என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோட்டில் வழக்கம் போல் லாரிகள் ஓட தொடங்கியது
ஈரோடு:
பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
எட்டாவது நாளாக நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்த நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து லாரிகள் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
ஈரோட்டில் தேங்கி கிடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிடங்குகளில் அதிகம் இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்புவதற்கு சில தினங்கள் ஆகும் என டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிக் கிடந்த தொழில்களும் மீண்டும் புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன. வேலை இழந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடங்குகளில் தேங்கிக் கிடந்த சரக்குகளை பார்சல் அலுவலகங்களுக்கு மாட்டு வண்டிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். லாரிகளில் ஏற்றப்பட்டு தற்போது அனுப்பும் பணியையும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்பி இயல்பு நிலைக்கு திரும்ப சில தினங்கள் ஆகும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். #LorryStrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்