என் மலர்
நீங்கள் தேடியது "grievance meeting"
- நாளை நடக்கிறது
- குறைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத் தில் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துகொண்டு, விவ சாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. விவ சாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதார ருக்கு உடனடியாக ஒப்புகைச்
சீட்டும் வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் 269 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த 269 மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.
மனுதாரரின் முன்னி லையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்பு டைய அலுவலர்களிடம் மனு க்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது.
எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.
- மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது .இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
- பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
- தையல் எந்திரங்களை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுசெய்த உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட விவசா யிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கைமேற்கொள் ளப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். இத்தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள் ளார்.
- குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு
- வேலூரில் லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர்.
அதில் வேலூர் டவுன் சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், காகிதப்பட்டறை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது.
கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் கூலி தொழிலாளர் வாழ்வாதாரம் கெடுகிறது. லாட்டரி விற்பனை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர்.
அதில் பரதராமி இந்திரா நகரில் நத்தம் நிலம் உள்ளது. இந்த இடத்தை மாடி வீடு உள்ளவர்களும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் இலவச பட்டா வாங்கியதாக கூறி ஆக்கிரமிப்பு செய்ய பார்க்கிறார்கள். இதில் தீர விசாரித்து அந்த இடத்தை அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதேபோல் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
- கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
- 525 மனுக்கள் பெறப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதி யோர் உதவித்தொகை, கூட் டுறவு கடனுதவி, மாற்றுத்திற னாளிகள் நலத்திட்ட உதவி கள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 525 மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.
பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள், சம்பந்தப்பட்டதுறை அலுவ லர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட பொதுச்செய லாளர் புருஷோத்தமன் அளித்துள்ள மனுவில் மாவட் டத்தில் தென்னை விவசாயம்' அதிக அளவில் உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு ஊக்கமுட்டும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந் தார். இதேபோல் மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்றதுணை தலை வர் கீதா அளித்துள்ள மனு வில் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடு நடைபெறு கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஊராட்சியில் முறை கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து கூட் டத்தில் 5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தொகுப்புகள், தசைசிதைவு நோயினால் பாதிப்படைந்த புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாண வன் கோகுலுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவற்றை கெலெக்டர் வழங் கினார்.
முன்னதாக சர்வதேச பெண்களுக்கு எதிரான வன். முறைகளை ஒழிக்கும் தின உறுதிமொழியினை கலெக் டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத் துக் கொண்டனர்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தோறும் மனுகொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் உட்காருவதற்கு நாற்காலி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மனுவை கொடுத்து பதிவு செய்ய நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். கூட்டம் அதிகமானால் பொதுமக்கள் அம ருவதற்கு போடப்பட்டிருந்து ஒருசில இருக்கைகள் முழுவதும் நிரம் பியது. கூடுதலாக நாற்காலிகள் இல்லாததால் மனுகொடுக்க வந்த பெண்கள் பலர் நீண்ட நேரம் தரையில் அமர்ந்து இருந்தனர்.
குறைகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத குறைகளை யாரிடம் தெரிவிப்பது என தவித்தனர்.
- விவசாயிகள் வேதனை
- குறைவான அளவிேலயே பங்கேற்றதால் கூட்டம் வெறிச்சோடியது
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான குறைத் தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2-ம் வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
அவ்வாறு நடைபெறும் குறைதீர்வு கூட்டத்திற்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, பொதுப்பணி துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை உட்பட 19 துறை அலுவலர்களுக்கும் விவசாயிகள் குறைப்பு தீர்வு முகாமில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு, தகவல் தெரிவிக்கும்போது விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால், அணைக்கட்டு தாசில்தார் அலுவலகத்தின் மூலம் ஒரு சில விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் குறை தீர்வு கூட்டம் குறித்து ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகம் வாரியாக நோட்டீஸ் ஒட்டியும் விவசாயிகளுக்கு குறை தீர்வு கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், விவசாய குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தகவல் தெரிந்து. விவசாயிகள் தாங்களாக சென்றாலும் கூட குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மூலம் தெரிவிக்கப்படும் குறைகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தாலுகா அளவில் நடைபெறும் விவசாயக் குறை தீர்வு கூட்டம் பெயர் அளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களிலாவது அரசு அலுவலர்கள் விவசாய குறை தீர்வு முகாமினை விவசாயிகள் பயன்பெறும் அளவிற்கு நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நேற்று நடைபெற்ற விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குறைந்த அளவே வருகை புரிந்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அரசு அலுவலர்களும் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருகை தராமல் புறக்கணித்திருந்தனர்.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
- ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மண்டல வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களது குறைகளை அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
- 45 மனுக்கள் பெறப்பட்டன
ஆரணி:
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.
அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எனது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவ லக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் பழைய ஆவணங்கள் வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வரு கிறது, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத் தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வருவாய்த்துறைக்கு சம்பந்தமான பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், முதியோர் உதவித்தொகை, ஆற்று பாசன கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட 45 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.