search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "potatoes"

    • மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரம் முதல் 2 ஆயிரம் டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து வழக்கமாக 45 டன் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். தற்போது 15 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வரத்து குறைவால் உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1,000-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    கோதுமை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவைக்கு

    ரவை - 1/4 கப்

    தக்காளி - 2 கப்

    வெங்காயம் - 2

    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

    துருவிய சீஸ் - 1 கப்

    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

    வெண்ணெய் - சிறிது

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    ×