என் மலர்
நீங்கள் தேடியது "tag 122727"
ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.
அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.
ஆனால் இந்த அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் பின்னர் எழுந்திருக்கவும் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டோல்கேட் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை மதுவிலக்கு பிரிவு போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் 530 கேனில் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குட்டறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் திண்டிவனம் வேலகம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடன் வந்திருந்தார்.
2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் டெல்லியில் இருந்து வேலூருக்கு 530 கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர். ஒரு கேனில் 35 லிட்டர் வீதம் 530 கேன்களில் 18 ஆயிரத்து 150 லிட்டர் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். #tamilnews
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் வரும் பொருட்கள் லாரிகள் மூலம் ராமாபுரம்புதூர் வழியாக முதலைப்பட்டி புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த லாரிகள் காலை, மாலை நேரத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் மட்டுமே ராமாபுரம்புதூர் வழியாக லாரிகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து உள்ளனர். அதற்கு லாரி உரிமையாளர்களும் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சரக்கு ஏற்றிய லாரிகள் ராமாபுரம்புதூர் வழியாக சென்றன. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு லாரியை சிறைபிடித்தனர். ஒப்புகொண்டபடி இல்லாமல் தொடர்ந்து லாரிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சிறைபிடிப்பு போராட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் காலை, மாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சரக்கு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ஏற்றிச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை பெரியசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது.
அப்போது திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.
பள்ளத்தில் பாய்ந்த லாரி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபத்து நடந்தபோது டிரைவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மரத்தில் மோதாமல் லாரி பாய்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியின் பின்பகுதி நடுரோடு வரை தூக்கியபடி இருந்ததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி விடிய-விடிய நின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் திம்பம் மலைப்பாதைக்கு வராமல் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் பாய்ந்து நின்ற லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகி வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
இதுகுறித்து அந்த வழியாக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகள் கூறும்போது, ‘27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்களால் தான் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் மிகவும் அவதிப்பட்டோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்றார்கள்.
பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு இன்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் தொழில் பெருமளவில் நடக்கிறது. அதனால் ஏற்படும் தொழில் போட்டியில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. அதில் பலர் கொல்லப்படுகின்றனர்.
அவர்களின் உடல்கள் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் மேற்கு ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லை. இதனால் அவை குளிரூட்டப்பட்ட கண்டெய்னருடன் கூடிய ஒரு லாரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேற்கு ஜாலிஸ்கோ மாகாண தலைநகர் குயாடா லஜராவிலொரு லாரியில் ஒரு கண்டெய்னரில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரி அங்குள்ள பட்டறை அருகே 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றத்துடன் பிணவாடை வீசியதால் குடியிருப்பு வாசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த லாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்த்ததுடன் போராட்டமும் நடத்தினார்கள். அதன் காரணமாக பிணங்களுடன் லாரிகள் சுற்றி சுற்றி வருகிறது. மெக்சிகோ சட்டப்படி குற்ற வழக்குகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனே எரிக்க முடியாது. ஆகவே வழக்கு முடியும் வரை உடல்கள் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன. #tamilnews
மகாராஷ்டிராவின் நந்துர்பார் எனும் பகுதியில் இருந்து நாஷிக் பகுதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. மிகவும் கோரமான இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் தகர்த்து எறியப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Accident #Maharashtra
நாமக்கல்:
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல்லில் மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-
டீசல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் உள்ளது. டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும். லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு, டயர் விலை உயர்வு, காப்பீட்டு பிரீமியம் உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும் நிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதியில் இருந்து 2018 ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஒரு வருடத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.13.90 உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 89 பைசா உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் ரூ 2.82 உயர்ந்துள்ளது.
மேலும் டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு 24 ரூபாய் குறையும். மாநில அரசு இதற்கு ஏற்க மறுப்பதாக மத்திய அரசு கூறுகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு எதிர்த்தும் அதனை கொண்டு வந்த மத்திய அரசு டீசல் விலையை குறைக்க மாநில அரசை குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. இந்த டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






