என் மலர்
நீங்கள் தேடியது "omni bus accident"
- பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.
- அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோடு:
புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த ஆம்னி பஸ் ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது பஸ்சின் பின்பக்க சக்கர பகுதியில் இருந்து அதிகளவில் புகை வந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் சத்தம் போட்டதால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த 37 பயணிகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். பஸ்சில் டிரைவர், கிளீனர் என 2 பேர் மொத்தம் 39 பேர் இருந்தனர்.
உடனடியாக டிரைவரும், கிளீனரும் பஸ்சில் இருந்து வெளியே வந்து பின்புற சக்கர பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தொடர்ந்து புகை வந்ததை உறுதி செய்தனர். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறங்க செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அரை மணி நேரம் புகை வரும் பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
பின்னர் பரிசோதித்த போது பிரேக் ட்ரம் தேய்ந்து உராய்வு ஏற்பட்டதால் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் புகை வருவது கண்டறியப்பட்டு தக்க நேரத்தில் தீயணைப்புத் துறையினர் புகையை நிறுத்தினர்.
பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் அங்கு வந்து பஸ்சை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த டிரைவர் பரமேஸ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பயணிகளை வேறு பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேலூர் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்தனர்.
- இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் ஓட்டி ெசனறார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் டிரைவர், பஸ் பயணிகளான நெல்லையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(52), மணிமாறன் (36), விஜயா (59) உட்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
- இவர் மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
திருமங்கலம்
மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சங்கர் கடந்த 9-ந் தேதி திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டிற்கு சென்றார். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கர், சிவகுமார் இவர்களது நண்பர் சிவன்ராஜ்(வயது24) ஆகியோர் செங்குளத்தில் இருந்து திருமங்கலம் செல்லவதற்காக மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமார் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமார் இறந்தார். இதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவன்ராஜூ நேற்று (13-ந் தேதி) சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்தும், நெல்லையில் இருந்தும் நேற்று மாலை 2 ஆம்னி பஸ்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது.
அதேபோல் கொடைக்கானலில் இருந்தும், உடன்குடியில் இருந்தும் 2 ஆம்னி பஸ்கள் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த 4 ஆம்னி பஸ்களும் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் மீது நெல்லையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் மோதியது. அதன்பின்பு கொடைக்கானலில் இருந்தும் உடன்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் உடன்குடியில் இருந்து சென்ற பஸ்சும், கொடைக்கானலை சேர்ந்த பஸ்சும் பலத்த சேதமடைந்தது. இந்த 2 பஸ்களிலும் இருந்த 40பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:-
மருத்துவகல்லூரி மாணவி சுனிதா(21), செழின்(28), வீரராகவன்(40), சந்தானம்(42), மருத்துவகல்லூரி மாணவி மிருதுளா(22), அஜீத்போஸ்(29), பிரியா(38), குருபிரசாத்(37), சாதிக்பாஷா(39), கபாலி(24) உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4 ஆம்னி பஸ்சுகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தேனிக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் பாண்டியன் ஓட்டினார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர்.
மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 9.45 மணிக்கு அந்த பஸ் மதுரவாயல் பைபாஸ் சாலை முடியும் இடத்தில் பெருங்களத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் வலதுபுற விளக்கில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு புகை கிளம்பியது. உடனே டிரைவர் பாண்டியன் சுதாரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். உடமைகளை எடுத்துக் கொண்டு உடனே கீழே இறங்குமாறு பயணிகளிடம் கூறினார்.
பயணிகளும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு உடனே கீழே இறங்கி ஓடினார்கள். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சில் தீ பரவத் தொடங்கியது. திடீரென்று பஸ் கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனால் பஸ்சுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தீவிபத்து பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 35 பயணிகளும் தப்பினார்கள்.
உடனே போக்குவரத்து போலீசார் கிரேனுடன் அங்கு விரைந்தனர். முற்றிலும் எரிந்து சேதமடைந்த பஸ்சை கிரேன் மூலம் எடுத்து பீர்க்கங்கரணை ஏரிப்பகுதியில் கொண்டு நிறுத்தினார்கள். தீப்பிடித்து எரிந்த பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீவிபத்து காரணமாக மதுரவாயல்- பெருங்களத்தூர் சாலையிலும், தாம்பரம்- செங்கல்பட்டு சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் அனஸ் (வயது 20). இவர் மினி வேன் டிரைவர்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்பாஷித் (20), பீர்முகைதீன் (24) ஆகியோர் ஒரு மினி வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர்.
மாநாடு முடிந்ததும் நேற்று நள்ளிரவு அவர்கள் மினி வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். வேனை அனஸ் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் வந்த மினி வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் முன்னால் சென்ற மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மினி வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த அனஸ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த அப்துல்பாஷித், பீர்முகைதீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
புதுச்சேரியில் இருந்து 39 பயணிகளுடன் தூத்துக்குடி புறப்பட்ட தனியார் ஆம்னிபஸ், நேற்று இரவு முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் வழியாக பஸ் வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ் அடியில் சிக்கி காயல்பட்டினத்தை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் (72) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பஸ்சில் இருந்த 29 பயணிகளும் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 12 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் முத்துபேட்டையை அடுத்த தம்பிகோட்டை கீழகாடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 28). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரது நண்பர் மணிபாரதி (25).
இந்த நிலையில் நேற்று 2 பேரும், முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாமணி ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அருகில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கர்ணன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். மணிபாரதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து பற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கலஸ்தம்பாடியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 21), ராணவ வீரர். இவர் நேற்று வீட்டில் இருந்து மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நூக்கம்பாடி என்ற இடத்தில் சென்ற போது ஈரோட்டில் இருந்து எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் மணிவண்ணன் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமதுதன்வீர் டிரைவர் ஓட்டிச் சென்றார். வேலூர் அடுத்த மோட்டூர் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டினார். பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இன்று காலை மதுரை மாவட்டம் மேலுர் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. வஞ்சிநகர் என்ற பகுதியில் வந்த போது ஆம்னிபஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேலுர் சுங்கச்சாவடி மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 20 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாமிகண்ணு மகன் மதன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ஐ.டி. ஊழியர் ஆவார். மேலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.
படுகாயமடைந்த மற்ற 19 பேர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சங்கீதா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.