என் மலர்
நீங்கள் தேடியது "fire accident"
- உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
- விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் நேற்று இரவு, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் லாதேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் (41). இவர் ஒரு சிறிய உணவகம் நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
கடந்த வாரம் இவரது உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
பணக்கஷ்டத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி, இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை சஞ்சய்யின் மனைவி ஏற்பாடு செய்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் சஞ்சய்யுடன் அவரது மனைவி அர்ச்சனா தேவி மற்றும் உறவினர் துரு குமார் ஆகியோரும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக சத்ரா மாவட்டத்தின் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி, உறவினர், மருத்துவர், செவிலியர், 2 விமானிகள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சஞ்சய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவரது மனைவியும் பிறரும் அவருடன் சேர்த்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
- இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மீரட்டில் உள்ள இக்பால் என்பவரது வீட்டில் தரைத்தளம் துணிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும், மேல்தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நேற்று மாலை இக்பாலும் அவரது சகோதரரும் தொழுகைக்காக வெளியே சென்றிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
மேல்தளத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியது. வெளியேறும் பாதையில் தீயும் புகையும் சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
வீடு அமைந்திருந்த பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை. நீண்ட தூரத்தில் வாகனங்களை நிறுத்தி, குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.
பாதுகாப்புக்காக ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கதவுகளால், உள்ளே இருந்தவர்களால் வெளியே குதிக்கவோ அல்லது பொதுமக்கள் உள்ளே சென்று காப்பாற்றவோ முடியவில்லை. இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின் கசிவு காரணமா அல்லது கிடங்கில் இருந்த துணிகளில் தீ பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி கிடங்கு நடத்தியதற்காகவும், அங்கு தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் வீட்டின் உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயமடைந்த மற்றொரு நபர் மீரட் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- டேங்கர் லாரி கவிழ்ந்ததில் திரவ வாயு வெளியேறி புகை மண்டலமாக மாறியது.
- பின்னர் திடீரென தீப்பெடித்து எரிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தென் அமெரிக்கா நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் திரவு வாயு டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் புகை சாலையெங்கும் பரவியது. பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. திடீரென புகை மண்டலம் தீயாக பரவியது. இதில் பல கார்கள் சிக்கிக் கொண்டன.
4 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் காயம் அடைதுள்ளது. இந்த விபத்து டேங்கர் லாரி டிரைவரும் உயிரழந்தார். 150 முதல் 200 மீட்டர் வரை பரவிய புகையால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாகின.
- உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
- மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
- கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்தது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
இந்த நிலையில் ஒரே கடையில் 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது.
- பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- கடைகளில் இருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களில் தீ வேகமாகப் பரவியது.
- 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், நேற்று வரை மீட்புப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கராச்சி மால் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பல்வேறு உடல் பாகங்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.
- 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிஸியான எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், இன்று மதியம் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.
சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
- இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
- வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.
மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
- தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்திவிட்டு இரவு 8.30 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
தீ பரவத் தொடங்கியதை அடுத்து ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கினர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக போராடி தீயை அனைத்து உள்ளே சிக்கியர்வைகளையும் மீட்டனர்.
ஆனால் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி உயிரிழந்தார். மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏசி மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
- சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்திலிருந்து டீசல் ஏற்றிக்கொண்டு வாலாஜா ரோடு நோக்கிச் சென்ற சரக்கு ரெயில் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரெயில் தீப்பிடித்ததும் லோகோ பைலட் உடனடியாக அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து திருவள்ளூர் ரெயில் நிலைய மாஸ்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (OHE) மின்சார விநியோகத்தை அணைத்தார்.

சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது. 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரெயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதிவாசிகள் உதவியுடன் 26 டேங்கர் பெட்டிகளை திருவள்ளூர் மார்க்கத்திலும், ஒரு டேங்கர் மற்றும் இரண்டு என்ஜின் உள்பட நான்கு பெட்டிகளை அரக்கோணம் மார்க்கத்திலும் மீட்டனர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பெட்டிகளில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த பகுதியில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் திசை திருப்பப்பட்டன.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. சுமார் 12.60 லட்சம் லிட்டர் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்த தீவிபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மொத்தத்தில், இது ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாலும், ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாலும் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவள்ளூர் கலெக்டர் எம்.பிரதாப் கூறுகையில்,
சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜா சாலை சைடிங்கிற்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தடம் புரண்டது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது.
ரெயிலின் கிட்டத்தட்ட 15 வேகன்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இருப்பினும், பாதிக்கப்படாத இரண்டு வேகன்களில் இருந்து டீசல் மீட்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இரவு முழுவதும் விரைவாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றி மூன்றாவது மற்றும் நான்காவது தண்டவாளங்களை சரிசெய்ததாக அவர் கூறினார்.
- தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டது. தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.
ஆனால் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.






