search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diesel price hike"

    பிரான்சில் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    பாரிஸ்:

    டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று  மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வன்முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

    கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
    டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு 24-ந் தேதி (அதாவது நேற்று) அதிகாலை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.



    அதன்படி கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரி டீசல் விலை உயர்வால் எங்களுடைய தொழில் நலிவடைந்து வருகிறது.

    எனவே வேறு வழியின்றி சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறோம். இடம், எடை, பொருட்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கட்டண உயர்வு இருக்கும்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் ரூ.10 ஆயிரமா கவும், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களுக்கு செல்லும் லாரி வாடகை கட்டணம் ரூ.25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கான கட்டணத்தை ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பார்சல் புக்கிங் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (வால்டாக்ஸ் சாலை) செயலாளர் ஜெ.ரமேஷ்குமார் கூறியதாவது:-

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் 400-க்கும் மேற்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிமாநிலங்களுக்கும் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது.

    தற்போது டீசல் கட்டண உயர்வால் வேறு வழியின்றி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளோம். இதுவரையில் ஒரு டன் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,200 கட்டணமாகவும், இரும்பு பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,250 கட்டணமாகவும் வசூலித்து வந்தோம்.

    இன்று முதல் (நேற்று) 25 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வரும்பட்சத்தில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை குறைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர பஸ்களிலும் பயணிகள் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் அதிரடியாக விலை ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சரக்கு லாரி வாடகை கட்டணமும் அதிகரித்து இருக்கிறது.

    சரக்கு லாரிகள் கட்டண உயர்வால், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.  #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.

    கடந்த 5-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.51-க்கு விற்கப்பட்டது.  நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு அதிகரித்து ரூ.83.13-க்கு விற்றது.  

    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது.



    இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி  உள்ளது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்கப்பட்டது. 4-ந்தேதி 20 காசு அதிகரித்துள்ளது. ரூ.75.39 ஆக உயர்ந்தது. 5-ந்தேதி அதே விலையில் நீடித்தது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. நேற்று 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கு விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, கந்தம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ரிக் லாரிகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் லாரிகள் வடமாநிலங்களில் இயக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் லாரிகளுக்கு அதிக அளவில் டீசல் தேவைப்படும். சமீப காலமாக டீசல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருவதால், ரிக் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் நடந்த தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கு திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.

    இந்த போராட்டம் குறித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    எங்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 500 ரிக் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ரிக் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    எங்களின் போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நீடிக்கும். எங்களின் போராட்டத்துக்கு பிறகும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்றால் ஆழ்துளை கிணறு அமைக்க வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselHike
    ராமேஸ்வரம்:

    இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கும்பகோணம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கண்ணள், மாநில குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கவுரவ தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர்கள் கார்த்தி கேயன், ஜெயம் பிள்ளை, நகர தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், ஜெயக்குமார், நகர பொருளாளர் பாண்டித்துரை உள்பட பலர் பேசினர்.

    பெட்ரோல், டீசல் மற்றும் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். நல வாரிய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும். மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வசூல் செய்யும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு முறை சரி செய்யும் வரை பழைய முறையையே பின்பற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்த நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் வழக்கம் போல இயக்கப்பட்டது.
    சேலம்:

    டீசல் விலையை 3 மாதத்திற்கு ஓரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர், பெட்ரோலிய துறை மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனாலும் மத்திய அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கனவே அறிவித்த படி ஜூன் 18-ந் தேதியான இன்று முதல் அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வட மாநிலங்களில் லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் முக்கிய சங்கமான 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் தமிழகம் முழுவதும் இந்த சங்கத்தின் கீழ் இயங்கும் நான்கரை லட்சம் லாரிகள் வழக்கம் போல ஓடின. இதில் சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரம் லாரிகளும் ஒடியதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

    மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் ஜூலை மதம் 20-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்தது தான் எங்களது சங்கம். இந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு நான்கரை லட்சம் லாரிகள் இயங்குகிறது.

    இதில் மூன்றரை லட்சம் லாரிகள் தமிழகத்திற்குள் இயங்குகிறது. ஒரு லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் வழக்கம் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள மற்றொரு சங்கத்திற்கு எங்கள் ஆதரவு கிடையாது. அந்த சங்கத்தினருக்கு தமிழகத்தில் மிக குறைந்த அளவே லாரிகள் உண்டு என்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:

    இன்று தொடங்கியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் எங்களது சங்கம் பங்கேற்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் லாரிகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. #tamilnews
    டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

    தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.

    தற்போது டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்படுகின்றன. இதனால் முன்பு இருந்ததைவிட லாரி வாடகை அதிகரித்துள்ளது.

    காய்கறி உற்பத்தி அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னைக்கு காய்கறி வரத்து அதிகமானது. இதனால் காய்கறிகளின் விலை மிகவும் குறைந்தது.

    தற்போது டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. கோடை காரணமாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது.

    பச்சை பட்டாணி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இஞ்சி விலை ரூ.80 ஆக உள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெரிய வெங்காயம் (கிலோ) ரூ.10 முதல் 13 வரை. சின்ன வெங்காயம் ரூ.25-28, தக்காளி ரூ.10-15, அவரை ரூ.20-25, கேரட் ரூ.20-25, பீட்ரூட் ரூ.15-20, முள்ளங்கி ரூ.10-15, கத்திரிக்காய் ரூ.10-15, புடலங்காய் ரூ.10-15, கோவங்காய் ரூ.15-20, நூல்கோல் ரூ.15-20, வெண்டைக்காய் ரூ.15-20, காலிபிளவர் ரூ.20-30, சேனை கிழங்கு ரூ.15-20, 20-22, உருளைகிழங்கு, 20-25, ப.மிளகாய்-ரூ. 15-20, முருங்கைகாய் ரூ.30-35.

    இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோடை காலம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டுக்கொன்ற தமிழக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய் வேந்திரன் தலைமையில் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா,பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் காங்கிரஸ் தலைவர் கோபி வரவேற்றார். நகர் காங்கிரஸ் தலைவர்கள் ராஜாமணி, அஜீஸ், வட்டார தலைவர்கள் ஜோதிபாலன், கோபால், ஜெயபாண்டி, சேதுபாண்டியன், கந்தசாமி, முனீஸ்வரன், தன சேகரன், விஜயரூபன், ஜேசு மனோ கரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகுந் தலாதேவி, பெமிளா விஜய குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகா லிங்கம், முத்து ராமலிங்கம், பாலகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ரவி, காமராஜ், விஜயன், அருள், கந்தப்பழம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    உ.பி.யின் மதுராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPrice #Congress #Protest
    லக்னோ:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, உ.பி.யின் மதுரா நகரில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோ, டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #PetrolDieselPrice #Congress #Protest
    ×