சீறிய கார்.. தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து- உடல் கருகி ஓட்டுநர் உயிரிழப்பு

மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீறிய கார்.. தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து- உடல் கருகி ஓட்டுநர் உயிரிழப்பு
Published on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.

விபத்தில், கார் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.

மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com