search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CITY COUNCIL MEETING"

    • ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பு செய்ய ரூ.95 ஆயிரத்துக்கு அனுமதி கோருவது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கோமதி உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
    • குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார்.

    ஆணையர்(பொ) ஹேமலதா, பொறியாளர் சித்ரா, நகரமைப்புஆய்வாளர் மரகதம், மேலாளர் காதர்கான், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தல் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    சாமிநாதன் (திமுக):

    கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் கடந்த 6மாதம் முன்பு வாங்கிய நிலையில் வேறொரு இயந்திரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்றார்.

    ரமாமணி (அதிமுக):

    சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்திட வேண்டும்.

    வள்ளி (திமுக)பேசுகையில்:

    எனது வார்டில் இருவரை நாய்கள் கடித்துவிட்டது.

    நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ரம்யா(திமுக):

    17-வது வார்டில் தற்போது 1மின்விளக்கு மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும். 4மின் பம்புகள் பழுதாகியுள்ளது என்றார்.

    தேவதாஸ் (திமுக):

    9-வது வார்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

    குளத்தின் சறுக்கல் பக்கவாட்டில் கல் பதிக்காததால் மண் சரிந்து பாதிக்கப்படும்.குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    மேல்பூச்சு சிதிலமடைந்துள்ளதால் பணியாளர்கள் உள்ளே இறங்க அஞ்சுகின்றனர்.

    மினிபம்பு அமைத்துதரவேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கிய அரசுக்கு நன்றி என்றார்.

    வேல்முருகன்(பாமக):

    மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை நிருபயா வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கியதுபோன்ற கடுமையான தண்டைனை வழங்கவேண்டும்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டனம் தெரிவிக்கிறோம். தென்பாதி பயணியர் விடுதி அருகே புதிதாக கல்வெர்ட் அமைத்துதரவேண்டும் என்றார்.

    தலைவர் துர்காராஜசேகரன்:

    மாமிச கழிவுகள் கொட்டும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

    17-வது வார்டில் பள்ளி கட்டடம் கட்ட அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்டு அனுமதி பெற காத்திருப்பில் உள்ளது மணிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்றார்.

    • தேவகோட்டையில் நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில் அரசு ஒதுக்கீடு செய்த எல்.இ.டி லைட்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பணி நடைபெறாமல் இருப்பது ஏன் என்றார்.

    ஓவர்சீஸ் எல்.இ.டி லைட் பொருத்தும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தலைவர் சுந்தரலிங்கம் எல்.இ.டி லைட்கள் பொருத் தம் பணியை விரைவு படுத்த வேண்டும் என அதி காரியிடம் கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் முத்தழகு பேசுகையில் கருதாவூரணி கடந்த காலங்களில் நகராட்சி மூலம் மீன்கள் வளர்க்கப் பட்டு அவை குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கழிவுநீரால் ஊரணி மாசு அடைந்துள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம் கடந்த நகர மன்ற கூட்டத்தில் கருதாவூரணி சுத்தம் செய்யப்பட்டு பழைய பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். கவுன்சிலர் அய்யப் பன் ஆணையாளர் பொறி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படு கிறது. தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதை தீர்மானங்கள் ஏற்றி அனைவரும் உயர் அதிகாரிகளை சந்திப்போம்

    துணைத்தலைவர் ரமேஷ் மாநகராட்சிகளை விட இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. வரி விதிப்பு மண்டலங்களை மறு ஆய்வு செய்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் இடைத்தரகர்கள் நகராட்சியில் அதிகரித்து வருகிறது என்றார். தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
    • அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

    இதில் திமுகவை சேர்ந்த ஏ.சி மணி என்பவர் நகர மன்ற தலைவராகவும் நகர மன்ற துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த பாரி பாபு என்பவரும் உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    நேற்று ஆரணி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டம் நகர மன்றத் தலைவர் ஏ.சி மணி தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அதிமுக கவுன்சிலர் பேசியாதவது : மக்களின் பிரச்சனையை எடுத்துரைப்பதற்கு மாதம் மாதம் நடைபெற வேண்டிய நகர மன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவதால் மக்களின் பிரச்சினையை நகர மன்ற கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை என்று நகர மன்ற உறுப்பினர் குற்றசாட்டினார்

    இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் ராஜ விஜய காமராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    • உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா்.

