search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padayatra"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது.
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜ.க சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.

    நாராயணபேட்டை தன்வாடா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அதில் தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய மந்திரியமான கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் மதிப்புமிக்க வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்.


    பா.ஜ.க, பி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது. தெலுங்கானா மாநிலத்தில் வரும் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. 17 இடங்களில் வெற்றி பெறும். சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    கடந்த தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் சந்திரசேகர ராவ் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.
    • ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதியாத்திரையை நடத்தி வருகிறார். இதில் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார்.

    தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    அமேதியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு சாலையில் கிடப்பதை பார்த்தேன். அங்கு இரவில் வாத்தியங்கள் முழங்குவதையும் மது அருந்திவிட்டு சாலையில் நடனமாடுவதையும் பார்த்தேன். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.

    மறுபுறம் ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் காணப்படுவார்கள். அங்கு நீங்கள் இந்தியாவின் அனைத்து கோடீஸ்வரர்களையும் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக் கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ராகுல் காந்தி பேசிய இடத்தை கங்கை நீரால் பா.ஜனதாவினர் சுத்தப்படுத்தினர்.


    இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறும் போது, உத்தரபிரதேசத்தின் மீது ராகுல் காந்தியின் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை அவரது கருத்து காட்டுகிறது. வயநாட்டில் உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். ராமர் கோவில் விழாவிற்கான அழைப்பை நிராகரித்தார். தற்போது வாரணாசி மற்றும் உத்தரபிரதேச இளைஞர்கள் குறித்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரசின் எதிர்காலம் இருளில் உள்ளது, ஆனால் உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சோனியா காந்தி தனது மகனை நல்ல முறையில் வளர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவரிடம் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

    ராகுல் காந்தி யாத்திரையை அசாம் முதல்-மந்திரியும் பா.ஜனதாவை சேர்ந்தவருமான ஹிமந்தா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் யாத்திரை எங்கு சென்றாலும் அங்கு காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கிறது. தற்போது உத்தரபிரதேசத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அகிலேஷ் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் இடமெல்லாம் காங்கிரசுக்கு சரிவு ஏற்படுகிறது.

    பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். மோடி கட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் ரோடு ஷோ நடத்துகிறார்கள். ராகுல் காந்தி, இந்த உலகில் பொய்யை தவிர எதுவும் கற்று கொள்ளவில்லை. அவர் பொய்யுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஹிமர்தா சர்மா கூறினார்.

    • 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
    • 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த அவர் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தனது முதல் கட்ட யாத்திரையை காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த யாத்திரையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய பிரபலங்களும் பயணித்தனர். யாத்திரையின் போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் பேசியது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் முதல்கட்ட யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி ரூ.71.8 கோடி செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் மொத்த ஆண்டு செலவின் 15.3 சதவீதமாகும். 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

    அதில், 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது கடந்த 2022-2023-ம் ஆண்டில் ரூ.452 கோடியாக குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அதன் செலவினம் ரூ.400 கோடியில் இருந்து 467 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
    • காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.

    தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
    • தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக வாலிபர்கள் கூறினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் வாலிபர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கிராமத்தில் இருந்து, 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக கூறினர்.

    சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற நிலையில் தற்போது சாம்ராஜ்நகர் மாவட்டம் கோடஹள்ளி கிராமத்தில் இருந்தும் வாலிபர்கள் பாத யாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.

    பல்லடம்:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்,என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் அவர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் பாதயாத்திரை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் வினோத் வெங்கடேஷ்,ஜோதிமணி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வடிவேலன் வரவேற்றார்.

    கூட்டத்தில் பல்லடம் நகருக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலையை சிறப்பான முறையில் வரவேற்பது. பாதயாத்திரையில் நிர்வாகிகள்,தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக அனைவரும் பொதுமக்களுடன் பங்கேற்று பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ்,ஈஸ்வரி செல்வராஜ்,மற்றும் பா.ஜ.க. மாவட்ட,ஒன்றிய ,நகர, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
    • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    வந்தவாசி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

    இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் சொக்கநாதர் பெருமானுடன் எழுந்தருளினார்.
    • தருமபுர ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தரங்கம்பாடி சாலை, மயூரநாதர் சுவாமி கோயில், பட்டமங்கலத்தெரு, வள்ளலார்கோயில் வழியாக பாதயாத்திரையாக திருநன்றியூர் உலகநாயகி சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார்.

    12-ம் தேதி மாலை திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வர ன்கோயில் வைத்தியநா தசுவாமி கோயிலில் சொக்கநாத பெருமானுன் எழுந்தருளினார்.

    அங்கு இரண்டு நாட்கள் தங்கி வழிபாடு நடத்திய பின்னர் நேற்று அங்கிருந்து சீர்காழி புறப்பட்டது.

    சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.

    100 நாதஸ்வர,மேளம் இசைத்தும், கேரள பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயா த்திரை மேற்கொண்டார்.

    பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் ஆதீனம் வழங்கியவாறு சென்றார். நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான்சுவாமிகள், ஆதீன கல்லூரி நிர்வாகத்தினர், சீர்காழி, வைத்தீஸ்வர ன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.

    • விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
    • ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.

    ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.

    ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    காங்கயம் :

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு தைசப்பூசத்தையொட்டி திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை என பல மாவட்டங்களில் இருந்து குழுக்கள், குழுக்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாளை தைப்பூசம் என்பதால், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர், காங்கயம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு த.மு.மு.க., கோம்பை தோட்டம் கிளை சார்பில் டீ, காபி, பால், பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    • தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    பல்லடம் :

    உலகப் புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு, ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.

    இதற்கிடையே இந்த வருட தைப்பூசத்திற்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் தைப்பூசத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர். அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையம் வீரவேல் காவடி குழுவினர் விநாயகர் கோவிலில், பொங்கல் வைத்து

    வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பழனி மலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்கள்.

    இதே போல் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் காவடி குழுவினர், முருகன், விநாயகர், மாகாளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, பின்னர் பாதயாத்திரையாக பழனி மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதே போல, பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பழனி பாதயாத்திரை குழு புறப்பட்டு சென்றது.

    இந்திய விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சந்தித்த இன்னல்கள், வழங்கிய தியாகங்களை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது.
    புதுடெல்லி :

    நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டையொட்டி சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சிறப்பு யாத்திரை டெல்லியில் நேற்று நிறைவடைந்தது. நாடு விடுதலை அடைந்த 75-வது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி மத்திய-மாநில அரசுகள் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டை சிறப்பாக அனுசரித்து வருகிறது. இதில் முக்கியமாக 'சுதந்திரத்தின் கவுரவ யாத்திரை' என்ற பெயரில் சிறப்பு யாத்திரையை ஒருங்கிணைத்தது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கிய இந்த யாத்திரை ராஜஸ்தான், அரியானா வழியாக நேற்று மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள டெல்லி ராஜ்காட்டில் நிறைவடைந்தது.

    அங்கு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். யாத்திரை சென்ற பல்வேறு இடங்களில் இருந்து தொண்டர்கள் சேகரித்து வந்த மண் மற்றும் தண்ணீரை சோனியா பெற்றுக்கொண்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சந்தித்த இன்னல்கள், வழங்கிய தியாகங்களை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது.

    தேசத்தை கட்டியெழுப்ப காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்த யாத்திரையில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 2 மாதங்கள் நடந்த இந்த யாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று பாதயாத்திரையாக நடந்து வந்தனர். இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில்குமார் சவுத்ரி, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதை நோக்கி இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×