search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாட்ஸ்-அப்பில் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்க முடியாது
    X

    ஆற்காடு நகர சபை கூட்டம் நடந்த காட்சி.

    வாட்ஸ்-அப்பில் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்க முடியாது

    • நகர சபை கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தல்
    • பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவதம் வருமாறு:-

    பொன். ராஜசேகர்:-

    ஆற்காடு நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தீர்கள். சில நாட்களிலேயே அந்தக் கடை மீண்டும் திறக்கப்பட்டன. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நகராட்சி அதிகாரிகள் வார்டுக்கு சென்று பார்வையிடுவதில்லை.

    சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:-

    பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ரவிச்சந்திரன்: கடந்த ஒரு வாரமாக என்னுடைய வார்டில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. காய்கனி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரையாக சிமெண்டு சீட்டுதான் போட வேண்டும். ஆனால் இரண்டு கடைகளுக்கு மட்டும் மேல் தளம் போடப்பட்டுள்ளது. யார் அனுமதி அளித்தது.

    ஏற்க முடியாது

    உதயகுமார்:-

    என்னுடைய வாட்டில் தெருக்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் படி சென்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். இதுவரை அகற்ற வில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால் எந்த பணிகளும் செய்வதில்லையா.

    நகர மன்ற தலைவர்

    அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரி நினைத்துதான் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்.

    நகர மன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் தங்கள் வார்டில் உள்ள குறைகளை பதிவு செய்கிறீர்கள். அதனை ஏற்க முடியாது. முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்வம்:-

    எனது வார்டில் புதியதாக குழாய் இணைப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டு, டெபாசிட் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் பணியை உடனடியாக செய்து தர வேண்டும்.

    துர்நாற்றம்

    லோகேஷ்:-

    வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர். குப்பை வண்டிகள் வராததால் அதை வீட்டிலேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    கீதா சுந்தர்:-

    சீரமைக்கப்பட்ட பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வார்டு உறுப்பினர் எனது பெயர் இல்லை. அதில் நகர மன்ற உறுப்பினர் பெயரை எழுத வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×