    குன்னூர்,

    குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஷீலா கேத்தரின் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில், குன்னூா் உழவா் சந்தை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து தி.மு.க.வினா் கேள்வி எழுப்பினா். இதற்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதற்கு கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வருத்தம் தெரிவித்தாா்.

    நகா் மன்ற உறுப்பினா் ராமசாமி (திமுக) பேசுகையில், உழவா் சந்தை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள 6 மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா். ஆனால் அங்கு நன்றாக இருந்த மரங்களும் சோ்த்து வெட்டி கடத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினாா்.

    இது தொடா்பாக திமுக-அதிமுக உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    பின்னா் நகராட்சித் தலைவா் ஷீலா கேத்தரின் பேசியதாவது:-

    கடந்த மாதம் கூட்டம் நடந்தபோது நகராட்சி ஆணையா் பாதியில் எழுந்து சென்று விட்டாா். இந்த மாத கூட்டத்தில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் வருத்தம் தெரிவிக்கிறாா். தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படும் நகராட்சி ஆணையா் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா்.

    • நகர சபை கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தல்
    • பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவதம் வருமாறு:-

    பொன். ராஜசேகர்:-

    ஆற்காடு நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தீர்கள். சில நாட்களிலேயே அந்தக் கடை மீண்டும் திறக்கப்பட்டன. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நகராட்சி அதிகாரிகள் வார்டுக்கு சென்று பார்வையிடுவதில்லை.

    சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:-

    பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ரவிச்சந்திரன்: கடந்த ஒரு வாரமாக என்னுடைய வார்டில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. காய்கனி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரையாக சிமெண்டு சீட்டுதான் போட வேண்டும். ஆனால் இரண்டு கடைகளுக்கு மட்டும் மேல் தளம் போடப்பட்டுள்ளது. யார் அனுமதி அளித்தது.

    ஏற்க முடியாது

    உதயகுமார்:-

    என்னுடைய வாட்டில் தெருக்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் படி சென்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். இதுவரை அகற்ற வில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால் எந்த பணிகளும் செய்வதில்லையா.

    நகர மன்ற தலைவர்

    அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரி நினைத்துதான் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்.

    நகர மன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் தங்கள் வார்டில் உள்ள குறைகளை பதிவு செய்கிறீர்கள். அதனை ஏற்க முடியாது. முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்வம்:-

    எனது வார்டில் புதியதாக குழாய் இணைப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டு, டெபாசிட் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் பணியை உடனடியாக செய்து தர வேண்டும்.

    துர்நாற்றம்

    லோகேஷ்:-

    வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர். குப்பை வண்டிகள் வராததால் அதை வீட்டிலேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    கீதா சுந்தர்:-

    சீரமைக்கப்பட்ட பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வார்டு உறுப்பினர் எனது பெயர் இல்லை. அதில் நகர மன்ற உறுப்பினர் பெயரை எழுத வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக தலைவர் உறுதி
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் சுஜாதா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வார்டு 1 முதல் 30 வரை உள்ள தெருவிளக்குகளை மின்சார சிக்கன நடவடிக்கையாக எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைக்க மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் 1,835 விளக்குகள் ரூ.262.33 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண். 145, நாள் 14-10-2022 அரசாணை வெளியிட்டுள்ளதை தொடர் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் கடிதம் அனுமதி அளித்து வரப்பெற்றுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் 11 வார்டுகளில் பல லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சிறுபாலம் மழை நீர் வடிகால்வாய், நீர்மூழ்கி மின்மோட்டார்கள் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றுவது என்பது உள்பட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் தி.மு.க.நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

    • பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி கூட்டம் நகர தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் கலாவதி அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி தங்கள் வார்டுகளில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றப்பட வேண்டும்.மின்விளக்குகள் எரியவில்லை. எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றம் சாட்டினர்.

