search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol price hike"

    • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர்.
    • விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவதால் இன்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவவது வழக்கம். இதனால்மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து 25 சதவீத விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தெரிகிறது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே விசைப்படகுகளில் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும். கடுமையான டீசல் விலை உயர்வால் தொடர்ந்து இந்த தொழிலை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. எதிர்பார்த்த அளவு மீன் சிக்க வில்லை என்றால் அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 25 சதவீதம் அளவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன என்றார்.

    மீன்பிடி தடைகாலத்தில் மீன்விலை அதிகஅளவு உயர்ந்து இருந்தது. தற்போது விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
    • ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் தினமும் மாநகர பஸ்களில் பயணித்தனர்.

    கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது. 10 லட்சமாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக 25 லட்சம் வரை உயர்ந்தது. மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் வேன் போன்றவற்றில் கட்டணம் அதிகரித்தது.

    இதனால் அரசு பஸ்களை மக்கள் தற்போது நாடி வருகிறார்கள். குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா காலத்தில் பலர் பஸ் பயணத்தை தவிர்த்து மாற்று பயணத்திற்கு மாறினார்கள். இரு சக்கரம், கார் போன்ற வாகனங்களுக்கு மாறி விட்டனர்.

    இதனால் கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் அளவு வரவில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஸ் பயணத்திற்கு மக்கள் மாறி வருகிறார்கள். இன்னும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அதனை நிறைவேற்ற முடியும் என்றனர்.

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை.

    மேலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.

    தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இன்று (திங்கட்கிழமை) இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

    26-ந்தேதி- விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டிப் பயண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    27-ந்தேதி- சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து நம் கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல்.

    28-ந்தேதி- எஸ்.சி. எஸ்.டி. அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம்.

    30-ந்தேதி- ஓ.பி.சி. அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி- மகளிர் அணி சார்பில் வீடுகளின் முன்பாக கோரிக்கை அட்டையை ஏந்தும் போராட்டம்.

    2-ந்தேதி- கல்வியாளர் பிரிவு சார்பில் மக்களுக்கு கோரிக்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்.

    3-ந்தேதி- பிரசாரப்பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்

    பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    சுல்தான்பூர்:

    மத்திய அரசு, தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ.10 என்ற அளவுக்கு குறைத்தது. இதே போல பல மாநிலங்களும் அவற்றுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.

    இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது.

    அதே நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரியும், சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யுமான மேனகா காந்தி தனது தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இதே போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுவும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

    மத்திய அரசு

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை முறையே ரூ.13, ரூ.16 உயர்த்தியது. இதை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் மிகவும் ஏழையாக உள்ள மக்களுக்கு வழங்குகிற உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா, பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் தலா ரூ.15 அளவுக்கு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள நிதி மந்திரி பாலகோபால் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே 5 மற்றும் 10 ரூபாயை வரி குறைப்பு மூலம் குறைத்தது.

    இந்த நிலையில் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவினர் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில நிதி மந்திரி பாலகோபால் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணமாகும். இதில் அதிக அளவில் மத்திய அரசே வரி விதிக்கிறது. மாநில அரசுகளுக்கு பெரிய பங்கு இல்லை. எனவே கேரள அரசு மேலும் வரியை குறைக்க முடியாது. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.

    கேரளாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 31.8 ரூபாய் வரி மூலம் மத்திய அரசு பெறுகிறது. இது போல் டீசல் மூலம் 32.9 ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. மாநில அரசுக்கு டீசல் வரி மூலம் 30.8 சதவீதமும், பெட்ரோலில் 20.76 சதவீதமும் கிடைக்கிறது.

    எனவே பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு வரியை குறைக்க முடியாது. இது தொடர்பாக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 57 நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolPriceHike
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



    இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் பெட்ரோல் ரூ.70.20, டீசல் ரூ.64.66, மும்பையில் பெட்ரோல் ரூ.75.91, டீசல் ரூ.67.66, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.72.38, டீசல் ரூ.66.40, ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.74.55, டீசல் ரூ.70.26, பெங்களூருவில் பெட்ரோல் ரூ.70.86, டீசல் ரூ.65.00 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. #PetrolPriceHike
    பெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை (விலை குறைப்பு) எதுவும் வழங்கப்படாது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். #PetrolDieselPrice #ArunJaitley
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே, இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ. 2.50 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

    இவ்வாறு விலை குறைக்கப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபத்தில் பெரும் பகுதி குறைந்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் பங்குச்சந்தை விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை 10 சதவீதம் சரிவு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 16 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

    இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் 25 சதவீதமும், பாரத் பெட்ரோல் நிறுவனத்தில் 21 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன.

