search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rb udayakumar"

    • ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
    • கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா ரூ.100 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.அதனை தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

    2021-ம் ஆண்டில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்கினார். அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கினார்.

    பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வாழ்வாதார திட்டமாகும். ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேட்டிகளும், ஒரு கோடியே 86 லட்சம் பெண்களுக்கு சேலைகளும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    பொங்கல் தொகுப்பின் மூலம் நெசவாளர்களும் பயன் பெறுவார்கள், மக்களும் பயன்பெறுவார்கள். அதே போல் கரும்பு வழங்கும்போது விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களும் பயன் பெறுவார்கள்.

    இந்த பொங்கல் தொகுப்பில் வேட்டி-சேலை திட்டத்தையும், கரும்பையும் இதில் அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட்டில் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்காது.

    முதல்-அமைச்சர் அறிவிக்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் இன்றைக்கு கண்ணீரை வரவழைத்து உள்ளது. அதேபோல் ஆயிரம் ரூபாய் முதல்வர் அறிவித்திருப்பது, யானைபசிக்கு சோ ளப்பொரி போன்றதாகும். அதேபோல் பொங்கல் தொகுப்பில் கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்கள் அனைத்தும் கொடுப்பது மரபு ஆகும் பொங்கல் பொருட்களை குறைத்து விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த அரசு ஆதரவு அளிக்கவில்லை என்பது போல் உள்ளது.

    இன்றைக்கு அம்மாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

    சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இயக்கத்தை ஏழை, எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள்.

    அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.அதற்காக ஏச்சுகளையும், பேச்சுக்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.

    இந்த இயக்கத்தில் ஒன்னரை கோடி தொண்டர்களும் அவருக்கு பின்னால் தான் உள்ளார்கள். இதை பொறுக்க முடியாத சில பேர் இயலாமையால், விரக்தியால் வெளியேறி நாகரிமற்ற பேச்சை பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 ஜோடி ஏழை-எளிய மணமக்களுடன் தனது மகள் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்துகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை நடத்தி வைக்கிறார்

    மதுரை

    50 ஏழை எளிய திருமண ஜோடியுடன் தனது மகள் திருமணத்தையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாளை நடத்துகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இவர், அ.தி.மு.க.வின் மாணவர் அணி, எம் .ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்-இளம்பெண் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளின் தலைமை பொறுப்பை வகித்து ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்.

    தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கட்சி பொறுப்பில் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.

    அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் கடந்த 2016-ம் ஆண்டு 80 ஜோடிகளுக்கும், 2018-ம் ஆண்டு 120 ஜோடிகளுக்கும் ஏராளமான சீர்வரிசைகளுடன் ஜெயலலிதா தலைமையில் திருமணத்தை நடத்தி காட்டியவர் உதயகுமார் எம்.எல்.ஏ.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா கொண்டா ட்டத்தையொட்டி 51 ஜோடி களுக்கு எளிமையான முறையில் திருமணங்களை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை(23ந்தேதி) காலை நடைபெறு கிறது. இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி- முரளி ஆகியோரின் திருமணமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 50 ஏழை எளிய ஜோடிகளுடன் தனது இல்ல திருமணத்தையும் ஆர்.பி. உதயகுமார் நடத்துகிறார்.இதற்காக திருமண புடவைகள், வேட்டிகள், தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகளும் தயாராக உள்ளன.

    இந்த திருமணங்களை நடத்தி வைக்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் திருமணம் நடைபெறும் ஜெயலலிதா கோயில் திடலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அவரை வரவேற்க திருமங்கலம் முதல் டி.குன்னத்தூர் வரை அ.தி.மு.க.வினர் சாலையின் இரு புறங்களிலும் கொடி, தோரணங்களை கட்டி வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவியிலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்நின்று கவனித்து வருகிறார்.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு பிரியதர்ஷினி- முரளி ஆகியோரது திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலை நடைபெறும் திருமண விழாவிலும் தங்கள் வீட்டு திருமண நிகழ்வாக கருதி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    மதுரை

    மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.

    அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.

    எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில். அன்ன தான நிகழ்ச்சி அலங்கா நல்லூர் அருகே உள்ள அரியூரில் நடை பெற்றது.

    அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    1½கோடி தொண்டர்க ளின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம், அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

    தற்போது தேர்தல் ஆணையம் முழுமையாக பொதுக்குழு தீர்மா னங்களை அங்கீகரித்து ள்ளது. இதன் மூலம் எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    மதுரை

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்காக மக்களை குடும்பம், குடும்பமாக பங்கேற்கும் வண்ணம் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாடு லோகோ ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி கே.கே. நகர் பூங்கா அருகே நடைபெற்றது.

    மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமை யில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகி றார்கள். இதனை தொடர்ந்து அம்மா பேரவை யின் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லம் தோறும் இலை மலர மரக்கன்று வழங்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டு விழிப்பு ணர்வுக்காக 2 சக்கர வாகனங்களில் மாநாட்டு லோகோ கொண்ட ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது.தி.மு.க. அரசு விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத் துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெக்கும் வகையில் மாநாடு அமையும். நாள் தோறும் எடப்பாடியார் தி.மு.க. அரசின் செயல் பாடுகளை தோலுரித்துக் காட்டிவருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு சுடசுட உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்டு உள்ளார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.பி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வர இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத், மகளிரணி செயலாளர் லதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூ ராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • எதிர்க்கட்சி தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த ஸ்டாலின். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

    இன்றைக்கு 28 மாத

    தி.மு.க. ஆட்சியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலணி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதில் திருமங்க லத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை காணோம்., அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்க் பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம்.

    அதே போல் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை யும் காணோம். அதேபோல் இந்த செக்கா னூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.இது போன்ற மக்கள் பிரச்சி னையில் எதிர்க்கட்சி தொகு திகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்சினைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி, பதவிக்காக மக்கள் அல்ல.

    99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத் தின் வாயிலாக சவால் விடுகிறேன். மக்கள் மத்தியில் இது குறித்து விவாதிப்போம். அப்படி மக்கள் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் கொண்டார்.
    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி, வலையங்கு ளம், வீரபெருமாள்குளம் சின்ன உலகாணி, பெரிய உலகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் .முருகன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 3லட்சத்திற்கு மேற்பட்ட கழக உறுப்பினர் களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 2 கோடியே 88 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார்.

    ஒவ்வொரு பூத்துகளில் பாசறையில் 50 நபர்களும், மகளிர் அணியில் 50 நபர்க ளையும் சேர்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பூத்துகளுக்கும் 19 நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கழகத்தில் 5 நபர்க ளும், மகளிர் அணி பாசறை அணியில் தலா 5 நபர்களும், தகவல் தொழில்நுட்ப பிரி வில் 2 நபர்களும் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.

    கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடை படுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலகட்டத்தில் தி.மு.க. கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிக்கந்தர் சாவடி தனியார் மண்ட பத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணே சன், மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம் குமார், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செய லாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற பாராளுமன்றத்தேர்தலில் கிங் மேக்கராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    மதுரை

    தேவர் குருபூஜை விழா வில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காலை மதுரை வருகிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பாக வலையங்குளம் டோல்கேட் அருகே சீருடை அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன் னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தேசியமும், தெய்வகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, வீர அஞ்சலி செலுத்த எடப்பாடி யார் வருகிறார். எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது தேவர் குரு பூஜை விழாவின் போது எதிர்க்கட்சிகள், சமய தலை வர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுக ளையும் செய்து கொடுத்தார். அதேபோல் தற்போதும் பாதுகாப்பான ஏற்பாடு களை முதலமைச்சர் செய் வார் என்று மக்கள் நம்புகி றார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என எடப்பாடியார் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் மாளிகை யில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியில் அந்த நபர் பெட்ரோல் குண்டை பொருத்தி அதை வீசும் காட்சி வெளியிடப்பட்டது.

    இப்படி சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் பெட் ரோல் குண்டு வீசி உள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை எடப்பாடியாருக்கு மக்கள் வழங்குவார்கள். அரசியல் கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்கு வார். கால சக்கரம் சூழல்கி றது, அதற்கு ஏற்றாற்போல் எடப்பாடியாருக்கு என்ன பதவி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வரு கின்ற நாடாளுமன்ற தேர்த லின் மூலம் இந்திய ஆளுமை களின் கிங் மேக்கராக எடப் பாடியார் திகழ்வார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • மதுரை வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்குஒன்றிய அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் திருவாலவாயநல்லூர், சி.புதூர், சித்தாலங்குடி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி ஊராட்சிகளில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ கண்ணா, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற, மாநில நிர்வாகி ராம கிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோ கரன், மாநில பேர வை இணை செயலாளர் வெற்றிவேல், மாநில பேரவை துணை செயலாளர் துரை.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்டதுணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க.ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

    மக்களின் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க.தான். முதல்- அமைச்சர் எல்லா குடும்ப தலைவிக்கும் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கி றோம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து விட்டார்கள்.

    இனிவரும் தேர்தல் காலங்களில் கழக செய லாளர்கள் சிப்பாய்களா கவும் பாசறையினர் துணை ராணுவமாக நின்று எதிரி களுக்கு சிம்ம சொப்பனமாக இருப் பார்கள். ஒவ்வொரு பூத்கமிட்டியில் 19 பேர்களும், மகளிர்குழுவில் 25 பேரும், பாசறையினர் 25 பேரும் என்று 69 பேர்கள் ராணுவ சிப்பாய்களாக களம் இறங்கும்போது எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊரட்சி மன்ற தலைவர்கள் ஆலய மணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், துணைத்தலைவர் மாலிக், வி.எஸ்.பாண்டியன், பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், பாலாஜி, சந்திரபோஸ், நாகமணி, மூர்த்தி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடுபாலன் நன்றிகூறினார்.

    ×