    25 வார்டு உறுப்பினர் துரை சீனிவாசன் தன்னுடைய வார்டில் ரேஷன் கடை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.

    33வது வார்டு கவுன்சிலர்

    பர்கத் பாட்டிலில் நகராட்சி விநியோகம் செய்கின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் கூறினார்.

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • ஆம்பூர் நகர சபை கூட்டத்தில் பரபரப்பு

    ஆம்பூர், ஆக.19-

    ஆம்பூர் நகராட்சி கூட்டம் தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    நகராட்சி கூட்டம்

    கூட்டத்தில் பொதுநிதி செலவினங்கள் நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.

    மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    5-வார்டு திமுக கவுன்சிலர் வசந்தராஜ் பேசுகையில்:- ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் குப்பை காடாக திகழ்கிறது குடிநீர் கலங்கனாக வருகிறது இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட்டு வருகிறது.

    தூய்மையை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ஆம்பூர் பாலாற்றில் குப்பைகளை கொட்டுகிறது என்றார்.

    மலைபோல் குப்பைகள்

    13-வது வார்டு திமுக கவுன்சில் ரமேஷ் பேசுகையில்:- ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் தனி நபர் ஒருவர் நகராட்சி ஆணையாளர் கையொப்பமிட்ட ரசீது வழங்கி சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளார்.

    இதன் மூலம் நகராட்சிக்கு ரூ. 10 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர் உடனடியாக தலையிட்டு போலி பில் மூலம் வசூல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    12-வது வார்டு பாஜக கவுன்சில் லட்சுமி பிரபா அன்பு பேசுகையில்:- எனது வார்டில் குப்பைகள் மழல போல் கிடக்கிறது. குப்பைகளை அகற்ற வேண்டும் என்றார்.

    10-வது வார்டு திமுக கவுன்சில் இம்தியாஸ் அகமது பேசுகையில்:- ஹவுசிங் போர்டு பகுதியில் அங்கன்வாடி மையத்தில் சுகாதார சீர்கேடு காரணமாக 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது.

    உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது உறுதி அளித்தார்.

    நகராட்சி ஆணையாளர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நகரசபை கூட்டம் ஏமாற்றத்தை அளிக்கிறது.
    • அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார் கமிஷனர் லதா மற்றும் துணைத் தலைவர் கலாவதி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் பாபு 36 வார்டுகள் இன் உறுப்பினர்கள் வாட் ஏன் வரிசைப்படி அமர்வதற்கான இருக்கைகள் நகர மன்ற கூட்டத்தில் இல்லாததால் யார் எங்கே அமர்வது என்று குழப்ப நிலை ஏற்படுகிறது.

    மேலும் அவரவர் தங்கள் வார்டுகளில் நிலவி வரும் குறைகளை சொல்வதற்கு வாய்ப்புகள் தவறுகின்றது இதை பலமுறை சொல்லியும் செய்யாமல் எழுத்தடிப்பதாக கூறி அதிமுகவினர் நகர நகர மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இருக்கைகள் சரிவர இல்லாததால் மேஜையின் மேல் அமர்ந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதனால் நேற்று திமுக மற்றும் அதிமுக உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

    இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக கமிஷனர் லதா மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி முயற்சி மேற்கொண்டனர்.

    பல தொடர்ந்து வாக்குவாத நடைபெற்று வந்ததால் இதனை தொடர்ந்து கூட்டம் முடிவு பெற்றதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இதனால் நகர மன்ற கூட்டத்திற்கு தங்கள் பகுதியில் நடைபெறும் குறைகளை கூற வந்த வாடு உறுப்பினர்கள் அரக்கோணம் நகர மன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் ஏதோ ஒரு பிரச்சனை கூறி கூட்டத்தை முடித்து விடுகின்றனர்.

    இதனால் தங்கள் வாடுகளில் இருக்கும் குறைபாடுகளை கேட்டு அது தீர்வு காண முடியாமல் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றோம் என்று வார்டு உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.

    ×