search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anand Ambani"

    • பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை
    • பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்

    அண்மையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடினார்.

    இந்நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், அதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் நடனமாட அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், அம்பானி இல்ல திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடியதை குறிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அதில், "நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனையோ முறை எனக்கு ஆசைகாட்டப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை. பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் கங்கனா இந்த மாதிரி சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிது இல்லை.

    இதற்கு முன்பும் கூட, "ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். அண்மையில் லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்" என கங்கனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, அவரின் மனைவி கியாரா அத்வானி உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் ராதிகா மெர்சண்ட் என்பவரை திருமணம் செய்யப்போகிறார். ராதிகா மெர்சண்ட் பிரபல நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் தொழில் சக்கரவர்த்தியான விரேனின் மகள். கடந்த சில நாட்களாக ஜாம் நகரில் pre wedding Event கோலாகலமாகவும். மிகவும் பிரமாண்டமாகவும் நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரபலங்களான மார்க் ஸூக்கர்பெர்க், நடிகர்கள் ரஜினி, சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் ஆகியோர் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, அவரின் மனைவி கியாரா அத்வானி, பாலிவுட் நடிகர் கரீனா கபூர் அவரது கணவரான சயீப் அலிகான், பாலிவுட் நடிகர் விக்கி கவ்ஷல் மற்றும் அவரின் மனைவியான கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் ரன்பீர் கபூரும் மற்றும் அவரின் மனைவியான ஆலியா பட்டும் கலந்து கொண்டனர்.

    பாலிவுட்டில் பச்சன் ஃபேமிலி என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யா ராய் மற்றும் இன்னும் பல பாலிவுட் நட்சத்திரங்களும் ஆனந்த் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் நேற்று நடந்த மஹா ஆர்த்தி விழாவில் விளையாட்டு வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் இயக்குநர் அட்லீ பங்கேற்றனர். தோனி குடும்பத்துடன் இயக்குநர் அட்லீ மற்றும் அவரின் மனைவி ப்ரியா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    • ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது.
    • ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    அதில், "அம்பானி குடும்பத்தின் திருமண விழா, செல்வம் மற்றும் அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. நம் பிரபலங்களும் அங்கு போய் வெட்கமில்லாமல் பங்கேற்பது மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. வெகுஜன ஊடகமும் இந்த நிகழ்ச்சிக்கு ஓடியாடி உழைப்பது, எந்தளவுக்கு ஊடகங்கள் விலை போயிருக்கின்றன என்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜகவினர் தனது X கணக்கில் மோடியின் குடும்பம் என பதிவிட்டு வருவதை பிரசாத் பூஷன் கிண்டல் செய்துள்ளார். தனது X பக்கத்தில் அம்பானி அதானியின் குடும்பம் தான் மோடி என்ற படத்தை பகிர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
    • விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஜாம்நகர்:

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர்.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா உள்பட வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


    நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பெண் விருந்தினர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக நீடா அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்து பெண்களும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தனர்.


    காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் ரூ.130 கோடி வாரி இறைக்கப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் நடனமாடி அசத்தினார்கள். முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகாக நடனமாடினார்கள். மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். தோனி, இவாங்கா டிரம்ப் தாண்டியா நடனமாடினார்கள். ரிஹானாவின் பாடல்களை கட்டியது. சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகளே டிரெண்டிங் ஆனது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் அம்பானி இல்ல திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தை பிடித்தன.

    ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. திருமண முன் வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை மாதம் 12-ந்தேதி மும்பையில் திருமண விழா நடைபெற உள்ளது. திருமண விழா இதைவிட இன்னும் பலமடங்கு பிரமாண்டமாக நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஜாம்நகர் வந்துள்ளார்.

    தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு ராதிகா மெர்ச்சன்ட் உடன் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது மனைவியுடன் ஜாம்நகர் வந்துள்ளார்.

    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மார்க் ஜூக்கர்பர்க் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

    முன்னதாக ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்த அம்பானி குடும்பம், திருமண நிகழ்ச்சிகளின் அங்கமாக 51 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்தது. இதில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

    ×