என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள்"

    • சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காசாவுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.
    • அதன் ஒருபகுதியாக, இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலும் நடத்துகின்றனர்.

    பெர்லின்:

    இஸ்ரேல்-காசா போரில் காசாவுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலும் நடத்துகின்றனர். எனவே ஏமன், லெபனானுக்கு எதிராகவும் இஸ்ரேல் போரை அறிவித்தது.

    இதற்கிடையே, கடந்த மாதம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள வாகன நிறுத்துமிடம் தீப்பிடித்து 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி ஜெர்மனி-டெல் அவிவ் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் டெல் அவிவ் நகருக்கு விமான சேவையை தொடங்க உள்ளதாக ஜெர்மனியின் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும், போர் பதற்றம் காரணமாக காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச்சில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இன்று மூட உத்தரவிடபட்டுள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    • இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட சர்வதேச வான்வழி தடத்தில் சேவைகளை நடத்தி வருகிறது.

    காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானும் பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதாக கூறி இந்திய விமானங்கள் தங்களது வான் பகுதியை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

    வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைகளை பயன்படுத்தி செல்லும். சமீபத்தில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது கூட பாகிஸ்தான் வான்வழியாகத்தான் சென்றார்.

    ஆனால் தற்போது பாகிஸ்தான் இதற்கு தடை விதித்து இருப்பதால் அந்த நாட்டின் வான் எல்லையை இந்திய விமானங்கள் தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் வான் எல்லைக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டு இந்திய விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளன.

    நேற்று முதல் இந்திய விமானங்கள் இந்த புதிய முறையை கடைபிடிக்க தொடங்கி உள்ளன. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகள் விமானங்களில் கூடுதல் நேரம் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

    குறிப்பாக ஒன்றரை மணி நேரம் முதல் சுமார் 2 மணி நேரம் வரை கூடுதலாக விமானங்களில் பயணிகள் இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.

    பயணிகள் சிரமம் தவிர விமான சேவையை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதல் எரிப்பொருள் பயன்படுத்த வேண்டியது இருப்பதால் அதிக இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்ப்பதற்காக இண்டிகோ விமான நிறுவனம் வருகிற 7-ந்தேதி வரை சில வெளிநாட்டு சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரபிக்கடல் வான் வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் முன் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விமான சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ நிறுவனம் வடமாநிலங்களில் இருந்து பாகிஸ்தான் வான் வழியாக 50-க்கும் மேற்பட்ட சர்வதேச வான்வழி தடத்தில் சேவைகளை நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தில்தான் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வருகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் தனது வான் வழியை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.

    இதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், அகசாஏர் ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன. அந்த சமயத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.550 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருந்தது.

    தற்போது பாகிஸ்தான் வான் எல்லையை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு கணிசமாக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

    • ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. எனவே ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறாக பாய்ந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    • திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் காலை 6.20மணி, 9.25மணி, மதியம் 12.30மணி, மாலை 6.40 மணிக்கும், இதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, மாலை 3மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று, இந்த 8 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கும், சிறப்பு பெரிய ரக விமானத்தை விமான நிறுவனம் இயக்குவதாகவும், விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
    • பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

    அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

    • மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.
    • அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    • நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன.
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை.

    கொல்கத்தா:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில் அவை வெறும் புரளி என்பது உறுதியானது.

    சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள 23 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொல்கத்தாவில் 10 பெரிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதில் பெரும்பாலான ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்து கொண்டவை. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-மெயில் மூலம் புனை பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டுகளை கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் வெடிக்கும். உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கூறப்பட்டிருந்தது.

    அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஓட்டல்களுக்கு நேற்று மதியம் 12.45 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கான்டென் என்ற பெயரில் இ-மெயில் மூலம் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    அதில் 10 ஓட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அது சில மணி நேரத்தில் வெடித்து விடும். இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஓட்டல்களை காலி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.

    உடனடியாக வெடி குண்டு செயலிழக்கும் படையினர் மூலம் ஓட்டல் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் சோதனை நீடித்த நிலையில் ஓட்டல்களில் சந்தேகத்திற் கிடமாக எதுவும் சிக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதே போல திருப்பதியி லும் 3 ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை தொடர்புபடுத்தி இந்த மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டல் அறைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில் மிரட்டல் வீண் புரளி என தெரியவந்தது. மேலும் ஜாபர் சாதிக் பெயரில் போலியான இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை வெடித்து சிதறியது.
    • சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவை அவ்வப்போது வெடித்து சிதறி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    அந்தவகையில் மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை வெடித்து சிதறியது. இதில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறியன. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    இதனையடுத்து ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ×