search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry strike"

    • லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

    வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, துணி வகைகள், இரும்பு தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமை உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகளால் தொழில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நாளை (9-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகள், இலகு ரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள், கிளீனர்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

    வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(9-ந் தேதி) தமிழகம் முழுவதும் லாரிகள், ஆம்னி பஸ்கள், இலகு ரக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

    இதனால் தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது, தமிழக அரசு இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்வோம்.

    ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம், அதே போல தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கியாஸ் சிலிண்டர் லாரிகள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் சுற்று வட்டார மோட்டார் வாகன சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கி உள்ளது.

    அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பல வருடங்களாக முறைகேடாக வசூலிக்கும் ஒளிரும் பட்டைகளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு துறைமுகம், வடசென்னை, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரிகள் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் லாரி உரிமையாளர்கள் மணலி, ஆண்டாள்குப்பம் ஜங்சனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயக்குமார், கரிகாலன், யுவராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமையில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். லாரிகளுக்கு பார்க்கிங் டெர்மினர் அமைத்து தர வேண்டும். 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    • கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ள னர்.
    • இதனை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    கடையம்:

    கடையம் அருகே மாதா புரம் மற்றும் ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிக்கும் தொழில் நடை பெற்று வருகிறது.

    இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு தயாரிக்கப்படும் செங்கல், எம் சாண்ட், ஜல்லி, ஹாலோ பிளாக் செங்கல் போன்றவை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லப்படு கிறது.

    அவ்வாறு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும்போது தென்காசி பகுதிகளில் உள்ள போலீசார் அபராதம் என்ற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபடுவதாக லாரி ஓட்டு னர்கள் புகார் தெரிவித்துள்ள னர். மேலும் ஓட்டுனர்களை போலீசார் அவதூறாக பேசுவதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதனை கண்டித்து நேற்று ஆசீர்வாதபுரம், மாதாபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் லாரி களை நிறுத்தி ஒரு நாள் அடையாளம் போராட்டம் நடத்தினர்.

    இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிகமான கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை. குறைந்த வாடகையில் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுனர்களை தொடர்ந்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. #LorryStrikes
    திருவாரூர்:

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், குடவாசல், ஆலங்குடி உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் சுமார் 3200 லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன.

    இந்த நடைமுறையை மாற்றி அரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள் மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையை கண்டித்து, இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இதனால் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrikes

    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ஈரோட்டில் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    எட்டாவது நாளாக நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்த நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து லாரிகள் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

    ஈரோட்டில் தேங்கி கிடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிடங்குகளில் அதிகம் இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்புவதற்கு சில தினங்கள் ஆகும் என டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிக் கிடந்த தொழில்களும் மீண்டும் புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன. வேலை இழந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடங்குகளில் தேங்கிக் கிடந்த சரக்குகளை பார்சல் அலுவலகங்களுக்கு மாட்டு வண்டிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். லாரிகளில் ஏற்றப்பட்டு தற்போது அனுப்பும் பணியையும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்பி இயல்பு நிலைக்கு திரும்ப சில தினங்கள் ஆகும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். #LorryStrike

    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

    போராட்டம் காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பம்புசெட், கிரைண்டர் விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. சரக்குகளுடன் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்த லாரிகள் அனைத்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டு சென்றது.

    போராட்டம் காரணமாக கடந்த 8 நாட்களாக தேங்கிய பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் லாரிகளில் ஏற்றி செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் கடந்த 8 நாட்களில் அதிகமான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் சரக்குகளை ஏற்றி செல்ல லாரிகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வழக்கம் போல வரும் லாரிகள் நேற்று இரவு முதல் காய்கறிகளை ஏற்றி வந்தது. மேலும் இங்கு இருந்து கேரள மாநிலம், மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டிய காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. #LorryStrike #TruckersStrike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    இன்றுடன் 8-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டது.

    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்தன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

    மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

    இதனை அடுத்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நள்ளிரவு முதல் லாரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் தருமபுரி அருகே லாரி மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #lorryStrike
    தருமபுரி:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8-வது நாளாக லாரிகள் உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு பல்வேறு லாரி சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள் பென்னாகரம் மெயின்ரோட்டில் வரிசையாக நிறுத்தியுள்ளனர். மேலும் சில லாரிகளை பெட்ரோல் பங்குகளிலும் நிறுத்தி உள்ளனர்.

    போராட்டத்தை மீறி லாரிகளை இயக்குபவர்களை சங்க உறுப்பினர்கள் வழிமறித்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொண்டனர்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வழியாக வந்த 4 லாரிகள் மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதில் ஒரு லாரி டிரைவருக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். லாரிகள் மீது கல்வீசியவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த கல்வீச்சு சம்பவத்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளாத சங்கத்தினர் தருமபுரி வழியாக லாரிகளை இயக்குவதற்கு தயங்கி வந்தனர்.

    சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் செல்லபிள்ளை (வயது 49). இவர் நேற்று ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ராணிமூக்கனூருக்கு வந்தார். அப்போது அங்கு ஜல்லிகற்களை அங்கு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு லாரியை எடுத்து கொண்டு சென்றார்.

    லாரியில் டீசல் குறைவாக இருந்ததால் கடத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றார். திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் லாரியின் முன்பக்கமாக வந்து வழிமறித்தனர். அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கற்களை கொண்டு லாரியின் மீது விசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.

    இதுகுறித்து செல்ல பிள்ளை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #lorrystrike
    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரோட்டிலிருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று வரை சுமார் ரூ 400 கோடி மேல் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் ஜவுளிகள் மற்றும் மஞ்சள் மூட்டை மூட்டையாக குடோன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். வேலை நிறுத்தம் எப்பொழுது வாபஸ் ஆகுமோ? என்று காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் முன் ஜவுளி பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோட்டிலிருந்து பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு இந்த ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கர்நாடகா, ஆந்திரா மும்பை,ஹைதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு ஜவுளி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் கேரள மாநிலம் பாலக்காடு திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெயில்கள் மூலம் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    ரெயில்கள் மூலம் சொற்ப அளவில்தான் ஜவுளிகள் மற்றும் இதர பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது அதேசமயம் மலைபோல் பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளன. #LorryStrike

    லாரி ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    திருவொற்றியூர்:

    டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

    இந்த வேலை நிறுத்தத்திற்கு கண்டெய்னர் மற்றும் டிரைலர்ஸ் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்றுமதி, இறக்குமதிக்காக சென்னை துறைமுகம் செல்லும் 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால் மாதவரம் மஞ்சம்பாக்கம் முதல் காசிமேடு ஜீரோ கேட் வரை 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பொன்னேரி மீஞ்சூர் மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கண்டெய்னர் சோதனை மையத்தில் இருந்து ஏற்றுமதி இறக்குமதிக்காக தினமும் சென்னை துறைமுகத்திற்கு 2000 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமில்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும் குளிரூட்ட பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு கப்பல்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பபடுவதால் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வாடகை உயர்வு குறித்து கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அளவு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்படுவதால் அன்று மாலையே சமரசம் என்ற பெயரில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்களே தவிர இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்ற படாமலே இருக்கிறது. 8-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #LorryStrike #vegetables

    லாரிகள் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LorryStrike #vegetables

    சிவகாசி:

    சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தொழில் வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியாலும், இந்த முறை லாரி ஸ்டிரைக்காலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து ரூ. 300 கோடிக்கும் அதிகமான பட்டாசுகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

    இன்னும் 3 மாதங்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இப்போதே பட்டாசுகளை ஏற்றுமதி செய்தால் தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போனஸ், முன்பணம் போன்றவை வழங்க முடியும்.

    இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் நிலைக்கு தடை ஏற்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் சுமார் ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளும் உள்ளன.

    எனவே மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடித்து வருவதால் இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் மஞ்சள் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. #LorryStrike #vegetables

    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சேலத்தில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு தொழிற்சாலைகளும், பெரிய தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் இயங்கி வருகின்றன. வேலை நிறுத்த போராட்டத்தால் பொட்டனேரியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் இரும்பு தளவாட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி கிடக்கின்றது.

    இதுபோல் ரசாயண தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்ற பொருட்கள் சந்தைப் படுத்த முடியவில்லை. மேட்டூர் தொழிற்பேட்டையில் நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மெக்னீசியம் சல்பேட் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்களை லாரிகளில் கொண்டு வரமுடியாத காரணத்தினால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் வட்டாரத்தில் மட்டும் ஒரு வார காலத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் எரியூட்டப்படும் நிலக்கிரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 3000 டன் நிலக்கரி சாம்பல் வெளியேறுகிறது. லாரிகள் மூலம் இந்த சாம்பல் செங்கல் உற்பத்திக்கும், சிமெண்ட் உற்பத்திக்கும் எடுத்துச் செல்லப்படும். இந்த சாம்பலும் தொழிற்சாலை வளாகத்தில் அப்படியே தேங்கி கிடக்கிறது.

    சேலம் சத்திரம், பள்ளப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மஞ்சள் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் மஞ்சள் சுத்தம் செய்து, தரம் பிரித்து மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்கு லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தற்போது ஸ்டிரைக்கால் மண்டிகளில் மஞ்சள் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கின்றன. ரூ.25 கோடி மதிப்பிலான மஞ்சள்கள் தேக்கம் அடைந்துள்ளது. சேலம், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி, அரிசி, பருப்பு உள்ளிட்ட ஆலைகளில் பொருட்கள் தேங்கி உள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் தொழிலாளகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 8-நாட்களாக வேலை இல்லாத காரணத்தினால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    போராட்டம் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. நேற்று மாநில தலைவர் துறைமுகத்தில் நடைபெற்ற கண்டெய்னர் லாரிகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். தீப்பெட்டி தொழிற்சாலைகள் எல்லாம் மூடி விட்டார்கள். துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். 95 சதவீதம் லாரிகள் இயங்கவில்லை.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள். இதுவரை மத்திய அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை. விலைவாசி 10-ல் இருந்து 20 சதவீதமாக உயர ஆரம்பித்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike #vegetables

    ×