search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vada Pav"

    • மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று.
    • ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடியான இன்னிங்சின் போது வர்ணனையாளர் ஹர்சா போக்லே பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான வடா பாவ் பற்றி நகைச்சுவையான கருத்தை கூறினார்.

    மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று. மும்பையில் உள்ள மூலைமுடுக்குகளில் எங்கும் கிடைக்கும் வடா பாவ் மும்பை மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி ஆகும். இந்நிலையில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் பற்றி பேசிய ஹர்சா போக்லே உற்சாகத்தில் 'என் வடா பாவை பிடித்து கொள்ளுங்கள்' என்று வர்ணனை செய்தார். உடனே ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர். இதனால் குறுகிய நேரத்தில் வடா பாவ் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.

    • ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
    • ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.

    மும்பை:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

    ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

    ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.

    இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

    ×