search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "destroy"

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
    • திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்க ளும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.

    கடும் வெயிலின் காரணமாக இவை காய்ந்திருந்த நிலையில், திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சின்னசோ ளிபாளையம் பகுதிக்கு விரைந்து வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்ப டுத்தி, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பிaனும் தோட்டத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின.

    • கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் நகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45 ). இவர் கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயினால் எரிந்து நாசமாயின .இந்நிலையில் கூரை வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பீரோ, உணவுப் பொருட்கள் ,துணிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.

    இந்தியாவின் ஒற்றமையை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரத்தின்போது பேசினார்.
    சங்ரூர்:

    பஞ்சாப் மாநிலம் சுனாம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் தில்லனை ஆதரித்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் மோடி என்னுடைய ராணுவம் என அழைக்க தொடங்கி விட்டார். ஆனால் ராணுவம் மோடிக்கு சொந்தமானது கிடையாது. இந்திய நாட்டுக்கு சொந்தமானது. நானும் இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தேன். நான் இந்திய தேசத்திற்காக பணியாற்றினேன், மோடிக்காக பணியாற்றவில்லை.

    இந்தியாவின் மிகப்பெரிய வலிமையே, ஒற்றுமைதான். அதனை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது. 

    வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவோருக்கும், மதச்சார்பற்ற இந்தியாவை கட்டியெழுப்ப விரும்புவோருக்கும் இடையிலான போட்டியில், நாட்டின் எதிர்காலத்தை இந்த பாராளுமன்றத் தேர்தல் தீர்மானிக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார். 
    ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று வடசேரியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #admk #opanneerselvam #mkstalin

    நாகர்கோவில்:

    துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

    நாகர்கோவில் வடசேரியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் யாரும் இதுவரை செய்யாத பல வளர்ச்சித்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர். பின்னர் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அதனை அரசிதழில் வெளியிட மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை அரசிதழில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதா.

    இதேபோல் அவரது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, பெண்களுக்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தேவையை அறிந்து சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவாக பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். அவரை நீங்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மேலும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவார்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தரமாக பேச வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் தரமில்லாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. தேர்தலுக்கு பின்னர் காணாமல் போகும் என்று கூறுகிறார். யார் காணாமல் போவார்கள் என்பதை பார்க்கலாம்.

    அ.தி.மு.க. ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய ஆலமரம். இது தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. இந்த ஆலமரத்தை சுனாமியோ, புயலோ, பூகம்பமோ அழிக்க முடியாது. உங்கள் தந்தையாலே (கருணாநிதி) அழிக்க முடியவில்லை. நீங்களா அ.தி.மு.க.வை அழிக்கப் போகிறீர்கள்? ஒரு போதும் முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வரை மின்வெட்டு இல்லை. மாறாக மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மத்திய மந்திரியாகி மேலும் பல நல்லதிட்டங்களை செயல்படுத்த உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். #admk #opanneerselvam #mkstalin

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #Sabarimala #PonRadhakrishnan
    கோவை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

    இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

    சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

    இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.

    சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.

    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan

    தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PazhaNedumaran #MadrasHC
    சென்னை:

    தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.



    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பழ நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். #PazhaNedumaran #MadrasHC
    ×