search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் கூட்டத்தில் உடனடி தீர்வு
    X

    குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    குறைதீர்க்கும் கூட்டத்தில் உடனடி தீர்வு

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • தையல் எந்திரங்களை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுசெய்த உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×