search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry Strick"

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கேரளாவிற்கு டெம்போ வேன்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. #LorryStrick
    கோவை:

    இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இது போல் கோவை மாவட்டத்திலும் லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான லாரிகள் கோவையை அடுத்த வாளையாறு வழியாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாக அந்த லாரிகள் அனைத்தும் வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளன.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 100 லாரிகளில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் கோவைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆனால் 20-ந் தேதிக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றிய 20 லாரிகள் நேற்றுக்காலை கோவை வந்தன. காய்கறி லாரிகள் என்பதால் அவற்றை யாரும் தடுக்கவில்லை. கோவை வந்த அந்த லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    ஆனால் பெரிய லாரிகளை இயக்க முடியாது என்பதால் கேரளாவில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு சொந்தமான டெம்போ வேன்களில் கோவையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு சென்றனர். கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட டெம்போ வேன்களில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இது குறித்து எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளன. மற்ற காய்கறிகளும் ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை வியாபாரிகள் தங்கள் சொந்த டெம்போ வேன்களில் கொண்டு செல்கின்றனர். இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடையவில்லை.

    காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் டெம்போ வேன்களை இதுவரை யாரும் தடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களுக்கு கேரளாவுக்கு டெம்போ வேன்கள் மூலம் காய்கறி கொண்டு செல்ல முடியும். அதன்பின்னர் கோவை மார்க்கெட்டில் இருப்பு குறைந்த பிறகு கேரளாவில் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

    கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஆட்டோக்கள், டெம்போ வேன்களில் கோவை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது அரசு பஸ்களிலும் காய்கறி மூட்டை களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவையின் சுற்று வட்டாரங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய எங்கும் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் வெளிமாநிலங்களில் வரும் காய்கறிகள் தற்போது தடைபட்டு உள்ளது. அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrick
    வேலை நிறுத்த போராட்டம் கார ணமாக குமரி மாவட் டத்தில் நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓட வில்லை. இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. #LorryStrick
    நாகர்கோவில்:

    அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சுங்கச் சாவ டிகளை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல் படுத்த வேண்டும், பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சரக்கு புக்கிங் அலுவலக ஏஜெண்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடவில்லை.

    குமரி மாவட்ட லாரி உரி மையாளர்கள் சங்கமும் ஆத ரவு தெரிவித்து போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. வெளி மாநி லங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து லாரிகளும் நாகர் கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் அதிகளவில் வெளி மாநிலங் களுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் தற்போது வேலை நிறுத்த போராட்டம் காரண மாக இந்த பொருட்களை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இதனால் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்கு களுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை.

    அதே சமயத்தில் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு அத்தியாவசிய பொ ருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட் டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல இயங்குகின்றன.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையா ளர்கள் சங்க செயலாளர் மனோகரனிடம் கேட்ட போது, ‘குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தை சேர்ந்த 1,500 லாரிகள் 3-வது நாளாக ஓடவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ரூ.2 கோடி மதிப் பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன‘ என்றார்.  #LorryStrick
    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் மணலூர்பேட்டை சாலை, அவலூர்பேட்டை சாலை போன்ற இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    எங்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 500 மண்பாடி லாரிகள் ஓடவில்லை. மற்ற லாரிகள் என எடுத்து கொண்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேல் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.’ என்றார். 
    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.

    நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார். 
    ×