என் மலர்
நீங்கள் தேடியது "Indian Railway"
- Watch Railway Cop Snatches Woman's Phone On Train To Teach Lesson Video Viral
- போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்ததால் பெண் பெருமூச்சு.
ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள் தங்கச் செயின் அணிந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும். செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ரெயில் அதிகாரிகள் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இருந்தபோதிலும் சிலர் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண் அஜாக்கிரதையாக இருப்பதை கவனித்த ஆர்.பி.எஃப். அதிகாரி ரிது ராஜு சவுத்ரி என்பவர், ரியலாக பாடம் கற்பிக்க வரும்பினார்.
அந்த பெண் போனில் மூழ்கியிருக்க, அதிகாரி ரிது அதை கவனித்து சற்றென்று பறித்துவிடுவார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ந்து வெளியில் பார்ப்பார்.
அதன்பின் அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வெளியாகி, அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- முன்பதிவு செய்த பின், தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
- டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தொகை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.
ரெயில்களில் பயணம் செய்ய இந்திய மக்கள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லை என்றால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இவர்கள் டிக்கெட் ரத்து செய்துதான், மாற்று தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரியில் இருந்து, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. இதை இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எனினும், மாற்று தேதிக்கான டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- மத்திய பிரதேச மாநிலத்தில் பாம்புடன் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார்.
- திடீரென பாம்பை காட்டி பணம் வசூலிக்க தொடங்கியதால், பயணிகள பயத்தில் உறைந்தனர்.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ரெயில் நிலையத்தில் ஒருவர் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பாம்பை காட்டி பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்துபோய், பணம் கொடுத்துள்ளனர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர் மீது ரெயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ எடுத்த நபர், ரெயில்வேக்கும் புகார் அளித்துள்ளார். அதற்கு ரெயில்சேவா எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது. அத்துடன் "உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
- அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை .
- நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் இந்த சலுகை தொடரும்.
இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவார்கள்.
ரெயில் பயணிகள் வசதி பெறும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ரிட்டன் பயணம் மேற்கொள்ளும் வகையில் டிக்கெட் எடுத்தால் அதற்கு (ரிட்டன் டிக்கெட்டிற்கு மட்டும்) 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும். அதேபோல் நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கான முன்வதி வருகிற 14ஆம் தேதி தொடங்கும். தற்போது உள்ள நடைமுறையின்படி 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி என்ற அடிப்படையில் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது.
வழக்கமான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் விவரம், ரெயிலில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அட்வான்ஸ் ரிசர்வேசன் காலம் ரிட்டன் டிக்கெட் செய்வதற்காக 60 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்கப்படாது. அந்த 60 நாட்களுக்குள் ரிட்டன் பயணமும் சேர்ந்தால் போன்று இருக்க வேண்டும்.
- ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
- இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
கிழக்கு மத்திய ரெயில்வே நாட்டின் மிக நீளமான சரக்கு ரெயில் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த ரெயிலுக்கு ருத்ராஸ்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான ரெயில் செல்லும் வீடியோவை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிடியு பிரிவில் உள்ள கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் சரக்கு ரெயில் புறப்பட்டது. இதன் நீளம் சுமார் 4½ கிலோமீட்டர்.
இதுவரை இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே மிக நீளமான சரக்கு ரெயில் ஆகும்.
கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து கர்வா ரெயில் நிலையம் வரை மொத்தம் 200 கிலோமீட்டர் தூரத்தை ருத்ராஸ்திரம் ரெயில் 5 மணி நேரத்தில் கடந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
சரக்கு ரெயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் 6 தனித்தனி வழித்தடங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்,
ஆனால் ருத்ராஸ்திரம் அதிக பெட்டிகளுடன் இயக்கப்படுவது கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 74 ஆயிரம் ரெயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் ரெயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
- முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை ரெயில்வே கொண்டுவர உள்ளது.
இந்தியன் ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகிறது. சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு உள்பட பல்வேறு புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக ரெயில் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
74 ஆயிரம் ரெயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் ரெயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. என்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு என்ஜினிலும் 6 அதிநவீன கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில், ரெயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகள் தத்ரூபமாக பதிவாகும்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். ஒரே நேரத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க ஏராளமானோருக்கு டிக்கெட் வழங்கியதால் இந்த சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை ரெயில்வே கொண்டுவர உள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, நீண்ட தூர ரெயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.
முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால், தினந்தோறும் ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
- விரைவு ரெயில்களில் கி.மீ.-க்கு 1 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை.
மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களின் அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண ரெயில்களின் இரண்டாம் வகுப்பு கட்டணம் 500 கி.மீ. வரை உயர்த்தப்படவில்லை. அதே சமயம் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரை பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1500 கிமீ தூரம் பயணம் செய்பவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.5 அதிகரிக்கும்.
ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரெயில் கட்டணம் சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு.
- அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு.
ரெயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் விலை உயர்த்தப்படும் என ரெயில்வேத்துறை அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது. அதன்படி நாளை முதல் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
ரெகுலர் ஏ.சி. அல்லாத வகுப்புகள் (Non-Suburban Trains)
இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம்: கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்வு
500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை.
501 - 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5 உயர்வு.
1500 - 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 உயர்வு.
2501 - 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு
முதல் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு
மெயில் மற்றும் விரைவு ரெயில்கள்
2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு
அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை.
- ரெயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும்.
- இதனால் பயணிகளுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றம் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இது பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரெயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது.
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும். தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
- ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
- 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய 80 சதவீத பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரெயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 5 ரெயிலின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரங்கள்
1 - 22861 ஹவுரா - தித்லாகார்க்- கண்டாபஞ்சி எக்ஸ்பிரஸ்
2- 08015/ 18019 கராக்பூர்- ஜார்கிராம்- தன்பந்த் எக்ஸ்பிரஸ்
3- 12021/ 12022 ஹவுரா- பர்பில் - ஜன் ஷடப்தி எக்ஸ்பிரஸ்
4 -18109 டாடாநகர் - இத்வாரி எக்ஸ்பிரஸ்
5- 18030 ஷலிமார் - LTT எக்ஸ்பிரஸ்
- பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.
- 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.
பாராளுமன்றத்தில் சிபிஐ (எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஃப்ளெக்சி கட்டணம், தட்கல் மற்றும் பிரீமியர் தட்கல், டிக்கெட் ரத்து ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்த தகவல் கடந்த ஐந்தாண்டுகள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அதன்அடிப்படையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் "ஃப்ளெக்சி கட்டணம், தட்கல், பிரீமியர் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.
பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும்போது கிளெர்க்கேஜ் சார்ஜ் தவிர்த்து முழுமையாக டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு 60 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
- மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
- சக பயணிகள், மாணவர்களிடமும் பிரதமர் மோடி கலநத்துரையாடினார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், அகமதாபாத் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
பச்சை கொடி காட்டி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பின்னர், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார். சக பயணிகள், மாணவர்களிடமும் அவர் கலநத்துரையாடினார்.
இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது.
110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.
வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.
இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.
இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.
புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.






