search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை - ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்
    X

    குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை - ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்

    வேலை நிறுத்த போராட்டம் கார ணமாக குமரி மாவட் டத்தில் நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓட வில்லை. இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. #LorryStrick
    நாகர்கோவில்:

    அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சுங்கச் சாவ டிகளை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல் படுத்த வேண்டும், பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சரக்கு புக்கிங் அலுவலக ஏஜெண்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடவில்லை.

    குமரி மாவட்ட லாரி உரி மையாளர்கள் சங்கமும் ஆத ரவு தெரிவித்து போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. வெளி மாநி லங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து லாரிகளும் நாகர் கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் அதிகளவில் வெளி மாநிலங் களுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் தற்போது வேலை நிறுத்த போராட்டம் காரண மாக இந்த பொருட்களை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இதனால் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்கு களுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை.

    அதே சமயத்தில் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு அத்தியாவசிய பொ ருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட் டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல இயங்குகின்றன.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையா ளர்கள் சங்க செயலாளர் மனோகரனிடம் கேட்ட போது, ‘குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தை சேர்ந்த 1,500 லாரிகள் 3-வது நாளாக ஓடவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ரூ.2 கோடி மதிப் பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன‘ என்றார்.  #LorryStrick
    Next Story
    ×