என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "air ambulance"

    • 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை அழைத்துச் சென்றனர்.
    • வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

    விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.

    அவரை அழைத்துக்கொண்டு, 1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் விமானம் நேற்று இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது.

    மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது.

    அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது 7:34 மணிக்கு, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கசாரியா கிராமப்புற பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த 7 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நோயாளி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    கேரளாவில் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தி, ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து காத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளித்தன. மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை அங்கு 370-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இதற்கிடையே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் நேற்று செங்கனூர் சென்றார். அங்குள்ள முகாமுக்கு நேரில் சென்ற அவர் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா செல்வதற்கு தயாராக இருந்தார். அப்போது அங்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நிவாரணமுகாமில் தங்கியிருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

    இதை கவனித்த ராகுல் காந்தி, தனது ஹெலிகாப்டரை நிறுத்துமாறு கூறினார். முதலில் ஏர் ஆம்புலன்சுக்கு பறக்க அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஆலப்புழாவுக்கு சென்றது. சுமார் அரை மணி நேரம் கழித்து ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் ஆலப்புழாவுக்கு சென்றது.

    ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து தனது ஹெலிகாப்டரை காத்திருக்க செய்த ராகுல் காந்தியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    ×