என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த் அம்பானி"

    • வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
    • சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. 2024 இல் பிரதமர் மோடி இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.

    இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

    இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று பரவலாக குற்றசாட்டு எழுந்தது. விலங்குகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில் வந்தாரா மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுகின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

    இந்நிலையில் யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் SIT தனது அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வந்தாரா குஜராத்தின் ஜாம்நகரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
    • சிங்கம், சிறுத்தை, யானை உள்பட 43 வகையான 2000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன.

    புதுடெல்லி:

    தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நடத்தி வரும் 'வந்தாரா' அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

    பிரதமர் மோடி 2024-ல் இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.

    இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

    இதற்கிடையே, வந்தாரா உலகின் மிகப்பெரிய விலங்கு கடத்தல் மையமாக இருக்கலாம் என சில அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜெய சுகின் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு மறுவாழ்வு என்ற பெயரில் வந்தாரா மையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி சுதந்திரமாக விடுவிக்க வேண்டும். வந்தாராவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும். ஏற்கனவே திரிபுரா ஐகோர்ட் அமைத்த வந்தாரா விசாரணைக் குழுவை கலைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராகவும், மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன குழுவில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் உள்ளனர்.

    • துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    ஆதமாபாத்:

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா கோவிலுக்கு 170 கிலோ மீட்டர் நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பலத்த பாதுகாப்புடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இரவில் தான் அவர் அதிகமாக நடந்தார்.


    ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்த நாளுக்கு முன்பு பாதயாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி தனது 170 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

    அதிகாலை அவர் ஸ்ரீ துவாரகா தீவு கோவிலை வந்து அடைந்தார். அவரது கடைசி நாள் யாத்திரையில் தாயார் நீட்டா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சனா ஆகியோர் பங்கேற்றனர்.

    • முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான டிசைனில் உருவான லெஹங்கா உடையுடன், வைர நகைகளை அணிந்துள்ள மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட இத்திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அந்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி, சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ந்தேதி நடக்கிறது.
    • நாளை முதல் மார்ச் 3-ந்தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி (நாளை) முதல் வருகிற மார்ச் 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது.

     இந்த நிலையில் நேற்றிரவு ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்து 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்து அளித்தது.

    முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

    இதன்மூலம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஜாம்நகர் வந்துள்ளார்.

    தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு ராதிகா மெர்ச்சன்ட் உடன் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது மனைவியுடன் ஜாம்நகர் வந்துள்ளார்.

    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மார்க் ஜூக்கர்பர்க் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

    முன்னதாக ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்த அம்பானி குடும்பம், திருமண நிகழ்ச்சிகளின் அங்கமாக 51 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்தது. இதில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

    • முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி ஜாம் நகரில் நடைபெறுகிறது
    • கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக், கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்

    இந்தியாவின் நம்பர் 1 கோடீசுவரர் முகேஷ் அம்பானி (66). இவரது நிகர சொத்து மதிப்பு $115 பில்லியனுக்கும் மேல் உள்ளது.


    முகேஷ் அம்பானியின் இளைய மகனான 28 வயதான ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமணத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி குஜராத் மாநில ஜாம் நகரில் (Jam Nagar) தற்போது நடைபெறுகிறது.

    உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 விருந்தினர்கள் பங்கு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக குஜராத் ஜாம் நகரில் வந்து இறங்குகின்றனர்.

    முன்னதாக ஜாம் நகர் மக்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த விருந்து உபசாரம் நடைபெற்றது.

    ஆசியாவின் முன்னணி கோடீசுவரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்பதால், பல துறை சார்ந்த பிரபலங்களும் ஒரே இடத்தில் குவியும் அரிய நிகழ்வை இந்திய மக்கள் காண்கின்றனர்.

    பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, உலக தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பர்க், பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் , ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்.





    மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி அதிபர் சுந்தர் பிச்சை, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக புகழ் பெற்ற பாடகி ரிஹானாவின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு உலகத் தலைவர்கள் வருகை.
    • நேரடியாக ஜாம்நகருக்கு வருகை தரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்ட்-க்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்த முகேஷ் அம்பானி- நீடா தம்பதி முடிவு செய்தது.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் உலக தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹான்னா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை தந்தனர்.

    அவர்கள் விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும்.

    பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்ட்ளது. வழக்கமாக சுமார் ஆறு விமாங்கள் வந்து செல்லும் நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

    • காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
    • விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஜாம்நகர்:

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர்.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா உள்பட வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


    நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பெண் விருந்தினர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக நீடா அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்து பெண்களும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தனர்.


    காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் ரூ.130 கோடி வாரி இறைக்கப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் நடனமாடி அசத்தினார்கள். முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகாக நடனமாடினார்கள். மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். தோனி, இவாங்கா டிரம்ப் தாண்டியா நடனமாடினார்கள். ரிஹானாவின் பாடல்களை கட்டியது. சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகளே டிரெண்டிங் ஆனது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் அம்பானி இல்ல திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தை பிடித்தன.

    ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. திருமண முன் வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை மாதம் 12-ந்தேதி மும்பையில் திருமண விழா நடைபெற உள்ளது. திருமண விழா இதைவிட இன்னும் பலமடங்கு பிரமாண்டமாக நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது.
    • ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    அதில், "அம்பானி குடும்பத்தின் திருமண விழா, செல்வம் மற்றும் அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. நம் பிரபலங்களும் அங்கு போய் வெட்கமில்லாமல் பங்கேற்பது மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. வெகுஜன ஊடகமும் இந்த நிகழ்ச்சிக்கு ஓடியாடி உழைப்பது, எந்தளவுக்கு ஊடகங்கள் விலை போயிருக்கின்றன என்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜகவினர் தனது X கணக்கில் மோடியின் குடும்பம் என பதிவிட்டு வருவதை பிரசாத் பூஷன் கிண்டல் செய்துள்ளார். தனது X பக்கத்தில் அம்பானி அதானியின் குடும்பம் தான் மோடி என்ற படத்தை பகிர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்று பதிவிட்டுள்ளார்.

    ×