என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுனர் உயிரிழப்பு"

    • மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.
    • காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.

    விபத்தில், கார் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.

    மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர்.

    அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுனர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

    ரகசிய சேவை, கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார்.

    முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    ×