search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Obscenity"

    • ஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் புகார் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் வேல்முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.
    • தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 38). இவரது கணவர் சிவராஜா. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  ஹேமாவதியின் தந்தை பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹேமாவதி சைக்கிளில் தனது தந்தையை பார்க்க சென்றார்.

    அப்போது, மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்களில் சென்று, ஹேமாவதியிடம் ஆபசமாக பேசி மோட்டார் சைக்களில் ஏறுமாறு கூறிய தாக தெரிகிறது. இது குறித்து, ஹேமாவதி நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹேமாவதி கூறிய மர்ம நபரின் அடையாளங்களை வைத்து திருவாரூர் மாவட்டம் பாவட்ட குடியைச்சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

    • காரைக்காலில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு நல்லாத்தூர் கடைவீதி அருகே, பொது இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் ஆபாச மாக பேசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 பேர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, போலீசார் அந்த 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்க ளில் 4 பேர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச்சேர்ந்த சத்தியராஜ்(வயது30), சிலம்ப ரசன்(32), சசிகுமார் (28), மதன்ராஜ்(30) மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த சுரேஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய ரகளை யில் ஈடுபட்ட குற்றத்தி ற்காக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் ஆசாரிதெரு அருகே பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய கலையரசன்(20) சூரியா(22) ஆகிய 2 பேரை திரு.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

    ×