search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janhvi Kapoor"

    • மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
    • திருப்பதியில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

    தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



    இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர்.

    ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில் மும்பையில் 'மைதான்' படத்தின் 'பிரிமியர் ஷோ' வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.




    மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார்
    • 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர்.பல்வேறு இந்தி, தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக ஜான்விகபூர் திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் ஜான்விகபூர் -ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார்.இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி பல ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்தனர். ஜான்விகபூர் - ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்களில் ஜோடியாக காணப்பட்டு வந்தனர்.




    சமீபத்தில் ஜான்வி கபூரின் 27- வது பிறந்தநாளை யொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர்.இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.

    இந்நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார். அதுகுறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி உள்ளார்.

    அப்போது 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார்.
    • ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.

    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

    ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.

    அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.

    பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.

    ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

     

     

    விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
    • ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்


     



    ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

    முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

     


     




     



    ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்
    • ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன

    இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ஆர்.சி. 16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

    இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

    இப்படத்தின் பூஜை தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    தற்போது ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார்.
    • இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும்.

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து நடித்து வருகிறார்.

    இவரது படங்கள் பல வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் அவரது நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

    தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது. 

    இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
    • நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

    நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டில் 'தடாக்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்து ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படத்தில்ஜோடி சேர்ந்து நடித்தார்.

    இந்தநிலையில் ஜான்வி கபூர் கூறியதாவது:-

    தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது. தற்போது டப்பிங் படங்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் மொழி ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதனால் நல்ல கதைகள் தலைப்புகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

    நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அப்போதுதான் என்னுடைய நடிப்பு திறமையை கண்காணிக்க முடியும். சினிமாவில் நல்ல முறையில் நடனம் ஆடவும், நகைச்சுவை பண்ணவும் ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமாவில் தான் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருக்கு அங்கு அன்பும் கிடைத்தது. எனது தகுதியை நிரூபிக்க இதுதான் சரியான நேரம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்’.
    • இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்'. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி ஆகியோர் நடித்துள்ளனர்.


    தி லிட்டில் மெர்மெய்ட்

    ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இவள் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஜான்வி கபூர்

    இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தனது இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




    மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sridevi #JanhviKapoor
    மும்பை:

    மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ‘சாய்ரத்’ ஆகும். இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.

    இப்போது இந்தப் படம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி, நடிகர் இஷான் கட்டார் இணைந்து நடித்து ‘தடக்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது. சஷாங் கைத்தான் இயக்கத்தில் எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படம் வரும் 20-ந்தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை பிரபலம் ஆக்கும் வகையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான ஜானவி கபூரும், நாயகனான இஷான் கட்டாரும் கலந்துகொண்டனர்.

    அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவர்களிடம், “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

    அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே ஜானவி சுதாரித்துக்கொண்டார். “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

    அதைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.   #Sridevi #JanhviKapoor
    ×