search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே இந்த சுரங்கப் பாதை அமைகிறது
    • செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா நகரை 27 நிமிடத்தில் அடைந்து விடலாம்

    மெட்ரோ ரெயில் சேவை திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை, கொல்கத்தாவில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 6 அன்று தொடங்கி வைக்கிறார் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நதிக்கு அடியில் ரெயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தா நகர மக்கள் பெற உள்ளனர்.

    520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழே இந்த சுரங்க பாதை அமைகிறது.

    இந்த சுரங்கப்பாதையின் உள்-விட்டம் 5.55 மீட்டராகும்; வெளிப்புற விட்டம் 6.1 மீட்டராகும். ஹூக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கி உள்ளனர்.

    பயணிக்கும் போது சுமார் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே பயண நேரம் அமையும்.


    கொல்கத்தா மக்களுக்கு இது கணிசமாக பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, கிழக்கு கொல்கத்தாவில் இருந்து செக்டார் வி (Sector V) எனும் இடத்திலிருந்து ஃபூல்பகன் (Phoolbagan) எனும் இடத்திற்கு இடைப்பட்ட 6.97 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பசுமை தட (Green Line) மெட்ரோ சேவை, இப்புதிய நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதும், ஹூக்ளி நதியின் கீழே, செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா (Howrah) நகரை 27 நிமிடத்தில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஹூக்ளி நதிக்கு 35 மீட்டருக்கு கீழே தடையில்லாத இணைய சேவை வழங்கப்படும் என இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் (Airtel) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரெயில் நிலையமாக ஹவுரா ரெயில் நிலையம் உருப்பெறும். அத்துடன் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ சேவையாகவும் இது விளங்கும்.

    • சுவிஸ் ரெயில்வே 5,200 கி.மீ. தட நீளத்துடன் சேவை செய்கிறது
    • இந்தியாவில் ஒரே ரெயில் நீண்ட தூர சேவை வழங்கும் கட்டமைப்பு உள்ளது

    உலகளவில் சிறப்பான ரெயில்வே சேவைக்கு சுவிட்சர்லாந்து புகழ் பெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டு ரெயில் சேவையின் காலந்தவறாமை மிகவும் பிரபலமானது.

    ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து கட்டமைப்புகளில், சுவிட்சர்லாந்தின் ரெயில் பாதை கட்டமைப்பு 5,200 கிலோமீட்டர் ஆகும்.

    சுவிட்சர்லாந்தின் ரெயில் கட்டமைப்பு "ஹப் அண்ட் ஸ்போக் மாடல்" (hub and spoke model) எனப்படும்.

    இந்த அமைப்பில் ஒரு நகர் "ஹப்" என இயங்கும். அந்த நகருக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல ரெயில்கள் பல தடங்களில் (spokes) வந்து சில மணி நேரங்கள் நிற்கும்.

    இதன் மூலம் ஒரே ரெயில் நிலையத்தில், ஒரே நேரத்தில், பயணிகள் வேண்டிய ரெயில்களில் ஏறவும், மாறி கொள்ளவும் முடியும்.

    பிறகு அனைத்து ரெயில்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்த வடிவத்தின் மூலம் பல பயணிகள் மிக சுலபமாக வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.

    அந்நாட்டில் 6 ஹப்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து ரெயில்களும் நேரந்தவறாமல் சிறப்பாக இயங்குகின்றன.

    இதை தவிர, ஒவ்வொரு ஹப்-பில் இருந்தும் வேறொரு ஹப்-பிற்கு செல்ல சிறப்பான உள்ளூர் போக்குவரத்தும் உள்ளது.

    ஆனால், இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள வேறொரு ஊருக்கு ஒரு ரெயில் எனும் வகையில் ரெயில்வே கட்டமைப்பு உள்ளது.

    இந்திய ரெயில்வே சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து ரெயில்வே துறையிடம் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


    உதாரணத்திற்கு, சுவிஸ் மாடலில் திருச்சி ரெயில் நிலையம் "ஹப்" போன்று இயங்கும்.

    சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து ரெயில்கள் ஒரே நேரம் திருச்சியில் வந்து நிற்கும். சில மணி நேரம் கழித்து, அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு ஒரே நேரம் ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

    இத்திட்டத்தின்படி குறைந்த தூரத்திற்கு பல ரெயில்கள் இயக்க முடிவதால், ரெயில்களில் இடம் கிடைப்பதும் பயணிகளுக்கு சுலபமாக இருக்கும்.

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
    • இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    இந்நிலையில், இரட்டை என்ஜின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் கிடைத்த வெற்றி இது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
    • போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

    ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது.
    • தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரெயில் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தற்போது இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது. இது அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக, நமக்கு 3,000 கூடுதல் ரெயில்கள் தேவை. இது அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பல பயணங்களை மேற்கொள்ளும்' என தெரிவித்தார்.

    இதைப்போல ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து ரெயில் தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல.
    • பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    புதுடெல்லி :

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று காட்டமாக விமர்சித்தார். அக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கார்கே வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிலையில், அவருக்கு ரெயில்வே மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் பற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தையும், மனப்பான்மையையும் காட்டுகிறது. தனிப்பட்ட விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கைவிடவில்லை என்று தெரிகிறது.

    முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஒரு தடவை பிரதமர் மோடியை 'பிறர் வாழ்க்கையுடன் விளையாடுபவர்' என்று கூறினார்.

    தார்மீக அதிகாரம் என்று வரும்போது, பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் சரியான திசையில் நாட்டை அழைத்துச் செல்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.

    தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தான் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான காரியத்தை அவர் செய்கிறார். தனது விருப்பத்தை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
    • தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
    • 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது.

    புதுடெல்லி :

    நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.

    2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கியதில் அந்த ஆண்டு சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அனைத்து நிறுவனங்களும் தனது காலுக்கு கீழே இருப்பதாக ராகுல் நினைக்கிறார்.
    • பா.ஜனதா கட்சியினர், காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி :

    அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதை குறைகூறியுள்ள ஆளும் பா.ஜனதா கட்சியினர், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ராகுல் காந்தியையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

    அந்தவகையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால், நாட்டை ஆள்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி நம்புகிறார். அரசியலமைப்பு, கோர்ட்டு மற்றும் நாடாளுமன்றத்திற்கு மேலாக தன்னைக் கருதுகிறார்.

    அனைத்து நிறுவனங்களும் தனது காலுக்கு கீழே இருப்பதாக அவர் நினைக்கிறார். அதனால்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீதான அவரது அவதூறுக்கு கோர்ட்டு தண்டனை விதித்தது மற்றும் அதைத்தொடர்ந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது போன்றவற்றால் அவர் வருத்தத்தில் உள்ளார்.

    நாட்டின் வளர்ச்சிக்காக புதிய வீரியத்துடன் செயல்படும் தற்போதைய அரசாங்கத்தை தாக்குவது என்ற ஒரே இலக்குடன் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

    இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மந்திரி சபையால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஒன்றை ராகுல் காந்தி கிழித்து எறிந்ததையும் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.

    ×