search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diesel Price"

    கச்சா எண்ணைய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காதது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss #PetrolDieselPrice

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது 22.87 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.

    கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி இருந்ததை விட 22.87 சதவீதம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும். அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87 சதவீதம் குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20 சதவீதம், 3.66 சதவீதம் என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.

    உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விலையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதே விலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

    ஆனால், இன்றைய சந்தை விலை முறையே ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?

    பெட்ரோல் மீது ஏற்கனவே 118 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? இந்தத் தொகை நுகர்வோருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை.


    நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்றால் அந்தத் தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அப்படியும் அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன.

    கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன.

    தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் அரசு சேர்த்து வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

    2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

    மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #PetrolDieselPrice

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருப்பதால் பெட்ரோல் விலை 86 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் விலையும் மிரட்டுகிறது. #Petrolpricehike #dieselprice

    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளும் தினமும் உயர்த்தப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்வதால், தங்களுக்கு இழப்பு ஏற்பட கூடாது என்று, அந்த விலை உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தி விடுகின்றன.

    பெட்ரோல், டீசல் விலை கடந்த 2½ மாதங்களாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.92 காசு களாக விற்பனையானது.

    சில பங்குகளில் பெட்ரோல் விலை 86 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோலை விட டீசல் விலைதான் கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் அதிகரித்தது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.51-க்கு விற்பனையானது. சில இடங்களில் ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாயை எட்டி உள்ளது. #Petrolpricehike #dieselprice 

    டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 8-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக 13 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விசைப் படகு மீனவர்களின் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.முக. தலைவர் கருணாநிதி மற்றும் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கும், மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் இரங்கல் அனுசரித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    டீசல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டு எங்களது வாழ்வாதாரம் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் மீனவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற மீனவர்களுக்கு வழங்குகின்ற டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் சேதம் அடைந்து உள்ளன, நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொடுப்பது என்றும் முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இலங்கை அரசு அத்துமீறி 3 படகுகளை அரசுடமையக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற நட்பு நாடுகளுக்கு உதவாத சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முதல் கட்டமாக வேலை நிறுத்தம் செய்வது,

    2-வது கட்டமாக அடுத்த மாதம் அக்டோபர் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, படகு உரிமை சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பது,

    இதன்பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் 13 கடலோர மாவட்ட மீனவர்களும் இணைந்து போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சி துணையுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

    இதனால் தினமும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.



    இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அரண்மனை முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி முன்னிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.

    பின்னர் ராமநாதபுரம் அரண்மணை பகுதியில் இருந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அங்கு வந்த போலீசார் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட வக்கில் பிரிவு தலைவர் அன்பு செழியன், மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் மேகநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.

    2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள். தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

    2014-ல் மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது. இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?


    தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    இந்நிலையில் தான் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

    பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10-ல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலா ளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FuelPrice #BharatBandh #Vaiko

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.

    நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார். 
    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் பொருள்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஒரு சில தினங்களில் விலை உயர்வு குறையும்.

    மேலும், பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
    நாமக்கல்:

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று புதுடெல்லியில் அதன் தலைவர் மிட்டல் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தினசரி ஏற்றம் கண்டு வரும் டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தினசரி டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே லாரி உரிமையாளர்களின் முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும். அவ்வாறு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×