search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற காட்சி.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனை த்து த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில்; பட்டா தொடர்பான 93 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 46 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொட ர்பாக 39 மனுக்களும், வேலை வாய்ப்பு தொட ர்பாக 26 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 52 மனு க்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 25 மனுக்க ளும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 64 மனுக்களும், இதர மனுக்கள் 285 ஆக மொத்தம் 630 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளு க்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்ப ட்டு விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என கலெக்டர் அலுவல ர்களுக்கு உத்தர விட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×