைப்பது, அரசு வழங்கும் ரகசிய குறியீடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்துவது, மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரசு அறிவித்த கட்டணத்தில் சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விண்ணப்ப பதிவு விவரத்தை, விண்ணப்பதாரர் சரிபார்க்க வசதியாக சேவை மையங்களில் இரண்டு மானிட்டர் வசதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பான் கார்டுஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் ஜூன் 30-ந் தேதி இறுதி நாள். பான் கார்டு எண் வைத்திருப்போர், ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்காக வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.வரும் ஜூன் 30ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்துக்குள் சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்,லிங்க் ஆதார் என்ற இணைப்புக்குள் சென்று இணைப்பை சரிபார்க்கவோ, இணைக்கவோ செய்யலாம்.என ெதரிவிக்கப்பட்டுள்ளது.  

    • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

    இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

    மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

    இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

    மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

    • கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன' என்றார்.

    • புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நகராட்சி, கொம்யூன் சட்டத்தில் உள்ளாட்சி துறை திருத்தங்களை செய்துள்ளது.

    கடந்த ஜனவரியில் புதுவையின் 30 தொகுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதை வார்டுவாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.

    இதற்காக படிவம் 20-ஐ உள்ளாட்சித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இடமாறுதலுக்கும் ஆதார் எண் கோரப்படும். புதுவையில் 74.61 சதவீதத்தினர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.

    ஆனால் மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆதார் எண் வழங்க சட்டத்தில் இடமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் மீண்டும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வேண்டிய நிலை உள்ளது.

    மத்திய, மாநில தேர்தல் ஆணையம் இணைந்துசெயல்பட்டால் இந்த பணிகள் எளிதாகும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களின் குடிநீர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்திராஜ் கூறுகையில் "கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் நடப்பு ஆண்டு குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிர்க்க இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் பொதுமக்கள் கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×