என் மலர்

    நீங்கள் தேடியது "injured"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி பந்தலூர் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 56). இவர் கூடலூர் அருகே தேவர்சோலை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் பிதிர்காடு வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு தேவாலயத்தை ஒட்டியுள்ள மின்மாற்றியின் மீது ஏறி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு விஜயகுமார் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள், அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறம்பக்குடியில் மரத்தில் வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்
    • போலீசார் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கறம்பக்குடி,

    தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி அருகே புதுவளசலில் உள்ள மாமனார் வீட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்றுப் பாலம் அருகே சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

    இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் சுதாகரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் கைதியை தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
    • திடீரென பெண் கைதி பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம் (வயது48). இவர் அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது மனைவி சரோஜாவையும் கடுமையாக தாக்கி கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் தங்கம் தப்பி ஓடினார். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.

    பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தலைமைக் காவலர் முத்தையா, பெண் காவலர் ராஜேஸ்வரி ஆகியோர் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென தங்கம் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

    கரூர்

    குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மாட்டு தரகர் ஓமாந்து (81). இந்தநிலையில் சிவக்குமார் தனக்கு மாடு வாங்குவதற்காக ஓமாந்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே 2 பேரும் சாலையை கடந்துள்ளனர்.

    அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவர்கள் மீது மோதியது. இதில் சிவக்குமார் மற்றும் ஓமாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.

    இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
    • பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பங்களாபடிகையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55).

    இவர் சம்பவத்தன்று, அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பலாப்பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.

    இதனை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் யானை துரத்தி சென்று அவரை தாக்கியது. இதில் கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    வலியால் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது யானை நின்றதால் அச்சமடைந்த மக்கள், யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டதுடன், வனத்துறையினருக்கும் தகவல் ெகாடுத்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா (37) மூன்று பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    கடைசியில் அந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் பயணம் செய்த மற்ற இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் கண் அயர்ந்து டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பெற்றோர் கழக சங்கத்தினர் இது தொடர்பாக புகார் மனு அனுப்பி உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தினமும் கற்றல் திறனை அதிகரிப்பது மற்றும் பல்வேறு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று, வழக்கம் போல வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை அந்த வழியாக சென்ற ஆசிரியை ஒருவர் பார்த்தார்.

    பின்னர் அருகே சென்று 2 பேரிடமும் சமாதானம் பேசியதுடன், 8-ம் வகுப்பு மாணவரை தனது அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறி விட்டு சென்றார்.

    அதன்படி 8-ம் வகுப்பு மாணவரும் அறைக்கு சென்றார்.

    அங்கு மாணவனை முட்டி போட வைத்து, பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவனின் பெற்றோரிடம் சமாதானம் பேசி, இனிமேல் இதுபோன்று நடக்காது என தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோரும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே ஆசிரியை மாணவனை தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனை அறிந்த பெற்றோர் கழக சங்கத்தினர் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் நல வாரியத்திற்கு இன்று புகார் மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் நல வாரியம் விசாரணை நடத்தும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
    • தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30). இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார்.

    அவர்களுடன் ஜேம்ஸ் மார்ட்டினின் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே காரில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

    காரை ஓட்டி வந்த ஜேம்ஸ்மார்ட்டின் அதனை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. ஆனாலும் வேகம் கட்டுக்குள் வராததால் நிற்காமல் சென்ற கார் தடுப்புசுவரையும் தாண்டி எதிர்திசை நோக்கி பாய்ந்தது.

    அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் அந்த லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் வந்த மூன்று பேர் மற்றும் கண்டெய்டனர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே தாறுமாறாக எதிர்திசையில் பாய்ந்த காரை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சினிமா படப்பிடிப்பில் நடப்பது போன்ற பிரமிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo