search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance meeting"

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கை களையும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    கும்பகோணம்:

    கும்போணத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இக் கூட்டத்தை மேற்பார்வை பொறியாளர் நளினி நாளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தவுள்ளார்.

    இதில் கும்பகோணம் நகரம், கும்கோணம் புறநகர், பாபநாசம் நகரம், பாபநாசம் புறநகர், கபில்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர் கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
    • ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    காங்கயம் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காங்கயம் கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசின் விதிகளின் படி அரசாங்க கடிதங்கள் அரசு துறை நிறுவனமான இந்திய தபால் துறை மூலமாக தான் அனுப்ப வேண்டும். ஆனால் திருப்பூர் மின்சார வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அதிகாரிகள் தனியார் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பி வருவது சட்டவிரோத செயலாகும். சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் உரிய தீர்வுகாண வேண்டும். புகார் மனுக்களை கிடப்பில் போட்டு தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமான செயலாகும். தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைத்தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதில் சமூக ஆர்வலர்கள் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் திண்டு க்கல் மேற்கு வட்ட த்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பய ன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரை த்தனர்.சமீப காலமாக விவசாய நிலங்களுக்குள் யானைகள்,காட்டுப் பன்றிகள் புகுந்து பண பயிர்களை அழித்து வருவதாகவும் இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    மேலும் சமீப காலமாக பேரிக்காய், ப்ளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதையும் இவ்வகை விவசாயத்தில் நோய் தாக்குதல் அதிகரி த்துள்ளதையும் இதனை ஆய்வு செய்து பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல்களை கூட்டுவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வும் கேட்டுக் கொண்டனர்.விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.கிராமப் பகுதி களில் கேஸ் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்க ப்படுவ தாகவும், மேல்மலை பகுதிகளில் விவசாயப் பகுதிகள் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்கவும்,சாலைகளை சீரமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர்.

    பெருமாள் மலை பகுதியில் இருந்து கொடை க்கானல் வரை நெடு ஞ்சாலைகளில் ஆக்கிர மிப்புகள் அதிகரித்துள்ள தாகவும் இதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

    • மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்ைவ பொறியாளர் சார்பில் வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிகிறார். எனவே மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை யின்படி திருநங்கைகளு க்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட ப்பட்டது.

    அதன்படி திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். வீட்டு மனை, கல்வி கடன், அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.டி.ஓ.க்கள் சுதாகரன் சாந்தி முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தாசில்தார் வேண்டா கூறுகையில்:-

    உங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

    இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
    • காங்கயம் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இதுபோல் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை காங்கயத்தில் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
    • 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங் குல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உத வித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமருமி டத்திற்குச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந் தப்பட்ட துறை அலுவலர்க ளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மினி டைரி தொழில், ஆடு வளர்ப்பு தொழில்களுக்காக 33 பயனாளிகளுக்கு ரூ.26.90 இலட்சம் மானியத்தொ கைக்கான காசோலைக ளையும், மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்க ளையும்,

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், தனித் தணை ஆட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் கூடு தல் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணி வண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×