search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harsha Bhogle"

    • ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
    • ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.

    மும்பை:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

    ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

    ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.

    இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

    • ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
    • ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.

    நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.

    அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

    இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.


    ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

    ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.

    ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.

    ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

    இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை சதோதரர் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். #RashidKhan #HarshaBhogle

    டேராடூன்:

    இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் வங்காளதேசம் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியையும், ரஷித் கானின் சிறப்பாக பந்துவீச்சையும் பாராட்டும் வகையில், பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த ரஷித் கான், ஹர்ஷா போக்லேவை சகோதரர் என குறிப்பிட்டிருந்தார்.



    இதையடுத்து, அப்பா வயது உடையவரை எப்படி சகோதரர் என கூப்பிடுவது என இந்திய ரசிகர்கள் ரஷித் கானிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். மேலும் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்குமாறும் சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர். #RashidKhan #HarshaBhogle
    ×