search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சிக்கந்தர்சாவடி தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அளவிலான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிக்கந்தர் சாவடி தனியார் மண்ட பத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணே சன், மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம் குமார், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செய லாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×