search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driver Dead"

    • மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.

    இதில் மினி லாரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
    • விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.

    பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.

    தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர்.
    • திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக பழனி செட்டிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் இருந்தார். பஸ் கொண்டமநாயக்கன்பட்டி 8கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தங்க பாண்டியன் கண் அயர்ந்து விட்டார்.

    அப்போது பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார். கட்டுப்பாட்டை இழந்து சென்ற பஸ் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

    இதனால் தங்கபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் வினோத்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பஸ் பலத்த சேதமடைந்த நிலையிலும், அதில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்
    • கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்

    பல்லடம் : 

    கோவை மாவட்டம் சூலூர் செங்கத்துறை பகுதியைச் சேர்ந்த முருகசாமி என்பவரது மகன் பாலதண்டபாணி (வயது 49). இவர் ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் இவர் வீட்டருகே வசிக்கும் கோபிநாத் ( 36) என்பவர் குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் செல்வதற்காக நேற்று அதிகாலை சூலூரில் இருந்து புறப்பட்டனர். ஆம்னி வேனை பாலதண்டபாணி ஓட்ட, கோபிநாத் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும், குழந்தைகள் இருவர் உள்ளே அமர்ந்திருந்தனர்.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆம்னி வேன் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கற்களில் மோதியது. இதில் ஆம்னி வேன் மேற்கு திசை நோக்கி திரும்பி சாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாலதண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோபிநாத்திற்கு பலத்த காயமேற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம்போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது58) டிராக்டர் டிரைவர். அதே பகுதியில் சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் சகதியில் சிக்கி மூச்சு திணறி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி விஜய் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.
    • பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கல்குளத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 32). லாரி டிரைவர். இவர் குமரி மாவட்டத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு தூத்துக்குடிக்கு வந்தார். ஸ்பிக்நகரில் லாரியை நிறுத்திவிட்டு மடத்தூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்று விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது.
    • தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது48). லாரி டிரைவர். இவர் வேலூரில் உள்ள குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு நாராயணபுரம் வந்தார்.

    பின்னர் மணலை கொட்ட முயன்று டிப்பர் லாரியை இயக்கினார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே டிரைவர் தசரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்த அப்பகுதியில் பல இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாக தெரிகிறது. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
    • பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    செம்பட்டி:

    சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ், சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பம் அனுமந்தபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல், வத்தலகுண்டுவில் இருந்து லாரியில் செங்கல்களை ஏற்றி கொண்டு, தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்த டிரைவர் மாடசாமி (47) என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மாடசாமி படுகாயமடைந்தார். சுமார் 1 மணநேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பஸ்சில் பயணம் செய்த தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் மணி, சிவக்குமார், ரபீக், கிறிஸ்டோபர், சண்முகவள்ளி, சுரேந்திரன், பரமசிவன், முத்துமணி உள்பட 10 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சொக்கலிங்கபுரம், சித்தையன்கோட்டை வழியாக மாற்றுவழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

    • மின் கம்பி ஒன்று உரசியதால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.
    • பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 36). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவரகா பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலையில் ராமர் பஸ்சில் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து கல்லாநத்தம் கிராமத்தில் இறக்கி விட்டார். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் ராமர் ஒரு மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தலாம் என நினைத்து ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் மீது அந்த வழியாக சென்ற மின் கம்பி ஒன்று உரசியது. இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.

    பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • வடமதுரை அருகே விருந்துக்கு சென்ற டிரைவர் திடீரென உயிரிழந்தார்.
    • இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுைர அருகே மொட்டனம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் நெடுஞ்சாலைத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வீரமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்துக்கு சென்றார். சாப்பிட்டுக்கொண்டிரு ந்தபோது திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
    • விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.

    அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×