search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Consumer"

    • திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது

    திருப்பூா்

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.
    • குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சார்பில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் மின் நுகர்வோர்களின் மின் தொடர்பான குறைகளை மின் பொறியாளர் நேரில் ேகட்டறிகிறார்.எனவே மின் நுகர்வோர் தங்களது மின் தொடர்பான குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் வருகிற 16-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சியம்மன் கோவில், மாகாளிப்பட்டி, திருமலைநாயக்கர் மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • மின் வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மதுரை

    உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் நாளை (31-ந்தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

    இதில் செயற்பொறியாளர் மங்களநாதன் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

    இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தலைமை வகித்தார். இதில் மின் நுகர்வோர்களிடம் இருந்து மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பெயர் மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் செயற்பொறியாளர் ராமசந்திரன் உள்ளிட்ட மின் வாரிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம்.
    • மின் இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    சொத்து வாங்கிய உரிமையாளர், தங்கள் பெயருக்கு மின் இணைப்பை மாற்றாமல் இருந்தாலும், புதிய உரிமையாளரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும், சிறப்பு முகாம்கள் நடத்திட மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை (15-ந் தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலமாகவோ மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். ேமற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×