search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allegation"

    • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
    • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தலின்போது தி.மு.க. அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்
    • துறையூர் நடைபயணத்தில் பேச்சு

    துறையூர்,

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று துறையூர் சட்டமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    துறையூர் சட்டமன்ற தொகுதியில் துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பெரிய கடை வீதி, பாலக்கரை,திருச்சி ரோடு வழியாக சென்று துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தனது நடை பயணத்தை முடித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திமுக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக துறையூர் பகுதியில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தி.மு.க.வினரால் பலமாக தாக்கப்பட்டார்.

    வருவாய் துறையில் பணிபுரியும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் நிலையில் உள்ளது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சொல்லும் படி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. குரல் கொடுத்த உடன் விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டது. இதிலிருந்தே விவசாயிகளின் மீது தி.மு.க.விற்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க.வில் உள்ள பல நபர்களுக்கு சொந்தமாக மருத்துவ கல்லூரி இருப்பதால், தங்களிடம் உள்ள சீட்டுகளை விற்பனை செய்ய முடியாததால், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பி.எம். கிசான் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 55 ஆயிரம் கோடி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.

    ஆனால் தி.மு.க.வோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 511 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இது நாள் வரை அதில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதாரணமாக துறையூர் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை, அரசு கலைக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறியும், இதில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

    தற்சமயம் தமிழக முழுவதும் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அனைத்து இளைஞர்களும் வாக்காளராக பதிவு செய்து மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி 3-வது முறையாக பிரதமராக அமர பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் பட்டியலின அரசு பெண் ஊழியருக்கு சாதிய வன்கொடுமை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • இளமுருகு முத்து கண்டனம்

    புதுக்கோட்டை,

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,இந்த சூழலில் காவல்துறை நடவடிக்கையை துரித படுத்தாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.கடந்த அக்டோபர் மாதம் 20 -ந் தேதி புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் சுகந்தி என்ற பட்டியலின அரசு ஊழியரை அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஆதிக்க சமுகத்தை சேர்ந்த நபர் அவருடைய ஜாதியை சொல்லி அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.இதனால் மன உழைச்சளுக்கு ஆளான சுகந்தி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் மேலும் புதுக்கோட்டை துணை காக்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு அளித்துள்ளார்.இது நடந்து ஒரு மாத காலமாகியும் காவல் துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேங்கை வயல் சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் ஒரு குற்றவாளிகள் கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்களில் காவல் துறை பாரமுகம் காட்டுவது வேதனை அளிக்கிறது.இந்த விஷயத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கையில் எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு என ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன், மாவட்ட நிர்வாகி கள் திருப்பதி, வெற்றி வேல், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர்மணிமாறன் வர வேற்றார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கி றார்கள். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக, செயல்பாடத அரசாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்காத அரசாக தி.மு.க. உள்ளது. தன்னுடைய வாரிசுகளை மட்டும் பற்றி சிந்திப்பதை கடமையாக கொண்டுள்ள முதல மைச் சரை இந்த நாடு பெற்றி ருப்பது வேதனை யிலும் வேதனையாக உள்ளது. மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியோடு இருக்கி றார்கள்.

    பூத் கமிட்டி உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் எதிர்ப்பு களை வாக்குகளாக மாற்ற முடியும். களத்தில் நின்று போராடி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இயக்கத்தின் ஆணிவேராக கட்டிக் காக்க கூடியவர்கள் இயக்கத்தின் கிளை செயலா ளர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான். எனவே உங்களை எப்போ தும் வலிமையோடு வைத்தி ருக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடியார் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், தக்காளி முருகன், விசு, ஜெயராமன், மலைச்சாமி, பிச்சை, மூர்த்தி, செந்தில், பாலாஜி, பாஸ்கரன், கருப்பட்டி ராமநாதன் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    • இளைஞர்களை ஏமாற்றி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது தி.மு.க. என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்
    • ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற யாத்திரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசினார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 104-வது பாத யாத்திரையை தொடங்கினார். புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு சந்திப்பு வரை அவர் யாத்திரை மேற்கொண்டார்.

    அவர் சென்ற வழி அனைத்திலும் ஏராளமான பொதுமக்கள் குறை கேட்டு அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார். யாத்திரையின் முடிவில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் பதவியேற்கும் போது தமிழ்நாடு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறவில்லை இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வி இல்லை விவசாயிகளுக்கு. விவசாயத்தில் எந்த பயனும் இல்லை.

    மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் குடும்பமும், மருமகன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளார்.

    நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் டொனேஷன் இல்லாமல் பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவ கல்லூரிலே சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க .இளைஞர்களை ஏமாற்றும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

    இளைஞர்களை முன்வைத்து நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களில் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. 23 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டிலே தீபாவளி அன்று மட்டுமே சாராயம் டாஸ்மாக்-ல் விற்கப்பட்ட சாராய மூலமாக 11 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    மதுவிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியை மக்கள் எல்லாரும் முன் வைக்கின்றனர். அதேபோல்இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், இது போன்ற ஊழல் அமைச்சர்களை பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டில் அவர்கள் வாக்குறுதியான 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.மேலும் இவர்கள் வாங்கிய கடனை ஏழை விவசாயிகள் நீங்கள் தான் கட்ட வேண்டும்.

    ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் எஸ்.கே.ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் ராமர் உள்ளிட்ட மாநில, மாவட்ட மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார்

    கரூர்

    கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.

    முன்னதாக தோகைமலை மணப்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பிரிவு சாலையில் இருந்து தோகைமலை பஸ் நிலையம் வரை அண்ணாமலை பாதயாத்திரை வந்தார். அப்போது மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாக மலர்கள் தூவப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 513 வாக்குறுதிகளை அளித்து 20 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. கருணாநிதியின் முதல் தொகுதி குளித்தலை. அப்போது, தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து குடகனாறு மூலமாக தோகைமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை.

    ஏழை மக்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. மக்கள் பணத்தை தி.மு.க. கொள்ளை அடித்து வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு கண்டக்டராக தொடங்கிய வாழ்க்கை தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து கல்லூரிகள் நடத்தி வருகிறார். எங்கிருந்து சம்பாதித்தார். தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை தொகுதியில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் ஊழல்வாதிகள் என்று கூறி அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று பேசினார்.தமிழகத்திலே 3-வது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. சுமார் 1356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், அந்த ஏரியின் மூலமாக 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயனடைவர்.

    காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஏரியில் நிரப்பி விவசாயிகள் பயனடையும் வகையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக டாஸ்மாக்கில் தண்ணீராக ஓடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்தி வருகிறார்.பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள மக்களே குடும்பம் என அவர்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தற்போது 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என அமைத்து குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் அனைத்து கட்சிகளும் அந்த மாலை யாருக்கு விழும் என நினைத்து இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் ஒவ்வொருத்தரும் பூவை பிச்சி எடுப்பது போல் இந்தியா நாடு ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், குளித்தலை நகரத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சக்திவேல், மாநில விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தோகைமலை மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், தெற்கு மாநகர தலைவர் ரவி, கவுன்சிலர் சரண்யா, கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்.
    • தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    கோவை,

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பில் செல்வபுரம் தெலுங்குபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு 76-வது வட்ட செயலாளர் கேபிள் கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, டி.சக்திவேல், பகுதி செயலாளர்கள் தி.மதனகோபால், வி.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ரவி மரியா, பழக்கடை மூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி–காந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    எடப்பாடியார் பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்.

    அ.தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் 2½ ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

    தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.காவிரி பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராடாமல் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஏமாந்து வாக்களித்ததாக மக்கள் கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வ துரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஜெகநாதன், கே.கிருஷ்ணராஜ், ஏ.சுந்தர் ராஜ், ரவி(எ) காளிச்சாமி, ஆடலரசு, கே.எஸ்.ஷங்கர், ஏ.விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், ஏ.செல்வராஜ், டி.கே.கார்த்திகா பிரகாஷ், பி.கனகராஜ், மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவகுமார், மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், ஆவின் எஸ்.முருகன், செபி செபாஸ்டியன், முத்துஇள ங்கோவன், சுரேஷ்குமார், அப்துல்ரகுமான், வட்ட கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, எம்.புல்கான், கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்டி.கதிரேசன், ரவி நடராஜன், கே.சுப்பிரமணியம், சி.ஜனார்த்தனன், எஸ்.சி.செல்வராஜ், ஹரி, பிரகாஷ், வினோத், கே.ஏ.காட்டுத் துரை, கேபிள் ஐ.பஷீர், என்.வேலுமயில், மு.குஞ்சாலி, கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப், கேபிள் சரவணன், சி.கே.விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், சி.தர்மராஜ் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி துணை செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.

    • ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
    • மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

    இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

    திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.

    தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.

    இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.

    அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?

    ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.

    ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.

    மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.

    உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.

    பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    • நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    மிர்புரி:

    இந்தியா-வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

    பரபரப்பான இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியன்றி 'டை'யில் முடிவடைந் தது. முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது.

    இந்தப் போட்டி'டை'யில் முடிந்ததில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. இதனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதல் ஆட்டத்தில் வங்காள தேசமும் (40 ரன்), 2-வது போட்டியில் இந்தியாவும் (108 ரன்) வெற்றி பெற்று இருந்தன.

    3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் நடுவர்களின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இரு அணிகளுமே மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். வங்காள அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடினார்கள். இடையில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கொடுத்து விட்டோம்.

    நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பரிசளிப்பு விழாவின்போது வங்காளதேச கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்தனர்.

    இவ்வாறு ஹர்மன் பிரீத் கவூர் கூறியுள்ளார்.

    • பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.
    • சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

    எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

    இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

    இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

    இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

    இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

    தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு முதல்- அமைச்சர் இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • இயல்பான விபத்தல்ல. நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து.

    கடலூர்:

    சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படவுள்ளது. மறைந்த முன்னாள் தலை வர் இளைய பெருமாள் சமூக பணியை அறிந்து தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவருக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். . இந்த நூற்றாண்டு மிகப்பெரிய விபத்து ஓடிசா ரெயில் விபத்தாகும். 275 பேர் இறந்துள்ளனர். ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில் இந்த விபத்திற்கு காரணம் மனித தவறுதான். அதனை கையாண்ட அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள். மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இது இயல்பான விபத்தல்ல. நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து. இதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்தில் பற்றி எரியும் கருத்தாக உள்ளது. தமிழ கத்தை பொறுத்தவரை காவிரி என்பது நம் உயிர் மூச்சு. காவிரி நதி தோன்றி யதிலிருந்து தமிழகத்திற்கு பலனும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பருவ மழை காலங்களில் 20 லட்சம் கன அடி வரை தமிழக காவிரி டெல்டா கடை மடை பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் 177.25 கன அடி நீர் தமிழ கத்திற்கு வழங்க வேண்டும் என அறி வித்தது. அதில் குறைவு ஏற்படக்கூடாது. குறைவு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும். நீரை பெற நமக்கு உரிமை உள்ளது. பாஜகவினர் தமிழக காங்கிரசை விமர்சிக் கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருந்த போது அன்றைய முதல்வர் பொம்மை மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். அப்போது ஏன் தமிழக பா.ஜனதா எதிர்க்க வில்லை. அப்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் எதிர்த்தது. மேலும் 2017-ம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை அமைச் சகம் அனுமதி அளித்தது. 2018 நவம்பர் 22-ல் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது பா.ஜனதா அரசு. அதற்கு தமிழக பா.ஜனதா பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகஅரசு அனுமதி மற்றும் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டக்கூடாது. சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்து நரேந்திரமோடி நாடாளுமன்றத்தை திறந்துள்ளார் . இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    முன்னதாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் தில்லை மக்கீன் வரவேற்றார். மாநில செயலாளர் சித்தார்த்தன், சேரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமின் ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், ஜோதி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் செந்தில்வேலன், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், செழியன் மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்
    • எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதி கோவைப்புதூரில், அ.தி.மு.க. துணை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான டி.ரமேஷ் ஏற்பாட்டில் நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. வேலுமணி எம்.எல்.ஏ., திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் நீர்மோர் வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-

    அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள்.

    ஆனால் விடியா தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டு காலங்களில் எந்த திட்டங்களையும் தரவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    கோவையை பொறுத்த வரை அதிமுக ஆட்சி காலத்தில் பாலங்கள், சாலைகள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

    தற்பொழுது எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. சாலைகள் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் கூட இருந்து விட்டோம். பல போராட்டங்களையும் ஆர்ப் பாட்டங்களையும் நடத்தி விட்டோம்.

    தற்பொழுது கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி யானது போதுமானதாக இல்லை. இந்த அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.

    இனியாவது இந்த திமுக அரசு விழித்துக் கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக தமிழகமெங்கும் இன்றைய தி.மு.க அரசின் மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இப்போது தேர்தல் வைத்தாலும் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும். மக்களை புரிந்த எடப்பா டியார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் சுண்டக்காமுத்தூர் பகுதி செயலாளர் வி.குலசேகரன், குனிய முத்தூர் பகுதி செயலாளர் மதனகோபால், பகுதி தலைவர் கே.ஆர். செல்வராஜ், வட்ட கழக செயலாளர்கள் தமிழரசி கே. சுப்பிரமணியன், சி.ஜனார்த்தனன், எஸ்டி.கதிரேசன், பிரகாஷ், எஸ்.சி. செல்வராஜ் மற்றும் வட்ட கழக துணை செயலாளர் பி.நித்தி யானந்தம், நிர்வா கிகள் ஓம் சக்தி தேவராஜ், ஜெயபால், ராஜசேகர், வடிவேல், ஜீவானந்தம், குமார், ஆவின் மண்டல செயலாளர் ஆவின் எஸ்.முருகன், அம்மா பேரவை பகுதி செயலாளர் ஜி.எம்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×