என் மலர்
நீங்கள் தேடியது "lorry strike"
- 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
- மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இவை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின.
இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்.
அதுவரை தென் இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன.
இந்த மண்டிகளுக்கு ஊட்டி, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படும்.
அவ்வாறு கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் உருளைக் கிழங்கு மண்டிக்கு கர்நாடகாவில் இருந்து வரும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துவிட்டது.
ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது. அதுவும் குறைந்த அளவிலேயே உருளைக்கிழங்கு வருவதால், மண்டிகளில் அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:-
ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும். தற்போது ஒரிரு லாரிகளில் மட்டுமே ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், ஆந்திர மாநிலம் வழியாக வருகின்றன.
அதிலும் குறைவான அளவிலேயே உருளைக்கிழங்குகள் வருகின்றன. 200-ல் இருந்து 250 டன் அளவிலான உருளை கிழங்குகளே வருகிறது.
கடந்த வாரம் கோலார் உருளைக் கிழங்கு 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.750-க்கு விற்பனையானது. நேற்று அதே 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்த பட்சம் ரூ.900-த்திற்கும், அதிகபட்சம் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.
இதே நிலை தொடர்ந்தால், உருளைக்கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
- உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
சேலம்:
டீசல் விற்பனை வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், 19 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் கர்நாடகாவில் உள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாததால் தண்ணீர் வினியோகம், கியாஸ் வினியோகம் உள்பட அத்தியாவசிய பணிகளும் முடங்கி உள்ள நிலையில் அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு வரும் லாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட வில்லை.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே உள்ள பொம்ம சந்திரா பகுதிகளில் லாரிகளை மொத்தமாக நிறுத்தி வைத்து போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஓசூர், ஜுஜுவாடி, மூக்கண்டப்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து பொருட்கள் ஏற்றிய லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் அந்தந்த மாவட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒரே நாளில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதன் உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், பூண்டு, வெங்காயம், எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுவதும் தடை பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் விரைவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் 10 ஆயிரம் லாரிகளிலும் வேலை பார்க்கும் டிரைவர், கிளீனர், லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 10 ஆயிரம் லாரிகளுக்கும் ஒரே நாளில் ஒரு லாரிக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் லாரி உரிமைாளர்களுக்கு மொத்தத்தில் ரூ. 20 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிைடயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் சித்தாராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
- கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
- மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முடக்கம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாநில அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து டீசல் விலையை திரும்ப பெற வேண்டும், எல்லையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் பங்கேற்றுள்ளதால் மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் வழியாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் செல்கின்றன.
இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகின்றன.
கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் தொடங்கி உள்ளதால் அந்த மாநிலம் வழியாக லாரிகள் இயக்கினால் கற்கள் வீசப்படலாம், மேலும் டிரைவர்களை தாக்கி லாரிகளை சேதப்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால் அந்த வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதனால் கர்நாடகா வழியாக தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் லாரிகள் இயக்கப்பட வில்லை. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் இயக்கப்பட வில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரி மவாவட்ட எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் லாரிகள் ஆந்திரா மாநிலம் வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் கூடுதலாக 200 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலத்திற்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, தீப்பெட்டி, மஞ்சள், முட்டை, கறிக்கோழி, இரும்பு தளவாடங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன .
பால், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகள் மட்டும் இயக்க அனுமதிக்கபபடுகிறது. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பூண்டு, எண்ணை வகைகள், வெங்காயம், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத லாரிகளில் தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் ஆகியவை சென்னை உள்பட பல்வேறு மார்க்கெட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதற்கான விலை உடனடியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மாநில அரசின் சிறிய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர்.
புதுச்சேரியை தவிர கர்நாடகாவில் தான் டீசல் விலை தென்னகத்திலேயே மலிவானது. பொது நலனுக்காக வேலை நிறுத்தத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ள னர்.
- இதனை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.
கடையம்:
கடையம் அருகே மாதா புரம் மற்றும் ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிக்கும் தொழில் நடை பெற்று வருகிறது.
இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு தயாரிக்கப்படும் செங்கல், எம் சாண்ட், ஜல்லி, ஹாலோ பிளாக் செங்கல் போன்றவை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லப்படு கிறது.
அவ்வாறு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டு னர்கள் புகார் தெரிவித்துள்ள னர். மேலும் ஓட்டுனர்களை போலீசார் அவதூறாக பேசுவதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதனை கண்டித்து நேற்று ஆசீர்வாதபுரம், மாதாபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரி களை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.
இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிகமான கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை. குறைந்த வாடகையில் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுனர்களை தொடர்ந்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை.
சென்னை:
சென்னை மற்றும் சுற்று வட்டார மோட்டார் வாகன சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கி உள்ளது.
அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பல வருடங்களாக முறைகேடாக வசூலிக்கும் ஒளிரும் பட்டைகளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு துறைமுகம், வடசென்னை, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.
வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரிகள் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் லாரி உரிமையாளர்கள் மணலி, ஆண்டாள்குப்பம் ஜங்சனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயக்குமார், கரிகாலன், யுவராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமையில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். லாரிகளுக்கு பார்க்கிங் டெர்மினர் அமைத்து தர வேண்டும். 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
- லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, துணி வகைகள், இரும்பு தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமை உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகளால் தொழில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நாளை (9-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகள், இலகு ரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள், கிளீனர்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(9-ந் தேதி) தமிழகம் முழுவதும் லாரிகள், ஆம்னி பஸ்கள், இலகு ரக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதனால் தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது, தமிழக அரசு இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்வோம்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம், அதே போல தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கியாஸ் சிலிண்டர் லாரிகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- கடந்த 2 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கி வருகிறது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5,500 கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஹூப்ளியில் உள்ள சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நாமக்கல்லை சேர்ந்த 200 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒப்பந்த அடிப்படையில் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொகையை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து, நாமக்கல்லை சேர்ந்த 200 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளை கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையை ஆயில் நிறுவனங்கள், தராததால் லாரி உரிமையாளர்களால் தொழில் செய்ய முடியவில்லை. எனவே வேறு வழியில்லாமல் லாரிகளை நிறுத்தி வைத்து உள்ளோம். சுங்க கட்டணம் தொடர்பான நிலுவைத்தொகை கிடைக்கும் வரை லாரிகளை இயக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், குடவாசல், ஆலங்குடி உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் சுமார் 3200 லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன.
இந்த நடைமுறையை மாற்றி அரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள் மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையை கண்டித்து, இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
இதனால் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrikes
ஈரோடு:
பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
எட்டாவது நாளாக நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்த நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து லாரிகள் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
ஈரோட்டில் தேங்கி கிடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிடங்குகளில் அதிகம் இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்புவதற்கு சில தினங்கள் ஆகும் என டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிக் கிடந்த தொழில்களும் மீண்டும் புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன. வேலை இழந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடங்குகளில் தேங்கிக் கிடந்த சரக்குகளை பார்சல் அலுவலகங்களுக்கு மாட்டு வண்டிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். லாரிகளில் ஏற்றப்பட்டு தற்போது அனுப்பும் பணியையும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்பி இயல்பு நிலைக்கு திரும்ப சில தினங்கள் ஆகும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். #LorryStrike
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.
போராட்டம் காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பம்புசெட், கிரைண்டர் விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. சரக்குகளுடன் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்த லாரிகள் அனைத்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டு சென்றது.
போராட்டம் காரணமாக கடந்த 8 நாட்களாக தேங்கிய பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் லாரிகளில் ஏற்றி செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் கடந்த 8 நாட்களில் அதிகமான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் சரக்குகளை ஏற்றி செல்ல லாரிகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வழக்கம் போல வரும் லாரிகள் நேற்று இரவு முதல் காய்கறிகளை ஏற்றி வந்தது. மேலும் இங்கு இருந்து கேரள மாநிலம், மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டிய காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.






