என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
- சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருவாரூர்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).
இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
- இளம்பெண் தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசில் தெரிவித்துள்ளார்.
- வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடியினர் கடந்த 20-ந் தேதி அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாலிபரின் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர்.
மறுநாள் வாலிபர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வாலிபரின் தாயாரும், புதுப்பெண்ணும் இருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர் வந்துள்ளனர். அவர்களிடம் அந்த பெண் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வாலிபரின் தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் மாயமாகி இருந்தனர்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வாலிபர், இளம்பெண் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கோட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் திருமணம் ஆன மறுநாளே எனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இளம்பெண்ணையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தன்னை திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை என்றும், பெற்றோருடன் செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
இளம்பெண்ணின் முடிவை கேட்டு அவரை திருமணம் செய்த வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.
- பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார்.
- சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
சேலம்:
மங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை செல்ல ரெயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏறினார். பின்னர் அவர் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார். அவர் அதற்கான அனுமதி சீட்டையும் வைத்திருந்தார்.
ஆனால் அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் இருந்த பயண அனுமதி சீட்டை பிடுங்கி கொண்டு என்னிடம் கேட்காமல் எப்படி ரெயிலில் ஏறலாம் என்று கூறியபடி தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய அவர் ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிக்கெட் பரிசோதகரை எச்சரித்தனர். இதனால் சற்று அமைதியான டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஓடும் ரெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேவகோட்டையில் அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
- பள்ளிக்கு செல்ல தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயில சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து நகர் பஸ்கள் மட்டும் வாயிலாக வந்து செல்கின்றனர்.
தேவகோட்டை பணி மனையில் சுமார் 27க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சரிவர பஸ்கள் இயக்கப்படாததால் பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.
தேவகோட்டையில் இருந்து கோட்டூர் காரை வழியாக செல்லும் வெற்றியூர் நகரப் பேருந்து இயக்கப்படாததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூ ரிகளுக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவல நிலை உள்ளது. சிலர் சரக்கு வாகனங்களில் பள்ளிக்கு செல்கின்றனர். அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பள்ளிக்கு தாமதமாக செல்வதும், இதனால் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
நகர பேருந்துகள் தரம் குறைந்தும் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்பதாலும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பற்றாக் குறையாலும் நாளுக்கு நாள் நகரப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. நகர பேருந்துகளை மட்டும் நம்பி உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் சரிவர இயக்கினால் மட்டுமே மாணவ-மாணவிகள் கல்வி கற்க செல்ல ஏதுவாக அமையும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும்.
- 2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 044-45674567, கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ல் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீரை அகற்றுதல் தொடர்பாபன புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

- செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.
- அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள பழைய வேங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மனைவி ஆனந்தநாயகி (வயது 50). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் நின்று, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.
அப்போது பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆனந்தநாயகியை பார்த்து ஓசியில் பஸ் ஏற வந்துட்டியா, பஸ்சை விட்டு கீழே இறங்கு என அசிங்கமாக பேசியதோடு ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆனந்தநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் அரசு பஸ் கண்டக்டர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.
பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்ய வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருள்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .
எனவே, நுகர்வோர் உணவு பொருள்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருள்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 எண்ணிற்கு வாட்சாப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- ஜனா என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கடலூர் ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த தண்டுபாளையம் காலனியை சேர்ந்த ஜனா (வயது 25) என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார். காசு கொடுத்தால் தருவேன் என பிரவீன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனா, சோடா பாட்டிலை எடுத்து பிரவீனின் தலையில் அடித்து பொருட்கள் தரவில்லை என்றால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசில் பிரவீன் கொடுத்த புகாரின் போரில் பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
- ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார்.
அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.
பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.