search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 couples"

    • 50 ஜோடி ஏழை-எளிய மணமக்களுடன் தனது மகள் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்துகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை நடத்தி வைக்கிறார்

    மதுரை

    50 ஏழை எளிய திருமண ஜோடியுடன் தனது மகள் திருமணத்தையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாளை நடத்துகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இவர், அ.தி.மு.க.வின் மாணவர் அணி, எம் .ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்-இளம்பெண் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளின் தலைமை பொறுப்பை வகித்து ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்.

    தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கட்சி பொறுப்பில் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.

    அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் கடந்த 2016-ம் ஆண்டு 80 ஜோடிகளுக்கும், 2018-ம் ஆண்டு 120 ஜோடிகளுக்கும் ஏராளமான சீர்வரிசைகளுடன் ஜெயலலிதா தலைமையில் திருமணத்தை நடத்தி காட்டியவர் உதயகுமார் எம்.எல்.ஏ.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா கொண்டா ட்டத்தையொட்டி 51 ஜோடி களுக்கு எளிமையான முறையில் திருமணங்களை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை(23ந்தேதி) காலை நடைபெறு கிறது. இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி- முரளி ஆகியோரின் திருமணமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 50 ஏழை எளிய ஜோடிகளுடன் தனது இல்ல திருமணத்தையும் ஆர்.பி. உதயகுமார் நடத்துகிறார்.இதற்காக திருமண புடவைகள், வேட்டிகள், தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகளும் தயாராக உள்ளன.

    இந்த திருமணங்களை நடத்தி வைக்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் திருமணம் நடைபெறும் ஜெயலலிதா கோயில் திடலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அவரை வரவேற்க திருமங்கலம் முதல் டி.குன்னத்தூர் வரை அ.தி.மு.க.வினர் சாலையின் இரு புறங்களிலும் கொடி, தோரணங்களை கட்டி வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவியிலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்நின்று கவனித்து வருகிறார்.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு பிரியதர்ஷினி- முரளி ஆகியோரது திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலை நடைபெறும் திருமண விழாவிலும் தங்கள் வீட்டு திருமண நிகழ்வாக கருதி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    ×