என் மலர்
நீங்கள் தேடியது "passenger injured"
- பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதலில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
- பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது.
கடலூர்:
சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. அப்போதுபஸ்சின் பின்னா ல் வந்த சரக்கு லாரி டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். லாரி பஸ் மீது வேகமாக மோதியது பஸ்சின் பின்புறம் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்தும், நெல்லையில் இருந்தும் நேற்று மாலை 2 ஆம்னி பஸ்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது.
அதேபோல் கொடைக்கானலில் இருந்தும், உடன்குடியில் இருந்தும் 2 ஆம்னி பஸ்கள் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த 4 ஆம்னி பஸ்களும் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் மீது நெல்லையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் மோதியது. அதன்பின்பு கொடைக்கானலில் இருந்தும் உடன்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் உடன்குடியில் இருந்து சென்ற பஸ்சும், கொடைக்கானலை சேர்ந்த பஸ்சும் பலத்த சேதமடைந்தது. இந்த 2 பஸ்களிலும் இருந்த 40பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:-
மருத்துவகல்லூரி மாணவி சுனிதா(21), செழின்(28), வீரராகவன்(40), சந்தானம்(42), மருத்துவகல்லூரி மாணவி மிருதுளா(22), அஜீத்போஸ்(29), பிரியா(38), குருபிரசாத்(37), சாதிக்பாஷா(39), கபாலி(24) உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4 ஆம்னி பஸ்சுகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி:
கடலூரில் இருந்து நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விருத்தாசலம் புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பஸ்நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று வேகமாக வந்தது.
அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் அந்த பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. பயணிகளின் நிழற்குடை இடிந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கமலா(வயது 35), சுந்தரமூர்த்தி(52), ராஜேந்திரன்(55), விஜயா(42) உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் படுகாய மடைந்த 19 பேரை மீட்டு குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு இன்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
ஆலந்தூர்:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்றிரவு மின்சார ரெயில் ஒன்று சென்றது. பரங்கிமலை நிலையம் நெருங்கும் முன்பாக கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் ரெயில் சென்ற போது திடீரென கல் பறந்து வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பயணி சாம்சுந்தர் மீது கல் விழுந்தது.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பரங்கிமலை நிலையத்தில் இறங்கிய அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்ட அவரை உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டையை சேர்ந்த அவர் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி போலீசாரிடம் விளக்கி கூறினார்.
இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இரவு கல் வீசப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிண்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதி போலீசார் அவர்களை ‘பொறி’ வைத்து தேடி வருகிறார்கள்.