    மேலும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அதிக அளவில் பங்குகளை வாங்கி இருந்தது. அந்த நிறுவனத்துக்கும் இழப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சி எண்ணெய் நிறுவனங்களை பெரும் கவலை அடைய செய்தது.

    இதையடுத்து மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி இது சம்பந்தமாக சில தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-


    எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை இனியும் தளர்த்த மாட்டோம். பெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாது. அதாவது ஊக்கத்தொகை ரீதியாக இனி விலையை குறைக்க முடியாது. மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதை ஏற்று வரியை குறைத்து இருக்கிறார்கள். ஆனால், பல மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், கூட்டணி தலைவர்களும் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துவிட்டது, பண வீக்கம் அதிகமாகிவிட்டது என்று கூக்குரல் விடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏன் இவற்றின் விலையை குறைத்து மக்களுக்கு பயனடைய செய்யக்கூடாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மாநிலங்களுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்து வருகிறது. அதை ஏன் மக்களுக்கு விட்டு தரக்கூடாது. சராசரியாக மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வாட் வரி 29 சதவீதமாக உள்ளது. நாங்கள் பெட்ரோ, டீசல் மூலம் பெறுகிற வரியில் 42 சதவீதம் வரை மாநிலங்களுக்குதான் பகிர்ந்து கொடுக்கிறோம். அப்படி இருக்கும் போது, மாநில அரசுகளும் தனது பங்குக்கு வரியை குறைத்து இருக்க வேண்டும்.

    மத்திய அரசு ஆரோக்கியமான முறையில் வரிகளை வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறோம்.

    ஜி.எஸ்.டி.யில் 334 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதன் மூலம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மக்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் ரூ.97 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டு வரி செலுத்துவோருக்கு சலுகை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  #PetrolDieselPrice #ArunJaitley
    தொண்டி பகுதியில் டீசல் விலை உயர்வைக்கண்டித்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselPriceHike
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிங்கார வேலர்நகர், லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்குச் சென்றுவிட்டு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் கரை திரும்புவர்.

    கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று தொழிலில் எதிர்பார்த்தஅளவிற்கு மீன்வரத்து இல்லாத நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக விசைப்படகு மீனவர்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை கடலுக்குச் செல்ல 250 முதல் 300 லிட்டர் வரை டீசல் பிடித்துச் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் டீசலுக்கான மானியத்தையும் உயர்ந்ததால் கஷ்டப்பட்டு அதிக விலைக்கு டீசலை பிடித்து கடலுக்குச் சென்றால் எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைக்காததாலும், அப்படிகிடைத்தாலும் கரைதிரும்பினால் மீனவர்கள் உரிய விலைகிடைக்காததாலும் மீனவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.அதனால் தொண்டி பகுதி விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கான மானிய விலையை உயர்த்தி தரக்கேட்டும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselPriceHike
    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

    இதனால் தினமும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.



    இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike

    பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85.58 ஆக உள்ளது. #PetrolPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    கடந்த 7 வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தபடி உள்ளன.

    கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கட்டுப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக குறைவான அளவில் உயர்ந்தது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.



    பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85.58 ஆக உள்ளது.

    டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் நேற்று போல இன்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.78.10க்கு விற்பனையாகி வருகிறது.

    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னையில் இன்று சில பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாயை எட்டியுள்ளது. #PetrolPriceHike

    வேலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கார், பைக்கை தொங்க விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK
    வேலூர்:

    அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, மாவட்ட மாணவ அணி செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த மேடைக்கு இருபுறமும் கிரேன் மூலம் கார், பைக் கட்டி தொங்க விட்டிருந்தனர்.

    வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, பொருளாளர் கண்ணையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல், நகர செயலாளர் பிரகாஷ், புகழேந்தி, சக்திவேல், ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், மாவட்ட அவை தலைவர் அசோகன், முன்னாள் ஊராட்சி  தலைவர் பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நல்லதம்பி எம்.எல்.ஏ. நகர செயலாளர் ராஜேந்திரன், ஜோதிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராஜமாணிக்கம் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, சிவானந்தம், எம்.எல்.ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, மற்றும் ஸ்ரீதரன், அண்ணாதுரை, கார்த்தி வேல்மாறன், முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
    ராய்ப்பூர்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
    ×