என் மலர்
நீங்கள் தேடியது "சரக்கு ரெயில்"
- சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.
- இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.
இந்நிலையில், இந்த ரெயில் பாதையில் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவாராவில் இருந்து பிலாஸ்பூருக்கு நேற்று பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, பயணிகள் ரெயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பயணிகள் ரெயில் சிவப்பு சிக்கனலை பொருட்படுத்தாமல் மீறியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ரெயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரெயில்வே துறை சார்பில் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பயணிகள் ரெயில் முன்னால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில்மீது மோதியது.
- இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.
இந்நிலையில், இந்த ரெயில் பாதையில் இன்று பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரெயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.
இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
- 21 பெட்டிகள் அடங்கிய ரெயில் பஞ்சாபில் இருந்து அனந்த்நாக் சென்றடைந்துள்ளது.
- சுமார் 600 கி.மீ. தூரத்தை 18 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளது.
வடக்கு ரெயில்வே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம் ரூப்நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கிற்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் சென்றது. இது குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் சரக்கு ஷெட்டிற்கு முதன்முறையாக சரக்கு ரெயில் இன்று சென்றடையந்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தை தேசிய சரக்கு நெட்வொர்க் உடன் இணைப்பதற்கான குறிப்பிடத்தக்க மைல். இந்த ரெயில் நெட்வொர்க் போக்குவரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் நம்முடைய மக்களின் செலவு குறையும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
21 BCN பெட்டிகள் சிமெண்ட் உடன் சரக்கு ரெயில் சென்றடைந்தது வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்துடன் ஏறக்குறைய 600 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடந்து சென்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
- இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
கிழக்கு மத்திய ரெயில்வே நாட்டின் மிக நீளமான சரக்கு ரெயில் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த ரெயிலுக்கு ருத்ராஸ்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான ரெயில் செல்லும் வீடியோவை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிடியு பிரிவில் உள்ள கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் சரக்கு ரெயில் புறப்பட்டது. இதன் நீளம் சுமார் 4½ கிலோமீட்டர்.
இதுவரை இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே மிக நீளமான சரக்கு ரெயில் ஆகும்.
கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து கர்வா ரெயில் நிலையம் வரை மொத்தம் 200 கிலோமீட்டர் தூரத்தை ருத்ராஸ்திரம் ரெயில் 5 மணி நேரத்தில் கடந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
சரக்கு ரெயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் 6 தனித்தனி வழித்தடங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்,
ஆனால் ருத்ராஸ்திரம் அதிக பெட்டிகளுடன் இயக்கப்படுவது கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
- கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது.
இந்த கட்டணத்தை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் உயர்த்த உள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ரெயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. சரக்கு ரெயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வுக்கு என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது என்றும், எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு இதில் அடங்கும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே கடந்த 1-ந்தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.
- ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேரில் ஆய்வு செய்தார்.
- தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
- சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சரக்கு ரெயிலின் 52 பெட்டிகளில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து சேதமானது. காலை 5 மணிக்கு தீப்பற்றிய நிலையில் தற்போது வரை தீப்பற்றி எரிந்து வருகிறது. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீயில் 70 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலின் டேங்கர்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. தீ பரவுவதை தடுக்கும் வகையில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ அருகே உள்ள நிலங்களில் பரவாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது. ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. விண்ணை முட்டும் புகையுடன் தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இதனால் திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் தீ அணைக்கப்பட்டாலும் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நீங்கி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு 2 நாட்கள் வரையில் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
- அப்பகுதிமக்களுக்கு அமைச்சர் நாசர் உணவு வழங்கினார்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டறிந்தார்.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. சிலிண்டரை எடுத்து செல்ல அப்பகுதி மக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர், மக்களுக்கு உணவு வழங்கினார்.
- தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 60 பேர் கொண்ட 2 குழுக்கள் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- 8 அதிவிரைவு ரெயில்கள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 அதிவிரைவு ரெயில்கள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களில் பட்டியல்:
1. காலை 5.50 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்
2. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரெயில்
3. காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரெயில்
4. காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரெயில்
5. காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில்
6. காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரெயில்
7. காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரெயில்
8. காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாகர்சோல் செல்லும் விரைவு ரெயில்
- ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
* ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பயணிகள் சிரமத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
* அருகிலுள்ள வீடுகளில் உள்ள மக்களையும் முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






