என் மலர்
நீங்கள் தேடியது "Namakkal District News"
- அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்கு மார் (20), முரளி தரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
- சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்குமார் (20), முரளிதரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
கிரேன் மோதியது
நேற்று இரவு பிரேம்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர முரளிதரன், அஜய் ஆகியோர் பின்னால் உட்கார்ந்து வந்தனர். இவர்கள் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த 3 பேரும் பலத்த காய மடைந்த னர். இதை யடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கிரேன் டிரைவரான குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த குமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
- தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
அதையொட்டி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி மாநில அளவிலான வளர் திறன் தேர்வு நிலை 1 தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
7 மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி, டிரினிடி மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது.
இதில் 4,552 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மாநில அளவிலான தேர்வை அடுத்து தேசிய அளவிலும் அதையடுத்து சர்வதேச அளவிலும் வளர் திறன் தேர்வுகள் நடத்தப்படும்.
வளர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்றால் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகையும் கிடைக்கும் என உயர் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
- பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
- இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதித்தவர்
இதில் இறந்து கிடந்தவர் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் உள்ள வேஷ்டி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் மனநலம் பாதித்தவர் என்றும் கூறப்படுகிறது.
பாலமுருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை?
இதனிடையே பாலமுரு கனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ததற்கான அடையாளம் இல்லை. மேலும் அங்கு ரத்தம் சிதறி கிடந்த விதத்தை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாலமுருகன் எவ்வாறு இந்த பகுதிக்கு வந்தார்? அவரை யாராவது இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? அவர் எதற்காக கொலை செய்யப் பட்டார்? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
- இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ. 24 முதல் 36, தக்காளி - ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் - ரூ. 20 முதல் 25, அவரை - ரூ.40 முதல் 50, கொத்தவரை - ரூ.25, முருங்கைக்காய் -ரூ.30, முள்ளங்கி -ரூ.16, புடல்- ரூ.32 முதல் 40, பாகல்-ரூ.40 முதல் 44, பீர்க்கன் -ரூ.40 முதல் 56, வாழைக்காய் -ரூ.28, வழைப்பூ (1)- ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1)- ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் -ரூ.20, பூசணி- ரூ.15, சுரைக்காய் -(1) ரூ.10 முதல் 12, மாங்காய்- ரூ.60, தேங்காய் -ரூ. 27, எலுமிச்சை -ரூ. 80, கோவக்காய்- ரூ.40, சி.வெங்காயம்- ரூ. 30 முதல் 46, பெ.வெங்காயம்- ரூ.30 முதல் 35, கீரை -ரூ.30, பீன்ஸ் -ரூ.60 முதல் 68, கேரட் -ரூ.40 முதல் 48, பீட்ரூட்- ரூ.30 முதல் 40, உருளைக்கிழங்கு -ரூ.27 முதல் 30, சவ்சவ்- ரூ.28, முட்டைகோஸ்- ரூ.15 முதல் 20, காளிபிளவர்- ரூ.15 முதல் 25, குடைமிளகாய் -ரூ.50, கொய்யா -ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம்- ரூ.50, பச்சை பழம்- ரூ.25, கற்பூரவள்ளி- ரூ.40, ரஸ்தாளி- ரூ.30, செவ்வாழை -ரூ.50, பூவன் -ரூ.20, இளநீர்- ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை -ரூ. 40, மல்லிதழை -ரூ. 40, புதினா -ரூ. 30, இஞ்சி- ரூ.150, பூண்டு- ரூ. 50, ப.மிளகாய்- ரூ. 40 முதல் 50, வாழை இலை- ரூ.30, மரவள்ளிக்கிழங்கு- ரூ. 30, மக்காச்சோளம்- ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு- ரூ.70, கருணைக்கிழங்கு- ரூ.70, பப்பாளி- ரூ. 30, நூல்கோல்- ரூ. 32 முதல் 36, நிலக்கடலை- ரூ. 50, கொலுமிச்சை- ரூ.30, சப்போட்டா- ரூ.40, தர்பூசணி- ரூ.15, விலாம்பழம்- ரூ.40.
- பரமத்திவேலூரில் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் சுகுமார், ரவீந்தர், வேலுச் சாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப் பாளர்களாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவுமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.பரம சிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
40 தொகுதிகளில் வெற்றி பெறும்
அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைந்து 2½ ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டனர். ரூ.25 ஆயிரம் மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் நிறுத்திவிட்டனர்.
அதேபோல் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையிலும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் நெருக்கடியாலும் குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. அதுவும் 50 சதவீத குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்க ளித்து 40 தொகுதியிலும் 40 உறுப்பினர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளரும் வெங்கரை பேரூராட்சி தலைவருமான விஜி என்கிற விஜயகுமார், ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் முரளி, மாணிக்கநத்தம் ஊராட்சி தலைவர் வேலுசாமி , ஊராட்சி தலைவர் மணிமேகலை யோகநாதன், இருக்கூர் ஊராட்சி தலைவர் ஜானகி குழந்தைவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொத்தனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.
- குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.
- இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ரேக்ளா போட்டி
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ டிரைவர் சங்கம் சார்பில் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்கும் முன் ரேக்ளா வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்க குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. அதுபோல் வீரர்களும் திரண்டனர். உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் எல்லை அமைக்கப்பட்டது.
உற்சாகம்
ரேக்ளா வண்டியில் செல்லும் ஜாக்கிகள் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்று கொடியை வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் சென்று கொடியை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தனர். குதிரைகள் எல்லையை தொடுவதற்காக சீறி பாய்ந்தன. ேபாட்டியை காண சுற்றுவட்டார பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் இளைஞர்கள் திரண்டு ஆரவாரம் எழுப்பி உற்சாகபடுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, நிகழ்ச்சி அமைப்பாளர் சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
- ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.
- பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் ஒரு அங்கமான ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் அப்பாவு ஒருங்கிணைந்த வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் பல்வேறு அலகுகள் குறித்தும் பேசி விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி வேளாண்மைத்துறையின் பல்வேறு மானியத்திட்டங்கள், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கிக்கூறினார். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா திட்ட உதவி மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.
- மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவன மேலாளர்கள், கியாஸ் கம்பெனி ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோர்க ளுடன், மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறை பாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என அதில் கலெக்டர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
- பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
430 சதவீதம் உயர்வு
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
சோலார் மேற்கூரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் உள்ளிட்ட மின் இணைப்பு களுக்கு டேரிப் மாற்றம் செய்து தர வேண்டும்.
மல்டி இயர் டேரிப் கட்டணத்தை ரத்து செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொ ழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடையடைப்பு
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டு கடை யடைப்பு செய்ய உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சுமார் 2,500 சிறு, குறந்தொழில்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நாளை ஒரு நாள் மூடி வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கருத்துகேட்பு கூட்டம்
அவர்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிப்காட் சம்மந்தமான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
இதில் சிப்காட் எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், சிப்காட் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே சிப்காட் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர்.
மீண்டும் போராட்டம்
சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், அதிகாரிகள் கேட்டுக் கொாண்டதாலும் கடந்த 2 வாரங்களாக அவர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்துக்கேட்புக் கூட்டம் முடிவுற்ற நிலையில் இன்று மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெறுகிறது.