என் மலர்
நீங்கள் தேடியது "anant ambani"
- முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
- திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான டிசைனில் உருவான லெஹங்கா உடையுடன், வைர நகைகளை அணிந்துள்ள மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட இத்திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அந்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி, சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி ஜாம் நகரில் நடைபெறுகிறது
- கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக், கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்
இந்தியாவின் நம்பர் 1 கோடீசுவரர் முகேஷ் அம்பானி (66). இவரது நிகர சொத்து மதிப்பு $115 பில்லியனுக்கும் மேல் உள்ளது.

முகேஷ் அம்பானியின் இளைய மகனான 28 வயதான ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி குஜராத் மாநில ஜாம் நகரில் (Jam Nagar) தற்போது நடைபெறுகிறது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 விருந்தினர்கள் பங்கு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக குஜராத் ஜாம் நகரில் வந்து இறங்குகின்றனர்.
முன்னதாக ஜாம் நகர் மக்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த விருந்து உபசாரம் நடைபெற்றது.
ஆசியாவின் முன்னணி கோடீசுவரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்பதால், பல துறை சார்ந்த பிரபலங்களும் ஒரே இடத்தில் குவியும் அரிய நிகழ்வை இந்திய மக்கள் காண்கின்றனர்.
பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, உலக தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பர்க், பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் , ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்.

மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி அதிபர் சுந்தர் பிச்சை, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற பாடகி ரிஹானாவின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு உலகத் தலைவர்கள் வருகை.
- நேரடியாக ஜாம்நகருக்கு வருகை தரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்ட்-க்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்த முகேஷ் அம்பானி- நீடா தம்பதி முடிவு செய்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் உலக தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹான்னா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை தந்தனர்.
அவர்கள் விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும்.
பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்ட்ளது. வழக்கமாக சுமார் ஆறு விமாங்கள் வந்து செல்லும் நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.
- திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் இன்று வரை நடைபெறுகிறது.
- இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
அகமதாபாத்:
தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் தன்னை விடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக கூறினார்.
ஆனந்த் அம்பானியின் பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். முகேஷ் அம்பானி தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
- ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.
- சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
மும்பை:
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும்.
சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இந்த விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் விசேஷமாக தயாரிக்கப்பட்டது. அது என்னவெனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த கவுனை லண்டனைச் சேர்ந்த பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் வடிவமைத்துள்ளார். ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன் வெள்ளை நிற ஷிபான் துணியால் ஆனது.
இதுதொடர்பாக ராதிகா மெர்ச்சண்ட் கூறுகையில், என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த கவுனை என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் காட்டுவேன் என தெரிவித்தார்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- ஆனந்த் அம்பானியிடம் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் அரிய கைக்கடிகாரங்கள் ஏராளமாக உள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வருகிற 12-ந்தேதி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது.
இந்த திருமண விழா 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நெரல் பகுதியில் உள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு சென்றார்.
திருமணத்திற்கு முன் கடவுள் ஆசீர்வாதத்திற்காக கோவிலில் தரிசனம் செய்த அவர் ஹவானி விழா நடத்தினார். அப்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆனந்த் அம்பானியிடம் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் அரிய கைக்கடிகாரங்கள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்றான ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார். இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.6.91 கோடி என கூறப்படுகிறது.
இந்த வகையில் 18 கைக்கடிகாரங்கள் மட்டுமே இதுவரை தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருந்தார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற போது ஆனந்த் அம்பானி உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் ரூ.18 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.
இந்த கைக்கடிகாரத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பார்த்து திகைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
- மகாராஷ்டிராவில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
மும்பை:
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி–நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன.
மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.
- இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
- இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. அதில் ஏராளமான பிரபிலங்கள் கலந்துக் கொண்டனர். தமிழ் மற்றும் இந்தி திரையுலக நடிகர்கள் அதில் கலந்துக் கொண்டனர்.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இவர்களுடன் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் கலந்துக் கொண்டார். அவர் ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் பங்கேற்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஜஸ்டீன் பீபர், ஆனந்த் அம்பானி குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. சங்கீத் விழாவில் ஜஸ்டீன் பீபர் அவரது பிரபலமான பாடல்களான பேபி, பீச்சஸ், லவ் யுவர்செல்ஃப் மற்றும் சாரி போன்ற பாடல்களை பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் 12 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி வரவேற்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.
- அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் இடம்பெருகின்றனர்.
- கடந்த வாரம் 'சங்கீத்' விழாவில் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சி நடத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் கிம் மற்றும் க்ளோ கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் உலக தொழில் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மாதங்களாக நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் இடம்பெற்றுள்ளதாக விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நிதாவும் கடந்த காலங்களில் தங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் ஆடம்பரமான திருமணங்களை நடத்தினர்.
ஆனால் இளையவரின் திருமணம் இருவரது திருமண நிகழ்வுகளையும் மறைத்துவிட்டது. அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ், பிளாக்ராக் இணை நிறுவனர் லேரி ஃபிங்க், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உட்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம், விருந்தினர்கள் இத்தாலியில் உள்ள டைர்ஹெனியன் கடலின் பிரமிக்க வைக்கும் நீலமான கடற்கரையோரம், பிரெஞ்சு மத்தியதரைக் கடலுக்கு ஆடம்பர பயணத்தை மேற்கொண்டபோது, பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், பாடகர் கேட்டி பெர்ரி மற்றும் இத்தாலிய குத்தகைதாரர் ஆண்ட்ரியா போசெல்லி ஆகியோரின் நிகழ்ச்சிகள் வெளிநாட்டிற்குச் சென்றன.
கடந்த வாரம் 'சங்கீத்' விழாவில் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சி நடத்தினார்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த நாட்களில் இரவு விருந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில், கர்தாஷியன்களைத் தவிர, முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் போரிஸ் ஜான்சன் மற்றும் டோனி பிளேர், எதிர்காலவாதி பீட்டர் டயமண்டிஸ், கலைஞர் ஜெஃப் கூன்ஸ், சுய உதவி பயிற்சியாளர் ஜே ஷெட்டி, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் தொடர்பான நிகழ்வுகளில் சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார், தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோரும், பிரியங்கா சோப்ரா-ஜோனாஸ், ஐஸ்வர்யா ராய்-பச்சன், ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி தலைவர் மார்க் டக்கர், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், பிபி தலைமை நிர்வாகி முர்ரே ஆச்சின்க்ளோஸ், ஜிஎஸ்கே பிஎல்சியின் எம்மா வால்ம்ஸ்லி, லாக்ஹீட்டின் ஜிம் டெய்க்லெட், லாக்ஹீட் மார்ட்டினியின் ஜிம் டெய்க்லெட் மற்றும் இன்ஃபான்ட் அதிபர் ஜிம் டெய்க்லெட் ஆகியோர் எதிர்பார்க்கப்படும் கார்ப்பரேட் உலக பிரபலங்களில் அடங்கும்.
கவுதம் அதானி உட்பட பல இந்திய தொழில் அதிபர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாம்நகர் நிகழ்ச்சியில் அதானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
- நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம்.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்துடன் ஹல்திராம்சின் ஆலு பூஜியா, சேவ் உள்ளிட்ட பொருட்கள் நிறைந்த பரிசு தொகுப்பை அம்பானி வழங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் செய்கிறார்.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர்.

திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெட்டியின் உள்ளே ஹல்திராமிஸின் நம்கீனின் நான்கு பாக்கெட்டுகள், இனிப்புப் பெட்டி மற்றும் ஒரு வெள்ளி நாணயம், நம்கீன் பாக்கெட்டுகளில் ஹல்திராமின் ஆலு பூஜியா சேவ் மற்றும் லைட் சிவ்டா ஆகியவை அடங்கும்.
- கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.
மும்பையில் பிறந்து வளர்ந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், இன்று கோலிவுட் உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் ஜோதிகா. இவர் கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே தனது கணவரின் தயாரிப்பில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது பாலிவுட் உலகிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தம்பதிகளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமண விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், இயக்குனர் அட்லி, விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இந்திய திரை உலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது தனது கணவர் சூர்யா அணிவித்த, இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை, அவர்கள் அன்பின் அடையாளமாக இந்த திருமணத்திலும் அணிந்து வந்திருந்தது வெகுவாக பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்த விழாவின் போது சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா பட்டு வேட்டி சட்டையிலும் , ஜோதிகா பிங்க் நிற புடவையிலும் சூர்யாவுடன் இணைந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவி"ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா" சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






