என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
    • பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

    டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.

    5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது.

    இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது.

    மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.

    நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமான ஒன்று.

    மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யை ஆதரிப்பது இன்னும் வெட்கக்கேடானது.

    மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

    இதை குறிப்பிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதவில், இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.  

    • 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.

    டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.

    5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.

    பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர்.

    லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.

    இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மக்களின் வருகை அதிகமாக இருந்தது. புகார்களை உடனுக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் கருத்துகளைக் கொண்டு எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீர் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தக் குளறுபடிகளை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அரசின் தவறான நிர்வாகத்தைக் காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது" என்று தெரிவித்தார்.   

    • ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியுள்ளது.
    • நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டில் ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் கூறியுள்ளது அடிப்படை ஆதாரமற்றது.

    மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை. திண்டிவனம் - செஞ்சி திருவண்ணாமலை ரெயில் திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

    • மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.






    ------------------

    ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தமிழகத்திற்கு 2 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கம்.

    சென்னை-ஐதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை- பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரெயில் இயக்கம்.

    தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் ரெயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

    ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.

    ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.

    பெரும்பாலான ரெயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை.

    மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சை-மன்னார்குடி ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர்.
    • கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    எக்ஸ் தளத்தில் உள்ள Grok செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெண்களை தவறாக சித்தரிக்க பயன்படுத்தப்படுவது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி, மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவரது கடிதத்தில், "

    சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவெடுத்துள்ளது.

    எக்ஸ் தளத்தின் 'Grok AI' வசதியைப் பயன்படுத்தி, ஆண்கள் சிலர் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுகின்றனர்.

    பின்னர் அந்த Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர். Grok ஏஐயும் அப்பெண்களின் ஆடைகளை குறைகிறது.

    இது சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றும் பெண்களையும் குறிவைத்து நடத்தப்படுகிறது.

    மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    இது பெண்களின் தனியுரிமையை மீறுவதுடன், அவர்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதுமாகும்.

    பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக இந்தத் தளம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் ஏஐ செயலிகளில் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் அமைச்சராக வலுவாக வலியுறுத்த வேண்டும்.

    இதே போன்ற போக்குகள் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தளங்களிலும் எந்தத் தடையுமின்றி அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம்.

    பொதுவெளியிலும் டிஜிட்டல் முறையிலும் பெண்களின் கண்ணியம் மீறப்படுவதை நம் நாடு வேடிக்கை பார்க்க முடியாது.

    மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இதை எடுத்துரைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    புல்லட் ரெயில் திட்டம் குறித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும். புல்லட் ரெயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி - சூரத், வாபி - அகமதாபாத், தானே - அகமதாபாத், மும்பை - அகமதாபாத் வரை விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

    • சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும்
    • 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும்

    மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. 

    மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர்  இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆறுவழிச்சாலை மும்பை - சென்னை மற்றும் சூரத் - சென்னை பொருளாதார வழித்தடங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் பாதையில் 27 பெரிய பாலங்கள், 164 சிறிய பாலங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாசிக், அஹில்யாநகர் , தாராசிவ் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்கள் வழியாக செல்லும்.

    ரூ.1,526 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம், கனிம வளம் நிறைந்த அதேசமயம் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினிய உற்பத்தி போன்ற தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், சந்தை வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள காபி சாகுபடி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் உறுதுணையாக அமையும் என கூறப்பட்டுள்ளது. 

    இதில் ஒடிசாவின் மோகனாவிலிருந்து கோராபுட் வரையிலான 206 கி.மீ தொலைவு கொண்ட நெடுஞ்சாலை பலப்படுத்தப்பட்டு இரு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

    ×