search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "proceedings"

    • நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமால் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்க வேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    • பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது::- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை யும், நீர்நிலைகளில் குளிப்ப தையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04142 - 220700 04142 - 23393 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.
    • ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,08,000 மதிப்பீட்டிலும் மற்றும் மாற்றுத்திறனாளியின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் பல்வேறு வட்டங்களை சார்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ராஜ வேணி, ஆணையாளர் செந்தாமரை செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவா தங்கள் வரு மாறு:- கவுன்சி லர் ராஜ்குமார்:-வெண்ணத்தூர் ஊராட்சி முத்த ரவு நாதபுரம் கிராம கண்மா யில் தேவி பட்டி னம் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயில் கொட்டாமல் மாற்று இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் மனோ கரன்:-கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேராவூர் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படை கின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆணை யாளர்:- கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலக ராணி, சீனி இப்ராஹிம் அம்மாள், மாணிக்க சாரதி, கல்பனா தேவி, பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனை த்து த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில்; பட்டா தொடர்பான 93 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 46 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொட ர்பாக 39 மனுக்களும், வேலை வாய்ப்பு தொட ர்பாக 26 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 52 மனு க்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 25 மனுக்க ளும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 64 மனுக்களும், இதர மனுக்கள் 285 ஆக மொத்தம் 630 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளு க்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்ப ட்டு விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என கலெக்டர் அலுவல ர்களுக்கு உத்தர விட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீதான விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதி உதவி 15 நபர்களுக்கு தலா ரூ.17000-க்கான காசோலையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில் அரசு ஒதுக்கீடு செய்த எல்.இ.டி லைட்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பணி நடைபெறாமல் இருப்பது ஏன் என்றார்.

    ஓவர்சீஸ் எல்.இ.டி லைட் பொருத்தும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தலைவர் சுந்தரலிங்கம் எல்.இ.டி லைட்கள் பொருத் தம் பணியை விரைவு படுத்த வேண்டும் என அதி காரியிடம் கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் முத்தழகு பேசுகையில் கருதாவூரணி கடந்த காலங்களில் நகராட்சி மூலம் மீன்கள் வளர்க்கப் பட்டு அவை குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கழிவுநீரால் ஊரணி மாசு அடைந்துள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம் கடந்த நகர மன்ற கூட்டத்தில் கருதாவூரணி சுத்தம் செய்யப்பட்டு பழைய பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். கவுன்சிலர் அய்யப் பன் ஆணையாளர் பொறி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படு கிறது. தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதை தீர்மானங்கள் ஏற்றி அனைவரும் உயர் அதிகாரிகளை சந்திப்போம்

    துணைத்தலைவர் ரமேஷ் மாநகராட்சிகளை விட இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. வரி விதிப்பு மண்டலங்களை மறு ஆய்வு செய்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் இடைத்தரகர்கள் நகராட்சியில் அதிகரித்து வருகிறது என்றார். தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    2 பெண் பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து வாழ்வதாக கலெக்டரிடம் தாய் மனு

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இ

    ன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் பெரிய காப்பான்குளம் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி கற்பகம். தனது 2 மகள்களுடன் பள்ளிச் சீருடையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எனது கணவர் அருள்தாஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை வீட்டில் இருக்கக் கூடாது என கூறி மிரட்டி வருகின்றார். இதன் காரணமாக நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றோம். இது தொடர்பாக மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கும், எனது மகள்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்கும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்  இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் சாவு.
    • மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவரது மகன் சரவணன் (வயது 25).  டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்துள் ளார். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு துபாயில் உள்ள அஜ்மன் பகுதியில் உள்ள நிறுவனத்திற்க்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றார்  இவர் அவ்வப்போது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

      இந்நி லையில் நேற்று இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்ட நபர் சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் செய்வது அறியாமல் கதறி அழுதனர். இதுகுறித்து சரவணனின் பெற்றோர் கூறுகையில், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நிறுவத்தினர் கூறுகின்றனர். எனது மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்  வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்வி கடன் என பல கோரிக்கை மனு பெறப்பட்டது.
    • உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது :-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் வருவாய் துறை சார்பில் ஓரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் 269 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த 269 மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    மனுதாரரின் முன்னி லையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்பு டைய அலுவலர்களிடம் மனு க்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது.

    எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரச நடவடிக்கைகளில் நீதிபதிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். இந்த முகாமில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.

    இந்த முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கி சாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் வழக்கு முறையிட்டார் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் நடவடிக்கைகளில் நீதிபதிகளை ஈடுபட்டனர். அதில் 1443 மனுக்களுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வழக்குகள் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835க்கான சமரசத்தொகை தொகை முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

    ×