search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவர்கள் போராட்டம்: மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைவு
    X

    லாரி டிரைவர்கள் போராட்டம்: மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைவு

    • மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரம் முதல் 2 ஆயிரம் டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து வழக்கமாக 45 டன் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். தற்போது 15 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வரத்து குறைவால் உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1,000-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×